search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "UK PM Rishi Sunak"

    • இரண்டாம் உலக போரின் இறுதி கட்டத்தை சர்ச்சில் "இருண்ட காலம்" என கூறினார்
    • இறையாண்மையை காக்க இஸ்ரேலுடன் இங்கிலாந்து துணை நிற்கும்

    இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் ஆகிய இருவருக்கும் இடையேயான சந்திப்பு இன்று நடைபெற்றது.

    இரண்டாம் உலக போர் தீவிரமாக நடைபெற்ற காலகட்டத்தில் தனது நாட்டின் இறையாண்மையை குறித்து முக்கிய முடிவு எடுக்க வேண்டிய கட்டத்தில் இருந்த அப்போதைய இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், "இது இருண்ட காலம்" என வர்ணித்ததை குறிப்பிட்ட இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, தற்போதைய நிலையை "இது இஸ்ரேலின் இருண்ட காலம் மட்டுமல்ல; உலகத்தின் இருண்ட காலம்" என கூறியுள்ளார்.

    நேதன்யாகுவுடனான சந்திப்பு நிறைவடைந்ததும் பேசிய ரிஷி சுனக் தெரிவித்ததாவது:

    இஸ்ரேல் தற்போது அதன் வரலாற்றில் முதல்முறையாக இருண்ட காலகட்டத்தை (darkest hour) சந்தித்து வருகிறது. தன்னை பாதுகாத்து கொள்ளும் உரிமை இஸ்ரேலுக்கு நிச்சயம் உண்டு. சர்வதேச சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு தன் தேச இறையாண்மையை காக்க இஸ்ரேல் எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் இங்கிலாந்து துணை நிற்கும். ஓரு நீண்ட போருக்கு இஸ்ரேலுக்கு நீடித்த ஆதரவு தேவைப்படுகிறது. உங்களுடன் இந்த இருண்ட காலத்தில் நண்பனாக துணை நிற்பதில் பெருமையடைகிறேன். உங்களுடன் ஒன்றுபட்டு நிற்கிறோம். நீங்கள் நிச்சயம் வெற்றி அடைய வேண்டும்; நீங்கள் வெல்வதைத்தான் நாங்கள் விரும்புகிறோம்.

    இவ்வாறு ரிஷி சுனக் தெரிவித்தார்.

    இஸ்ரேல் சுற்றுப்பயணம் முடிந்ததும் ரிஷி சுனக், சவுதி அரேபியா செல்ல உள்ளார்.

    • அமெரிக்க அதிபர் பைடன் சந்திப்பை முடித்து புறப்பட்டார்
    • இன்றும் என்றும் உங்களுடன் இருக்கிறோம் என்றார் சுனக்

    கடந்த அக்டோபர் 7 அன்று இஸ்ரேலுக்குள் நுழைந்த நூற்றுக்கணக்கான பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாதிகள், 1500க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களை மிருகத்தனமாக கொன்று குவித்தனர். இதில் குழந்தைகள், பெண்கள், முதியவர்களும் அடங்குவர்.

    உலகையே அதிர வைத்த இந்த கொடூர சம்பவத்திற்கு பழி வாங்கும் விதமாக ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக ஒழிக்க போவதாக கூறி காசா பகுதியில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி உட்பட பல நாடுகள் ஆதரவு அளித்து வருகிறது.

    மிகவும் தீவிரமாக 13-வது நாளாக இப்போர் தொடர்ந்து நடந்து வரும் வேளையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலுக்கு பயணம் செய்து பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை சந்தித்தார். அவர் பயணம் முடிவடைந்துள்ள நிலையில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், இஸ்ரேல் சென்றுள்ளார்.

    இஸ்ரெலின் டெல் அவிவ் நகர் வந்திறங்கிய ரிஷி சுனக் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை சந்திக்க உள்ளார். முன்னதாக இஸ்ரேல் அதிபரையும், ஹமாஸ் பயங்கரவாதிகளால் கடத்தி செல்லப்பட்டவர்களின் உறவினர்களையும் சந்தித்தார்.

