search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Villagers struggle"

    • திருவண்ணாமலை-கள்ளக்குறிச்சி சாலையில் போக்குவரத்து பாதிப்பு
    • உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

    திருவண்ணாமலை:

    வாணாபுரம் அருகே உள்ள இளையாங்கன்னி வடக்கு தெருவை சேர்ந்தவர் ஜெபஸ் டின் (வயது 52). கூலித்தொழிலாளி. இவரது மனைவி குழந் தைமேரி.இவர்களுக்கு 3 மகள் களும், ஒரு மகனும் உள்ளனர். நேற்று ஜெபஸ்டின் இ ளை யாங்கன்னி அருகே தொண் டாமனூர் பகுதியில் உள்ள ராமசாமி என்பவரின் நிலத் தில் கரும்பு வெட்டுவதற்காக சென்றார்.

    அங்கு கரும்பு வெட்டும் போது அறுந்து கிடந்த மின் கம்பி ஜெபஸ்டின் மீது உரசிய தாக கூறப்படுகிறது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம் பவ இடத்திலேயே பரிதாப மாக உயிரிழந்தார்.

    இதுகுறித்த தகவலின் பேரில் வாணாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சௌந்தரராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசா ரணை நடத்தினர்.

    அப்போது சம்பவ இடத் திற்கு மின்துறை அதிகாரிகள் வர வேண்டும் என்று ஜெபஸ் டினின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி னர்.

    காலை 9 மணிக்கு சம்பவம் நடந்த நிலையில் மின்துறை அதிகாரிகள் பகல் 12 மணி வரை யாரும் வராததால் ஆத்திரம் அடைந்த ஜெபஸ்டி னின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் உடலை பெருந் துறைப்பட்டு துணை மின் நிலையத்தின் முன்பு கள்ளக் குறிச்சி-திருவண்ணா மலை சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டனர்.

    போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் சாலை மறியலை கைவிடவில்லை, இதனைய டுத்து கிராமிய துணை போலீஸ் சூப்பிரண்டு அஸ் வினி மற்றும் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி, தண்டராம்பட்டு தாசில்தார் பரிமளா, வாணா புரம் வருவாய் ஆய்வாளர் காளீஸ்வரி ஆகியோர் அங்கு வந்து ஜெபஸ்டின் உறவினர்க ளிடம் பேச்சுவார்த்தை நடத் தினர். ஆனால் தொடர்ந்து சமாதானம் ஆகாத உறவினர் கள் பெருந்துறைப்பட்டு துணை மின் நிலையத்தின் முன்பு முற்றுகை போராட் டத்திலும் ஈடுபட்டனர். தொடர்ந்து சம்பந்தப்பட்ட வர்கள் மீது நடவடிக்கை எடுப்பது மட்டுமல்லாமல் உயிரிழந்தவர்களின் குடும்பத் திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று உறவினர் கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகா ரிகள் கூறினர். அதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    பின்னர் ஜெபஸ்டினின் உடல் பிரேத பரிசோதனைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவத்தால் அந்த பகு தியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • நிற்காமல் சென்றதால் ஆத்திரம்
    • நடவடிக்கை எடுப்பதாக அதிகாரி உறுதி

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை - வேலுார் செல்லும் தேசிய நெடுஞ் சாலையில் ஊசாம்பாடி கிராமம் உள்ளது. இங்கு 6 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இவர்கள் எல்லா தேவைகளுக்கும் 10 கி.மீ. தொலைவில் உள்ள திருவண்ணாமலைக்குதான் செல்லவேண்டும்.

    நேற்று மதியம் வேலுாரிலிருந்து திருவண்ணாமலைக்கு வந்த அரசு பஸ் திடீரென நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, கண்டக்டருக் கும், பயணிகளுக்கும் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. தகராறு முற்றியதால் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    அதன்பிறகே திருவண் ணாமலை தாலுகா போலீ சார் அங்கு வந்து, சுதந்திர தினத்தன்று கூட மறியலில் ஈடுபட்டால் எப்படி? மேலும் சாலையின் இரு புறமும் பல கி.மீ. தொலை வுக்கு போக்குவரத்து பாதிக் கப்பட்டுள்ளது என கூறினர்.

    ஊசாம் பாடியைச் சேர்ந்த 5 பேர் போளூரில் பஸ் ஏறி ஊசாம் பாடிக்கு டிக்கெட் எடுத் துள்ளனர். அப்போது கண் டக்டர், "அங்கு பஸ் நிற்காது, டிரைவரிடம் போய் சொல்லுங்கள்" என கூறியுள்ளார்.

