search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்சாரம் தாக்கி பலியான தொழிலாளி உடலை நடுரோட்டில் வைத்து கிராம மக்கள் போராட்டம்
    X

    மின்சாரம் தாக்கி பலியான தொழிலாளி உடலை நடுரோட்டில் வைத்து கிராம மக்கள் போராட்டம்

    • திருவண்ணாமலை-கள்ளக்குறிச்சி சாலையில் போக்குவரத்து பாதிப்பு
    • உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

    திருவண்ணாமலை:

    வாணாபுரம் அருகே உள்ள இளையாங்கன்னி வடக்கு தெருவை சேர்ந்தவர் ஜெபஸ் டின் (வயது 52). கூலித்தொழிலாளி. இவரது மனைவி குழந் தைமேரி.இவர்களுக்கு 3 மகள் களும், ஒரு மகனும் உள்ளனர். நேற்று ஜெபஸ்டின் இ ளை யாங்கன்னி அருகே தொண் டாமனூர் பகுதியில் உள்ள ராமசாமி என்பவரின் நிலத் தில் கரும்பு வெட்டுவதற்காக சென்றார்.

    அங்கு கரும்பு வெட்டும் போது அறுந்து கிடந்த மின் கம்பி ஜெபஸ்டின் மீது உரசிய தாக கூறப்படுகிறது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம் பவ இடத்திலேயே பரிதாப மாக உயிரிழந்தார்.

    இதுகுறித்த தகவலின் பேரில் வாணாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சௌந்தரராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசா ரணை நடத்தினர்.

    அப்போது சம்பவ இடத் திற்கு மின்துறை அதிகாரிகள் வர வேண்டும் என்று ஜெபஸ் டினின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி னர்.

    காலை 9 மணிக்கு சம்பவம் நடந்த நிலையில் மின்துறை அதிகாரிகள் பகல் 12 மணி வரை யாரும் வராததால் ஆத்திரம் அடைந்த ஜெபஸ்டி னின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் உடலை பெருந் துறைப்பட்டு துணை மின் நிலையத்தின் முன்பு கள்ளக் குறிச்சி-திருவண்ணா மலை சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டனர்.

    போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் சாலை மறியலை கைவிடவில்லை, இதனைய டுத்து கிராமிய துணை போலீஸ் சூப்பிரண்டு அஸ் வினி மற்றும் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி, தண்டராம்பட்டு தாசில்தார் பரிமளா, வாணா புரம் வருவாய் ஆய்வாளர் காளீஸ்வரி ஆகியோர் அங்கு வந்து ஜெபஸ்டின் உறவினர்க ளிடம் பேச்சுவார்த்தை நடத் தினர். ஆனால் தொடர்ந்து சமாதானம் ஆகாத உறவினர் கள் பெருந்துறைப்பட்டு துணை மின் நிலையத்தின் முன்பு முற்றுகை போராட் டத்திலும் ஈடுபட்டனர். தொடர்ந்து சம்பந்தப்பட்ட வர்கள் மீது நடவடிக்கை எடுப்பது மட்டுமல்லாமல் உயிரிழந்தவர்களின் குடும்பத் திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று உறவினர் கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகா ரிகள் கூறினர். அதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    பின்னர் ஜெபஸ்டினின் உடல் பிரேத பரிசோதனைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவத்தால் அந்த பகு தியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×