search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பஸ்சை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்
    X

    அரசு பஸ்சை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்

    • நிற்காமல் சென்றதால் ஆத்திரம்
    • நடவடிக்கை எடுப்பதாக அதிகாரி உறுதி

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை - வேலுார் செல்லும் தேசிய நெடுஞ் சாலையில் ஊசாம்பாடி கிராமம் உள்ளது. இங்கு 6 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இவர்கள் எல்லா தேவைகளுக்கும் 10 கி.மீ. தொலைவில் உள்ள திருவண்ணாமலைக்குதான் செல்லவேண்டும்.

    நேற்று மதியம் வேலுாரிலிருந்து திருவண்ணாமலைக்கு வந்த அரசு பஸ் திடீரென நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, கண்டக்டருக் கும், பயணிகளுக்கும் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. தகராறு முற்றியதால் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    அதன்பிறகே திருவண் ணாமலை தாலுகா போலீ சார் அங்கு வந்து, சுதந்திர தினத்தன்று கூட மறியலில் ஈடுபட்டால் எப்படி? மேலும் சாலையின் இரு புறமும் பல கி.மீ. தொலை வுக்கு போக்குவரத்து பாதிக் கப்பட்டுள்ளது என கூறினர்.

    ஊசாம் பாடியைச் சேர்ந்த 5 பேர் போளூரில் பஸ் ஏறி ஊசாம் பாடிக்கு டிக்கெட் எடுத் துள்ளனர். அப்போது கண் டக்டர், "அங்கு பஸ் நிற்காது, டிரைவரிடம் போய் சொல்லுங்கள்" என கூறியுள்ளார்.

    "டிக்கெட் வாங்கியது நீங்கள்தான். நாங்கள் ஏன் டிரைவரிடம் சொல்ல வேண்டும்?" என தகராறு செய்ததால், ஊசாம்பாடி யில் பஸ் நிறுத்தப்பட்டது என்பது தெரியவந்தது.

    இதையடுத்து, "பிரச் னைக்கு உள்ளான பஸ்சை மட்டும் நிறுத்துங்கள். மற்ற வாகனங்கள் செல்லட்டும்"என போலீசார் கூறினர்.

    அதை ஏற்று, 225 நம்பர் பஸ்சை மட்டும் சிறை பிடித்த மக்கள், மற்ற வாக னங்கள் செல்ல அனுமதித்தனர்.

    அதன்பிறகே, திருவண்ணாமலை போக்குவரத்து அலுவல கத்திலிருந்து டிப்போ மேலாளர் கலைச்செல்வன் மதியம் 2.30 மணிக்கு அங்கு வந்தார்.

    தொடர்ந்து, "நாளையி லிருந்து (இன்று) 225 என்ற எண் கொண்ட' எல்லா பஸ்களும் ஊசாம்பாடியில் கட்டாயமாக நின்று செல்லும். அப்படி நிற்கா மல் செல்லும் பஸ்கள் மீது என்னிடம் புகார் அளிக்கலாம். அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பேன் என்றார். அதை ஏற்று அரசு பஸ்சை மக்கள் விடுவித்தனர்.

    Next Story
    ×