search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "van driver suicide"

    திருவெறும்பூரில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வேன் டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
    திருவெறும்பூர்:

    திருச்சி மாவட்டம் திரு வெறும்பூர் அருகே உள்ள சோழமாதேவி நகரை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவரது மகன் விஜய் (வயது 23), வேன் டிரைவர். விஜய் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இந்த காதல் விவகாரம் அவரது தந்தை சத்தியமூர்த்திக்கு தெரியவந்தது. இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    காதல் விவகாரம் தொடர்பாக தந்தை-மகனுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்றிரவும் இது தொடர்பாக அவர்கள் இடையே மீண்டும் தகராறு உருவானது. உடனே விஜய் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. 

    அவரை பெற்றோர் பல இடங்களில் தேடினர். எங்கும் கிடைக்கவில்லை. இந்நிலையில் இன்று காலை எழுந்து பார்த்தபோது வீட்டின் பின்னால் தோட்டத்தில் உள்ள மரத்தில் விஜய் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டு பிணமாக தொங்கினார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் நவல்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விஜய்யின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நவல்பட்டு போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    காதல் பிரச்சினையில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    போலீஸ் இன்ஸ்பெக்டர் மிரட்டியதால் வேன் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வேலூர்:

    வேலூர் சாய்நாதபுரத்தை சேர்ந்தவர் பழனி (வயது 35). வாடகை வேன் டிரைவரான இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேலூர் கொணவட்டத்தை சேர்ந்த சிலரை திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் உள்ள ஒரு தேவாலயத்திற்கு வேனில் அழைத்து கொண்டு சென்றார்.

    வேலூர்-ஆரணி சாலையில் கண்ணமங்கலம் அருகே அத்திமலைப்பட்டு என்ற பகுதியில் சென்றபோது வேன் எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் பயணித்த 15 பேர் காயமடைந்தனர்.

    இதுதொடர்பாக, கண்ணமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவர் பழனியை பிடித்து விசாரித்தனர். அப்போது, பழனியிடம் லைசென்ஸ் இல்லை. தொலைந்து போய் விட்டதாக அவர் கூறினார். இதையடுத்து, இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் பழனியை மிரட்டியுள்ளார்.

    ‘என்ன செய்வியோ... லைசென்ஸ் கொண்டு வா’ என்று இன்ஸ்பெக்டர் எச்சரித்துள்ளார். டிரைவர் பழனி, வேலூரில் உள்ள வீட்டிற்கு வந்து லைசென்சை சல்லடை போட்டு தேடி உள்ளார். பிறகு லைசென்ஸ் கிடைக்காததால் சத்துவாச்சாரியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கும் சென்று முறையிட்டார்.

    மீண்டும் எப்படி போலீஸ் நிலையம் செல்வது என்று அச்சப்பட்டு டிரைவர் பழனி நேற்றிரவு வீட்டிற்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். உடல் பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பழனியின் தற்கொலைக்கு காரணமான கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இன்று காலை அவருடைய உறவினர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு காணப்பட்டது.

    ஆழ்வார்குறிச்சியில் பெற்றோர் வேன் வாங்கி கொடுக்காததால் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    கடையம்:

    ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள ராவுத்தர்பேரியை சேர்ந்தவர் தங்கராஜ்(வயது29). டிரைவர். இவர் தனக்கு சொந்தமாக வேன் வாங்கி தருமாறு பெற்றோரிடம் கேட்டுள்ளார். இதற்கு அவரது பெற்றோர் மறுத்துள்ளனர். 

    இதில் மனமுடைந்த தங்கராஜ் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷத்தை குடித்துவிட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை மீட்டு அம்பை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

    இது குறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×