    இது குறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் உள்ள தனது அதிகாரபூர்வ கணக்கில் கருத்து பதிவிட்டுள்ளார்.

    அதில் ரிஷி சுனக், தெரிவித்திருப்பதாவது::

    இன்றும் என்றும், நானும் இங்கிலாந்தும் உங்களுடன் இருக்கிறோம். பயங்கரவாதத்திற்கு என்றும் நாங்கள் எதிராக இருக்கிறோம். தனது குழந்தைகள் தன் கண் முன்னாலேயே வலுக்கட்டாயமாக இழுத்து செல்லப்படுவது பயங்கரமான, தாங்க முடியாத துன்பம். தங்களின் உயிருக்கு உயிரானவர்களை பயங்கரவாதிகளிடம் பறி கொடுத்தவர்களை சந்தித்து பேசினேன். நாங்கள் ஹமாஸ் பயங்கரவாதிகளால் கொண்டு செல்லப்பட்ட பணய கைதிகளை பத்திரமாக மீட்க அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறோம். நான் அதிபர் ஐசக் ஹெர்சக்கை சந்தித்தேன். ஹமாஸ் பயங்கரவாத தாக்குதலின் போது இஸ்ரேலில் உள்ள இங்கிலாந்து மக்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பிற்காக அவரிடம் நன்றி தெரிவித்தேன். காசாவில் உள்ள பாலஸ்தீன பொதுமக்களுக்கு அளிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு குறித்தும் பேசினேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.



    • அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் இஸ்ரேலை ஆதரிக்கின்றன
    • யூதர்கள் மீது விரும்பத்தகாத சம்பவங்களும் ஆங்காங்கே நடைபெறுகின்றன

    பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக ஒழிக்க போவதாக கூறி இஸ்ரேல் ராணுவ படை (IDF), பாலஸ்தீனத்தில் உள்ள காசா பகுதியில் தேடி தேடி ஹமாஸ் அமைப்பினரை வேட்டையாடி வருகிறது. வான்வழி குண்டு வீச்சு தாக்குதலை தொடர்ந்து தரைவழி தாக்குதலையும் இஸ்ரேல் தொடர இருக்கிறது.

    உலக நாடுகளில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் உட்பட பல மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலை ஆதரிக்கின்றன. ஆனால், அந்நாடுகளில் உள்ள சில அமைப்புகள் இஸ்ரேலின் நடவடிக்கைகளை கடுமையாக எதிர்க்கின்றன. இஸ்ரேல் நாட்டை சேர்ந்த யூதர்கள் மீது விரும்பத்தகாத சம்பவங்களும் ஆங்காங்கே நடைபெறுகின்றன.

    "இஸ்ரேலின் கடந்த வார தாக்குதலை அடுத்து, இங்கிலாந்தில் உள்ள யூதர்களுக்கு எதிராக 105 சம்பவங்கள் நடந்துள்ளது. இது கடந்த செப்டம்பர் 30லிருந்து அக்டோபர் 13 வரை நடந்த 75 சம்பவங்களை விட மிக அதிகம்" என்று லண்டன் பெருநகர காவல் துணை ஆணையர் லாரன்ஸ் டேலர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து கவலை தெரிவித்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் கூறியதாவது:

    கடந்த சில நாட்களாக யூதர்களுக்கு எதிரான சம்பவங்கள் இங்கு அதிகரிப்பது சகித்து கொள்ள கூடியது அல்ல. யூதர்களின் வழிபாட்டு தலங்களுக்கும், பள்ளிக்கூடங்களுக்கும் தேவைப்படும் பாதுகாப்பை அளிக்க அதிக நிதியுதவி ஒதுக்கப்பட்டுள்ளது. அனைத்து வகுப்பினரும் அமைதியாக வாழ்வதை உறுதி செய்ய காவல்துறைக்கு என்னென்ன வசதிகள் வேண்டுமோ அவையனைத்தும் செய்து தரப்படும். அமைதியை குலைக்கும் வகையில் நடந்து கொள்பவர்கள் மீது சட்டம் முழு பலத்துடன் பாயும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • நெட் ஜீரோ திட்டப்படி 2030க்குள் வெளியேற்றங்களை பெருமளவு குறைக்க வேண்டும்
    • தற்போதைய திட்டத்தை செயல்படுத்தினால் மக்கள் ஒத்துழைக்க மறுப்பார்கள் என்றார் சுனக்

