search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TNGovernment"

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவ. 5-ம் தேதி அரசு விடுமுறை என அறிவித்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளதால் அரசு பணியாளர்களுக்கு 4 நாள் விடுமுறை கிடைத்துள்ளது. #Diwali #GovernmentHoliday
    சென்னை:

    தமிழகத்தில் தீபாவளி பண்டிகை நவம்பர் 6-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. நவம்பர் 6-ம் தேதி செவ்வாய்க்கிழமை என்பதால் அரசு மற்றும் தனியார் பணியாளர்கள் திங்கட்கிழமை விடுமுறை எடுத்து தீபாவளியை கொண்டாட முடிவு செய்திருந்தனர்.

    எனவே, நவம்பர் 5-ம் தேதி விடுமுறை அளிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இந்நிலையில், தீபாவளிக்கு முந்தைய தினமான நவம்பர் 5-ம் தேதி அன்று அரசு விடுமுறை என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    இதுதொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முந்தைய தினமான நவம்பர் 5-ம் தேதி அரசு விடுமுறை என அறிவிக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் அன்று விடுமுறை அளிக்கப்படுகிறது.

    அந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் இரண்டாவது சனிக்கிழமையான நவம்பர் 10-ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதையடுத்து, தீபாவளிக்காக சொந்த ஊர் செல்ல விரும்பும் அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் கிடைத்துள்ளது. ஏற்கனவே, சனி ஞாயிறு விடுமுறை என்பதால் மேலும் இரு நாள்கள் விடுமுறை கிடைத்துள்ளது அவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. #Diwali #GovernmentHoliday
    திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை தள்ளி வைக்க கோரியது ஏன்? என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. #ElectionCommission #TNgovernment #ADMK

    சென்னை:

    திருப்பரங்குன்றம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ் கடந்த ஆகஸ்ட் மாதம் 2-ந்தேதி உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். இதனால் அந்த தொகுதி காலியாக உள்ளது.

    இதேபோல் திருவாரூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் மாதம் 7-ந்தேதி மரணம் அடைந்ததால் இந்த தொகுதியும் காலியிடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த இரு தொகுதிகளுக்கும் 6 மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். என்பதால் 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்படும் போது திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் நேற்று டெல்லியில் தலைமை தேர்தல் கமி‌ஷனர் ஓ.பி.ராவத் 5 மாநில சட்டசபை தேர்தல் தேதியை மட்டும் அறிவித்தார். திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.

    இதுகுறித்து நிருபர்கள் கேட்டபோது தமிழகத்தில் மழை காலம் தொடங்குவதாலும், திருப்பரங்குன்றம் தேர்தல் தொடர்பாக தி.மு.க. வேட்பாளர் சரவணன் தொடர்ந்த வழக்கு ஐகோர்ட்டில் நிலுவையில் இருப்பதாலும் தமிழக அரசு கேட்டுக் கொண்டதாலும் இடைத்தேர்தல் தற்போது அறிவிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

    திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தேதியை இப்போது அறிவிக்கக்கூடாது என்று தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஏற்கனவே தலைமை தேர்தல் கமி‌ஷனுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் தற்போது இடைத்தேர்தல் நடத்துவதற்கான சூழ்நிலை இல்லை. திருவாரூர் தொகுதியை பொறுத்தவரை தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை அக்டோபர், டிசம்பர் மாதங்களில் தீவிரமாக பெய்யும் என்று கடந்த செப்டம்பர் மாதம் 29-ந்தேதி இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

     


    அதில் இயல்பை காட்டிலும் பருவ மழை அதிக அளவில் பெய்யும் என்றும் சராசரி அளவைவிட 112 சதவீதம் மழை பெய்யும் என்றும் எச்சரித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக பருவ நிலை மாற்றம் காரணமாக பருவ மழை காலங்களில் வழக்கத்தைவிட பெருமழை பெய்து வருகிறது.

    திருவாரூர் தொகுதி காவிரி டெல்டா பகுதியில் அமைந்துள்ளது. பருவ மழை காலத்தில் இங்கு பலத்த மழை பெய்து பாதிப்புகளை ஏற்படுத்தும். இதனால் அரசு எந்திரங்கள் மழை நிவாரண பணிகளில் முழு வீச்சில் ஈடுபடுத்தப்பட வேண்டிய நிலை ஏற்படும்.

    எனவே இந்த கால கட்டத்தில் இடைத்தேர்தல் நடத்தினால் தேர்தல் பணியாற்றுவது அரசு அதிகாரிகளுக்கு இயலாததாக இருக்கும்.

