search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூரில் பரவலாக மழை- விவசாயிகள் மகிழ்ச்சி
    X

    வேலூரில் பரவலாக மழை- விவசாயிகள் மகிழ்ச்சி

    வேலூரில் நேற்று பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    வேலூர்:

    வேலூர், திருவண்ணா மலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்தது. நேற்று மாலை முதல் பரவலாக மழை பெய்ய தொடங்கியது.இரவிலும் தொடர்ந்து மழை பெய்தது. விடிய விடிய பெய்த மழை காலையிலும் நீடித்து பெய்தது.

    ஆற்காடு பகுதியில் அதிகபட்சமாக 30 மில்லி மீட்டர் மழை பதிவானது. அரக்கோணத்தில் தொடர்ந்து மழை பெய்ததால் பஸ் நிலையம் பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளது. வேலூரில் இன்று காலை பலத்த மழை பெய்தது. பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், அலுவலகத்திற்கு செல்பவர்கள் மிகுந்த சிரமப்பட்டனர்.

    தொடர்ந்து வேலூரில் மழை பெய்து கொண்டே இருந்தது. கிரீன் சர்க்கிளில் இருந்து புதிய பஸ் நிலையம் செல்லும் சாலையோரம் குளம்போல் மழைநீர் தேங்கி கிடக்கிறது. மேலும் தாழ்வான பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

    வாணியம்பாடி, ஆம்பூர், அரக்கோணம், காட்பாடி பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தபடி சென்றனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு பகுதியில் பலத்த மழை கொட்டியது. திருவண்ணாமலை, போளூர், தண்டராம்பட்டு பகுதியில் பலத்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்த ஓடியது.மற்ற இடங்களில் பரவலாக மழை பெய்தது.

    திருவண்ணாமலை மகா தீப மலை முழுவதும் மேக கூட்டங்கள் தவழ்ந்து செல்கின்றன. இந்த காட்சி ரம்மியமாக உள்ளது. இதேபோல ஜவ்வாது மலை பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மலையில் நீருற்றுகள் ஏற்பட்டுள்ளன.

    வேலூர், திருவண்ணா மலை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    வேலூர், திருவண்ணா மலை மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

    வேலூர்- 12.1

    ஆம்பூர்- 22.4

    வாணிய ம்பாடி-10.6

    ஆலங் காயம்- 9.2

    காவேரிப்பாக்கம்- 15.6

    திருப்பத்தூர்-18.3

    மேல் ஆலத்தூர்- 1.2

    திருவண்ணாமலை- 21.2

    ஆரணி- 15.2

    செங்கம்- 4.6

    சாத்தனூர் அணை-17.7

    போளூர்- 20.8

    தண்டராம்பட்டு- 18.6

    கலசப்பாக்கம்- 31.

    Next Story
    ×