    உலகெங்கிலும் வாகனங்களிலிருந்தும், தொழிற்சாலைகளிலிருந்தும் வெளியேறும் கரியமிலம் உட்பட பல நச்சு வாயுக்களினால் காற்றின் நச்சுத்தன்மை கூடி வருவதாகவும், இதனால் புவி வெப்பமடைவது அதிகரிப்பதுடன் வானிலையின் பருவகால நிகழ்வுகள் சீரற்று போவதாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பல ஆண்டுகளாக கூறி வந்தனர்.

    பல முன்னணி உலக நாடுகள் ஒன்றுபட்டு இதற்காக "நெட் ஜீரோ" எனும் திட்டத்தை உருவாக்கியது. இதன்படி நச்சு வாயுக்கள் வெளியேற்றத்தை சில வருடங்களில் பூஜ்ஜிய நிலைக்கு கொண்டு வருவதற்கு உலக நாடுகள் சம்மதித்தன.

    இதன்படி புவி வெப்பத்தின் அளவு 1.5 டிகிரி சென்டிகிரேட் அளவிற்கு மேல் அதிகரிக்காமல் தடுக்க தற்போதைய நச்சு வெளியேற்றங்களை 2030 ஆண்டிற்குள் 45 சதவீத அளவிற்கு குறைப்பதற்கும், 2050 ஆண்டிற்குள் 0 சதவீத அளவிற்கு கொண்டு வரவும் பாரிஸ் ஒப்பந்தம் எனும் ஒரு உடன்படிக்கை சில வருடங்களுக்கு முன் கையெழுத்தானது.

    2030 வருடத்திற்கு இன்னும் ஏழே ஆண்டுகள் உள்ள நிலையில் தற்போது பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், வீடுகள், வாகனங்கள், தொழிற்சாலை மற்றும் எரிசக்தி துறை ஆகியவற்றின் நச்சுப்புகை வெளியேற்றங்களை கட்டுபடுத்த 2030க்கான இலக்குகளை தள்ளி போட்டிருப்பதாக அறிவித்தார். இலக்குகளை அடைய மக்களின் ஒத்துழைப்பும் அவசியம் என கூறிய சுனக், 2030ல் பிரிட்டன் கொண்டு வர வேண்டிய பெட்ரோல் மற்றும் டீசல் கார்களுக்கான தடையை 2035 ஆண்டிற்கு ஒத்தி வைத்தார்.

    முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரிஷி சுனக்கின் இந்த முடிவை தனது அதிகாரபூர்வ சமூக வலைதளமான "ட்ரூத் சோஷியல்" கணக்கில் பாராட்டியுள்ளார்.

    அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

    அமெரிக்கா தன் மீதும், உலக நாடுகளின் மீதும் தேவையற்று திணிக்கும் இந்த சுற்றுச்சூழல் கட்டுப்பாடுகளை ரிஷி சுனக் தளர்த்தியுள்ளது நல்ல முடிவு. இலக்கில்லாமல் செயல்பட்டு வரும் வானிலை ஆர்வலர்களின் அறிவுறுத்தல்களை கேட்டு நாட்டை திவால் நிலைக்கு கொண்டு செல்லாமல் புத்திசாலித்தனமாக பிரிட்டனை ரிஷி காப்பாற்றியுள்ளார். ஆனால், செயல்படுத்த முடியாத விஷயங்களுக்காக, அமெரிக்கா பல லட்சம் கோடிகளை செலவிட்டு வானிலை மாற்றங்களை தடுப்பதாக கூறி விரையம் செய்து வருகிறது. இந்த புரட்டை முன்னரே அறிந்து கொண்டு தன் நாட்டை காத்த சுனக்கிற்கு வாழ்த்துக்கள்.

    இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.

    ×