    "டிக்கெட் வாங்கியது நீங்கள்தான். நாங்கள் ஏன் டிரைவரிடம் சொல்ல வேண்டும்?" என தகராறு செய்ததால், ஊசாம்பாடி யில் பஸ் நிறுத்தப்பட்டது என்பது தெரியவந்தது.

    இதையடுத்து, "பிரச் னைக்கு உள்ளான பஸ்சை மட்டும் நிறுத்துங்கள். மற்ற வாகனங்கள் செல்லட்டும்"என போலீசார் கூறினர்.

    அதை ஏற்று, 225 நம்பர் பஸ்சை மட்டும் சிறை பிடித்த மக்கள், மற்ற வாக னங்கள் செல்ல அனுமதித்தனர்.

    அதன்பிறகே, திருவண்ணாமலை போக்குவரத்து அலுவல கத்திலிருந்து டிப்போ மேலாளர் கலைச்செல்வன் மதியம் 2.30 மணிக்கு அங்கு வந்தார்.

    தொடர்ந்து, "நாளையி லிருந்து (இன்று) 225 என்ற எண் கொண்ட' எல்லா பஸ்களும் ஊசாம்பாடியில் கட்டாயமாக நின்று செல்லும். அப்படி நிற்கா மல் செல்லும் பஸ்கள் மீது என்னிடம் புகார் அளிக்கலாம். அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பேன் என்றார். அதை ஏற்று அரசு பஸ்சை மக்கள் விடுவித்தனர்.

    மொரப்பூர் அருகே புதிய மதுக்கடையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
    மொரப்பூர்:

    தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே உள்ள கீழ் மொரப்பூரில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் நேற்று முன்தினம் திடீரென புதிதாக மதுக்கடை திறக்கப்பட்டது. இந்த பகுதியில் மதுக்கடை திறக்கப்பட்டதை அறிந்து கிராமமக்கள் ஆத்திரம் அடைந்தனர்.

    இந்தநிலையில் நேற்று ஊழியர்கள் மதுக்கடையை திறக்க வந்தனர். மதுக்கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்தும், கடையை மூடக்கோரியும் சொக்கலிங்கம் தலைமையில் கீழ் மொரப்பூர், பறையப்பட்டி, தாமரைகோழியம்பட்டி ஆகிய கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் கடையை முற்றுகையிட முயன்றனர். இதுகுறித்து ஊழியர்கள் மொரப்பூர் போலீசாருக்கும், அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து தர்மபுரி டாஸ்மாக் மேலாளர் சிவசுப்பிரமணியன், போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தவேல் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். புதிய மதுக்கடையால் மாணவிகள் மற்றும் பெண்களுக்கு இடையூறு ஏற்படும் என்றும். இந்த கடையை மூட வேண்டும் என்று வலியுறுத்தினர். இதுதொடர்பாக கலெக்டருடன் ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

    இதையடுத்து கிராமமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் கடையில் இருந்த மதுபாட்டில்களை அதிகாரிகள் லாரியில் ஏற்றி எடுத்து சென்றனர். மதுக்கடையை மூடக்கோரி கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
    கூத்தாநல்லூர் அருகே செருவாமணியில் இருந்து மின்வினியோகம் வழங்கக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுதொடர்பாக 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    கூத்தாநல்லூர்:

    திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள மாரங்குடி ஊராட்சியில் உள்ள தாமரைப்பள்ளம் கிராமத்திற்கு ஏற்கனவே சென்ற மின் பாதையை மாற்றி செருவாமணியில் இருந்து மின்வினியோகம் வழங்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோட்டூர் ஒன்றிய செயலாளர் அந்தோணி தலைமையில் கிராம மக்கள், செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த தனித்துணை கலெக்டர் (நிலம்) பால்துரை, சமுக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் அன்பழகன், கச்சனம் இளம்மின் பொறியாளர் திருஞானம், வடபாதிமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் கலெக்டரிடம் கோரிக்கை குறித்து மனு அளிக்குமாறு அதிகாரிகள் கூறியதின் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இதுகுறித்து வடபாதி மங்கலம் போலீசார் விடுதலை சிறுத்தைகள் கோட்டூர் ஒன்றிய செயலாளர் அந்தோணி உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×