    திருப்பரங்குன்றம் தொகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டசபை இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போஸ் வேட்புமனுவில் ஜெயலலிதா கைரேகையிட்டது தொடர்பாக தி.மு.க. வேட்பாளர் சரவணன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

    இந்த சூழ்நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தினால் அது ஐகோர்ட்டு அதிகாரத்தை மீறிய செயலாகும். எனவே வழக்கு முடிவுக்கு வரும்வரை இங்கும் இடைத்தேர்தல் நடத்துவதை தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு தலைமைச் செயலாளர் கடிதத்தில் கூறியுள்ளார். #ElectionCommission  #TNgovernment #ADMK

    உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் 14-வது நிதி கமி‌ஷன் விதிகள்படி இந்த பணத்தை அனுப்ப முடியாத நிலை உருவாகி இருப்பதாக மத்திய மந்திரி நரேந்திரசிங் தோமர் கூறினார். #localbodyelections #TNgovernment

    சென்னை:

    நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ளாட்சி பணிகளுக்காக மத்திய அரசு குறிப்பிட்ட தொகையை உதவியாக வழங்கி வருகிறது.

    அடிப்படை நிதி உதவி, செயல்பாட்டு நிதி உதவி என்று 2 பிரிவாக இந்த நிதி வழங்கப்படும். அடிப்படை நிதி ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட அளவுக்கு ஒதுக்கீடாக தரப்படும். செயல்பாட்டு நிதி என்பது முந்தைய ஆண்டில் செயல்பட்ட விதத்தை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் வழங்கப்படும்.

    ஆனால், உள்ளாட்சி தேர்தல் நடத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இருந்தால் தான் இந்த நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்பது 14-வது நிதி கமி‌ஷனின் விதிகள் ஆகும்.

    ஆனால், தமிழ்நாட்டில் 2 ஆண்டுகளாக பஞ்சாயத்து தேர்தல் நடத்தவில்லை. எனவே, தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய பஞ்சாயத்து நிதியை மத்திய அரசு தற்போது நிறுத்தி வைத்துள்ளது.

    கடந்த ஆண்டு 2-வது தவணையாக அடிப்படை நிதியாக ரூ.1390 கோடியும் செயல்பாட்டு நிதியாக ரூ. 560 கோடியும் தர வேண்டும். ஆனால், உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் இதுவரை அந்த பணத்தை தரவில்லை.

    அதேபோல் இந்த ஆண்டுக்கான முதல் தவணை ரூ.1608 கோடி தர வேண்டும். அதில், ரூ. 758 கோடி மட்டும் தான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இது சம்பந்தமாக அ.தி.மு.க. எம்.பி. செந்தில்நாதன் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதையடுத்து பதில் அளித்த மத்திய மந்திரி நரேந்திரசிங் தோமர் ரூ. 758 கோடி மட்டும் ஒதுக்கீடு செய்திருப்பதாக கூறினார்.


    இதன்படி பார்த்தால் கடந்த ஆண்டு 2-வது தவணை தொகையில் ரூ. 1950 கோடியும், இந்த ஆண்டு முதல் தவணையில் ரூ.850 கோடியும் வரவேண்டி உள்ளது. கிட்டத்தட்ட ரூ. 3 ஆயிரம் கோடி அளவுக்கு பணம் வரவேண்டியது நிறுத்தப்பட்டுள்ளது.

    உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் 14-வது நிதி கமி‌ஷன் விதிகள்படி இந்த பணத்தை அனுப்ப முடியாத நிலை உருவாகி இருப்பதாக மத்திய மந்திரி நரேந்திரசிங் தோமர் கூறினார்.

    உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் இந்த நிதியை பெறுவதற்கான வேறு வழியே இல்லை என்றும் மாநில அதிகாரிகளும் தெரிவித்தனர்.

    சமீபத்தில் மத்திய பஞ்சாயத்துராஜ் மந்திரி புருஷோத்தம் ரூபலாவை சந்தித்த தமிழக அமைச்சர் வேலுமணியும், தமிழகத்துக்கு பஞ்சாயத்து நிதி ஒதுக்காதது குறித்து புகார் தெரிவித்துள்ளார்.

    தமிழகத்துக்கு நிதி ஒதுக்காவிட்டால் அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதா கட்சிகளுக்கு பாராளுமன்ற தேர்தலில் கெட்ட பெயர் ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

    எதிர்க்கட்சிகள் இந்த வி‌ஷயத்தை தங்களுக்கு சாதகமாக திசை திருப்ப வாய்ப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் அவர் கூறி இருக்கிறார்.

    பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் போது, பேசிய அ.தி.மு.க. பாராளுமன்ற தலைவர் வேணுகோபாலும் இதை சுட்டிக்காட்டி பேசி உடனடியாக நிதியை தர வேண்டும் என்று வற்புறுத்தி இருக்கிறார்.

    ×