search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "varadharaja perumal"

    • கோவிலில் கருவறையில் மூலவர் ஸ்ரீ வரதர், ஸ்ரீ தேவி, ஸ்ரீ பூதேவி சமேதராக காட்சி தருகிறார்.
    • இங்கு வரதராஜ பெருமாள் வடக்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.

    இத்திருக்கோவிலில் கருவரையில் மூலவர் ஸ்ரீ வரதர், ஸ்ரீ தேவி, ஸ்ரீ பூதேவி சமேதராக காட்சி தருகிறார்.

    மூலவரின் முன்பாக அழகிய வடிவுடன் பக்தர்களுக்கு அருள் பாளிக்கும் வரதராச பெருமாளை உயிரோட்டமாக பார்த்து கொண்டேயிருக்கலாம்.

    பொதுவாக இறைவன் கிழக்கு முகமாகவே அருள்பாளிப்பார்.

    ஆனால், இத்திருக்கோவிலில் அமைந்துள்ள அருள்மிகு வரதராசப் பெருமாள் வடக்கு நோக்கி நின்ற கோலத்தில் இருப்பது மிகவும் விசேஷமாகும்.

    ஒவ்வொரு மாதமும் ஏகாதசி மற்றும் அமாவாசை தினங்களில் சுவாமிக்கு வழிபாடும் விசேஷ திருமஞ்சனமும் நடைபெற்று வருகிறது.

    திருமணத்தடை புத்திர தோஷம் உள்ளவர்கள் இவ்வரதராச பெருமாள் இறைவனை உள்ளன்போடு

    சனிக்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி வழிபட்டு வர,

    விரைவில் திருமணமும் ஏகாதசி தினத்தில் விரதமிருந்து வழிபட்டு வர, மகப்பேறும் பெறுவதாக ஐதீகம்.

    திருப்பதியில் ஏழுமலையானுக்கு நடைபெற்று வரும் பூஜா முறையான வைகானச ஆகமப்படி,

    இவ்வரதராச பெருமாளுக்கு பூஜை முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    காஞ்சிபுரம் சென்று வரதராசரை தரிசிக்க இயலாதவர்கள் இத்திருத்திலத்தில் தரிசித்து அருளைப் பெறுகின்றனர்.


    திருவக்கரை தலத்தில் உள்ள பெருமாள் சன்னதி மேற்கு திசையைப் பார்த்த நிலையில் கட்டப்பட்டுள்ளது. இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
    வைணவத் தலங்களில் பெருமாள் கிழக்கு முகமாக பார்த்தே பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அதற்கு ஏற்ப பெருமாள் கோவில்கள் கட்டப்பட்டிருக்கும். ஆனால் திருக்கரை தலத்தில் உள்ள பெருமாள் சன்னதி மேற்கு திசையைப் பார்த்த நிலையில் கட்டப்பட்டுள்ளது.

    திருவக்கரை தலத்தில் எல்லா சன்னதிகளும் வக்கிரமாக மாறுபட்ட நிலையில் கட்டப்பட்டதற்கு ஏற்ப, பெருமாள் சன்னதியும் மாறுபாடாக உள்ளது. இத்தலத்து பெருமாள், வரதராஜபெருமாள் என்று அழைக்கப்படுகிறார்.

    வக்கிராசூரனை சம்ஹாரம் செய்யும் நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதால், பெருமாள் வழக்கமாக பார்க்கும் கிழக்கு திசையை தவிர்த்து விட்டு மேற்கு முகமாக நிற்கிறார். அவர் ஏந்தியுள்ள சக்கராயுதம், வக்கிராசூரனை வதம் செய்தபோது, எப்படி பிரயோகப்படுத்தப்பட்டதோ, அதே தோற்றத்துடன் உள்ளது.

    அதாவது மற்ற வைணவத் தலங்களில் சக்கராயுதம் பெருமாளை நோக்கி இருக்கும். ஆனால் திருவக்கரை தலத்தில் மட்டும் பக்தர்களை நோக்கியபடி சக்கரம் இருக்கிறது. அசுரனை சக்கரத்தால் வதம் செய்து விட்டு வந்து அப்படியே அவர் காட்சி கொடுப்பதாக ஐதீகம்.

    தனி சன்னதியில் நின்ற கோலத்தில் அருளும் வரதராஜ பெருமாள் இங்கு தனியாக உள்ளார். அருகில் தாயார் இல்லை. இந்த சன்னதியின் ஒரு ஓரத்தில் ராமகிருஷ்ணன் சிலை உள்ளது. ராம அவதாரத்திலும், கிருஷ்ணர் அவதாரத்திலும் அந்த அவதாரங்கள் இங்கு காட்சி கொடுத்ததாக சொல்கிறார்.

    ராமகிருஷ்ணர் சிலையின் ஒரு கையில் வில் உள்ளது. மற்றொரு கையில் புல்லாங்குழல் இருக்கிறது. கிருஷ்ணருக்கு அருகில் ருக்மணியும் ராமருக்கு அருகில் சீதையும் உள்ளனர். ஆலயத்தின் எதிரில் கருடாழ்வார், ஆஞ்சநேயர் உள்ளனர்.

    மேற்கே பார்த்த வரதராஜபெருமாளை வழிபாடு செய்தால் தடைபட்ட திருமணம் உடனே கைகூடும் என்பது ஐதீகம். அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் வரதராஜபெருமாளுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.

    ×