search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vellore rain"

    • சம்பத் நகர், திடீர் நகர் பகுதியில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் மேயர் சுஜாதா, மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
    • பொக்லைன் எந்திரம் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணிகளை துரிதப்படுத்தினர்.

    வேலூர்:

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது.

    வேலூர் மாவட்டத்தில் நேற்று இரவு இடியுடன் கூடிய மழை பெய்தது. அதிகபட்சமாக வேலூர் வேலப்பாடி பகுதியில் 80 மில்லி மீட்டர் மழை பதிவானது. காட்பாடி பொன்னை வேலூர் மாநகரப் பகுதியில் இடியுடன் கூடிய பலத்த மழை கொட்டியது.

    வேலூர் மாநகரப் பகுதியில் கனமழை காரணமாக நிக்கல்சன் கால்வாயில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    இதன் காரணமாக கோட்டை பின்புறம் நிக்கல்சன் கால்வாய் ஒட்டி அமைந்துள்ள சம்பத் நகர், திடீர் நகர், கன்சால் பேட்டை, இந்திராநகர் ஆகிய பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. இங்குள்ள 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது. அங்கிருந்த பொதுமக்கள் இரவு முழுவதும் தூங்காமல் தவித்தனர். கால்வாய் ஒட்டி அமைந்துள்ள மாங்காய் மண்டி வளாகத்தில் இடுப்பளவிற்கு தண்ணீர் தேங்கி குளம் போல காட்சி அளித்தது. வேலூர் கோட்டை மைதானங்களில் தண்ணீர் தேங்கி குளம் போல காட்சி அளிக்கின்றன.

    சம்பத் நகர், திடீர் நகர் பகுதியில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் மேயர் சுஜாதா, மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    பொக்லைன் எந்திரம் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணிகளை துரிதப்படுத்தினர்.

    கால்வாயில் நீர்வரத்து குறையாததால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் மெதுவாகவே வடியத் தொடங்கியது.

    மேலும் இரவு மழை பெய்த போது திருப்பதி தேவஸ்தான சந்திப்பு, தெற்கு போலீஸ் நிலையம் வேலூர் புதிய பஸ் நிலையம் பகுதிகளில் சாலைகளில் ஆற்று வெள்ளம் போல தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக அவதி அடைந்தனர்.

    பருவமழைக்கு முன்பே வேலூரில் மழை வெள்ள பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கி விட்டது.

    லேசான மழை பெய்த உடனே சாலைகளில் மழை வெள்ளம் தேங்கி சாக்கடையுடன் கலந்து ஓடுகிறது. இதனை தடுக்க பருவமழைக்கும் முன்பாக கால்வாய் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. சோளிங்கரில் அதிகரிக்கமாக 142 மில்லி மீட்டர் மழை பதிவானது. அதே போல் வாலாஜாவில் 109.7 மில்லி மீட்டர் மழை பதிவானது.

    இந்த பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. காவேரிப்பாக்கம் ஆற்காடு அம்மூர் கலவை பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அரக்கோணத்தில் லேசான சாரல் மழை பெய்தது.

    இதனால் நீர்நிலைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டது. தாழ்வான பகுதிகளில் அதிக அளவு மழை தண்ணீர் தேங்கியுள்ளது. ஏற்கனவே ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் போதுமான அளவு நீர் இருப்பு உள்ளது.

    மேலும் மழை காரணமாக அதிகரித்துள்ளதால் ஏரிகள் விரைவில் நிரம்பி வருகிறது. விவசாய பணிகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளன.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர், திருப்பத்தூர் நகர பகுதியில் பரவலாக மழை பெய்தது. மற்ற இடங்களில் மழை பெய்யவில்லை.

    வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

    வேலூர்-28.7, குடியாத்தம்-9.2, காட்பாடி-37, மேல்ஆலத்தூர்-13.2, பொன்னை-41.6, திருவலம்-18.1, ஆற்காடு-73.2, அரக்கோணம்-16.6, காவேரிப்பாக்கம்-77, சோளிங்கர்-142, வாலாஜா-109.7,கலவை-40.2, அம்மூர்-39, ஆம்பூர்-27.4, திருப்பத்தூர்-32.

    வேலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு பருவ மழை பெய்ய தொடங்கவில்லை. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். #GajaStorm

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் 2015-ம் ஆண்டு பலத்த மழை காரணமாக பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மாவட்டம் முழுவதும் பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 519 ஏரிகள் நிரம்பியது.

    மோர்தானா, ஆண்டியப்பனூர் உள்ளிட்ட அணைகளும் நிரம்பின.

