search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vellore ibrahim speech"

    • சட்டசபை தேர்தலில் வால்பாறையில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது.
    • சுற்றுலாபயணிகள் அதிகம் வந்து செல்லும் வால்பாறையில் அடிப்படை வசதிகள் இல்லை.

    கோவை,

    வால்பாறையில் உள்ள பா.ஜ.க. மண்டல அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    இதில் பா.ஜ.க. சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் வேலூர் இப்ராகீம் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:-

    சட்டசபை தேர்தலில் வால்பாறையில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. இதனால் தி.மு.க. அரசு வால்பாறை மக்களை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.

    இங்குள்ள அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால் நோயாளிகள் சிரமப்படுகின்றனர்.

    சுற்றுலாபயணிகள் அதிகம் வந்து செல்லும் வால்பாறையில் அடிப்படை வசதிகள் இல்லை. மக்களை பழிவாங்கும் தி.மு.க. அரசை கண்டித்து பா.ஜ.க. சார்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும். உள்ளாட்சி தேர்தலில் பணம் கொடுத்து தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தோல்வி அடையும்.

    ஜனநாயக அடிப்படை யில் நடைபெறும் போராட்ட ங்களை தடை செய்வதும், பா.ஜ.க. நிர்வாகிகளை கைது செய்வதும், அடக்குமுறையை கையாள்வதும் தி.மு.க. ஆட்சியில் தொடர்கிறது.

    பாராளுமன்ற தேர்தலின் போது மத்திய அரசின் சாதனைகளை ஏைழ, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பா.ஜ.க. நிர்வாகிகள் எடுத்துரைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • கொடைக்கானல் வந்த வேலூர் இப்ராகிம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
    • அக்னிபத் திட்டம் இளைஞர்களுக்கு நன்மை அளிப்பதாக தெரிவித்தார்.

    கொடைக்கானல்:

    பா.ஜனதா தேசிய சிறுபான்மைபிரிவு செயலாளர் வேலூர் இப்ராகிம் கொடைக்கானலில் நிருபர்களிடம் கூறியதாவது,

    தென்மாநிலங்களில் 2024-2026-ல் நடக்கும் எம்.பி, எம்.எல்.ஏ தேர்தலில் பா.ஜனதா ஆளுங்கட்சியாக வரும். இதற்கு முன்னோட்டமாக கிராமங்களை நோக்கி தாமரை பிரச்சாரம் நடந்து வருகிறது. தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்த பின் ரவுடிசம் தலைதூக்கி உள்ளது. சென்னையில் கூலிப்படையினரால் சட்டம்-ஒழுங்கு பாதித்து கொலை, கொள்ளை அதிகரித்துள்ளது.

    இதனை தட்டிகேட்கவேண்டிய தமிழக போலீசாரின் கைகள் கட்டப்பட்டுள்ளன.

    ஆட்சிக்கு வருவதற்கு முன்பு லாக்கப் மரணங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்த்தார். ஆனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 6 லாக்கப் மரணங்கள் நடந்துள்ளது. இதைப்பற்றி கண்டு கொள்ளாமல் மவுனம் காத்து வருவது ஏன்?. மராட்டியத்தில் சிவசேனா கட்சிக்குள் ஏற்கனவே ஏற்பட்ட பிளவால் பா.ஜனதா ஆதரவில் ஆட்சி தக்க வைக்கப்பட்டுள்ளது.

    பிரித்தாள்வது எங்கள் நோக்கமல்ல. இந்த நிலையில் தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு மகுடம் சூட்டுவதை எம்.எல்.ஏக்கள் சிலர் விரும்பவில்லை. இங்கும் ஏக்நாத்ஷிண்ேட குழு போல் உருவாக வாய்ப்புள்ளது. தி.மு.கவின் சிலிப்பர் செல்கள் பா.ஜனதாவில் சேர வாய்ப்புள்ளது. தமிழகத்தை இரண்டாக பிரிக்கும் நோக்கம் எங்களிடம் இல்லை. நயினார்நாகேந்திரன் கூறியது அவரது தனிப்பட்ட கருத்தாகும்.

    மத்தியஅரசு அக்னிபத் திட்டத்தை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் கொண்டுவந்துள்ளது. இதில் மதம் பற்றி பேசுவதற்கு இடமே இல்லை. பா.ஜனதாவில் அடுத்த இலக்கு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா என அனைத்து மாநிலங்களையும் கைப்பற்றும். அ.தி.மு.க உட்கட்சி பிரச்சினையில் பா.ஜனதா தலையிடாது என்றார்.

    ×