    இதனால் விவசாயி பணிகள் துரிதமாக நடந்தது. விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாத தொடக்கத்தில் மழை பெய்ய தொடங்கியது. மேலும் கர்நாடகா, ஆந்திராவில் மழைகாரணமாக தடுப்பணைகள் நிரம்பி பாலாற்றில் வெள்ளம் வந்தது.

    அக்டோபர் மாத இறுதியில் 150-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி வழிந்தன. காவேரிப்பாக்கம் ஏரி நிரம்பி கோடி போனது. பல இடங்களில் கிடா வெட்டி பொதுமக்கள் பூஜை செய்தனர்.

    ஆனால் இந்த ஆண்டு இதுவரை போதிய மழை பெய்யவில்லை. மாவட்டம் முழுவதும் உள்ள ஏரி, குளங்கள் வறண்டு விட்டன. சில ஏரிகளில் 25 சதவீத தண்ணீர் உள்ளது.

    செப்டம்பர் மாத இறுதியில் பெய்த மழையை நம்பி பயிரிட்ட வேர்க்கடலை பயிர்கள் கருகின. இதனால் விவசாயிகள் கடும் நஷ்டம் அடைந்தனர்.

    இந்த நிலையில் கஜாபுயல் சென்னை, கடலூர் வழியாக கரையை கடக்கும் என முதலில் அறிவிக்கபட்டது. இதனால் வேலூர் மாவட்டத்தில் மழை பெய்யும் என விவசாயிகள் எதிர்பார்த்தனர்.

    நேற்று காலையில் மந்தமான தட்ப வெப்ப நிலை நிலவியது. லேசான சாரல் மழை பெய்ய தொடங்கியது. இதனால் பலத்த மழை பெய்யும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

    அரக்கோணம் பகுதியில் மட்டும் பரவலாக மழை பெய்தது. மற்ற இடங்களில் தூரலுடன் நின்ற விட்டது. தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் வேலூர் மாவட்டத்தில் மழை இல்லாததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    மழை பொய்த்து வருவதால் இந்த ஆண்டு வறட்சி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. #GajaStorm


    வேலூரில் நேற்று பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    வேலூர்:

    வேலூர், திருவண்ணா மலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்தது. நேற்று மாலை முதல் பரவலாக மழை பெய்ய தொடங்கியது.இரவிலும் தொடர்ந்து மழை பெய்தது. விடிய விடிய பெய்த மழை காலையிலும் நீடித்து பெய்தது.

    ஆற்காடு பகுதியில் அதிகபட்சமாக 30 மில்லி மீட்டர் மழை பதிவானது. அரக்கோணத்தில் தொடர்ந்து மழை பெய்ததால் பஸ் நிலையம் பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளது. வேலூரில் இன்று காலை பலத்த மழை பெய்தது. பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், அலுவலகத்திற்கு செல்பவர்கள் மிகுந்த சிரமப்பட்டனர்.

    தொடர்ந்து வேலூரில் மழை பெய்து கொண்டே இருந்தது. கிரீன் சர்க்கிளில் இருந்து புதிய பஸ் நிலையம் செல்லும் சாலையோரம் குளம்போல் மழைநீர் தேங்கி கிடக்கிறது. மேலும் தாழ்வான பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

    வாணியம்பாடி, ஆம்பூர், அரக்கோணம், காட்பாடி பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தபடி சென்றனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு பகுதியில் பலத்த மழை கொட்டியது. திருவண்ணாமலை, போளூர், தண்டராம்பட்டு பகுதியில் பலத்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்த ஓடியது.மற்ற இடங்களில் பரவலாக மழை பெய்தது.

    திருவண்ணாமலை மகா தீப மலை முழுவதும் மேக கூட்டங்கள் தவழ்ந்து செல்கின்றன. இந்த காட்சி ரம்மியமாக உள்ளது. இதேபோல ஜவ்வாது மலை பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மலையில் நீருற்றுகள் ஏற்பட்டுள்ளன.

    வேலூர், திருவண்ணா மலை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    வேலூர், திருவண்ணா மலை மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

    வேலூர்- 12.1

    ஆம்பூர்- 22.4

    வாணிய ம்பாடி-10.6

    ஆலங் காயம்- 9.2

    காவேரிப்பாக்கம்- 15.6

    திருப்பத்தூர்-18.3

    மேல் ஆலத்தூர்- 1.2

    திருவண்ணாமலை- 21.2

    ஆரணி- 15.2

    செங்கம்- 4.6

    சாத்தனூர் அணை-17.7

    போளூர்- 20.8

    தண்டராம்பட்டு- 18.6

    கலசப்பாக்கம்- 31.

    ×