search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tiruvallikeni Parthasarathi Temple"

    • பிரம்மோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • நாளை காலை 5.15 மணிக்கு கருடசேவை நடக்கிறது.

    சென்னை:

    சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளுக்கான சித்திரைமாத பிரம்மோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முதல் நாளில் தர்மாதி பீடத்தில் அருள்பாலிப்பதுடன், புன்னைமர வாகனத்தில் வீதி உலா நடந்தது. இன்று பரமபதநாதன் திருக்கோலத்தில் சேஷ வாகன வீதி உலா மற்றும் சிம்ம வாகன வீதி உலாவும் நடக்கிறது. நாளை (வியாழக்கிழமை) காலை 5.15 மணிக்கு கருடசேவை நடக்கிறது.

    வருகிற 26-ந்தேதி (வெள்ளிக்கிழமை) சூரிய பிரபை, சந்திர பிரபை, தொடர்ந்து வருகிற 27-ந்தேதி நாச்சியார் திருக்கோலத்தில் பல்லக்கு சேவையும் நடைபெறுகிறது. 6-ம் நாள் திருவிழாவான வருகிற 28-ந்தேதி அதிகாலை 5.30 மணிக்கு சூர்ணாபிஷேகம் நடக்கிறது. அன்று இரவு 8 மணிக்கு யானை வாகனத்தில் பெருமாள் வீதி உலா வந்து அருள்பாலிக்கிறார்.

    விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 29-ந்தேதி நடக்கிறது. அன்று அதிகாலை 3.30 மணிக்கு பெருமாள் திருத்தேரில் எழுந்தருள்கிறார். காலை 7 மணி அளவில் தேரோட்டம் வடம் பிடிக்கப்படுகிறது என்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறினர். விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

    • சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஏராளமான பகதர்கள் பங்கேற்பார்கள்.
    • பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை திருவல்லிக் கேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசியை யொட்டி நடைபெறும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஏராளமான பகதர்கள் பங்கேற்பார்கள். பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்படும்.

    இதன்படி இந்த ஆண்டும் பார்த்தசாரதி கோவிலில் பக்தர்களின் வசதிக்காக தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியையொட்டி இன்று அதிகாலை 2½ மணி அளவில் உபயதாரர்கள், கட்டணதாரர்கள் என 1,500 பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

    இதன் பின்னர் நாளை காலை 6 மணியில் இருந்து பொது தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். நாளை இரவு கோவில் நடை சாத்தப்படும் வரையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    கடந்த ஆண்டு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் 50 ஆயிரம் பேர் திரண்டிருந்தனர். இந்த ஆண்டு அதைவிட கூடுதல் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சுமார் 1 லட்சம் பக்தர்கள் நாளை பார்த்தசாரதி கோவிலில் திரள்வார்கள் என்று எதிர் பார்ப்பதால் தேவையான அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் தலைமையில் கூடுதல் கமிஷனர் பிரேமானந்த் சின்கா, இணை கமிஷனர் தர்மராஜ் ஆகியோரது மேற்பார்வை யில் ராயப்பேட்டை உதவி கமிஷனர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு உள்ளனர். இவர்களோடு 6 துணை கமிஷனர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

     நாளை காலை 6 மணி தரிசனத்துக்கு இன்று இரவில் இருந்தே பக்தர்கள் கோவிலில் கூடுவார்கள் என்பதால் அவர்களின் வசதிக்காக 2 வரிசைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தெற்கு மாட வீதியில் இருந்து ஒரு வரிசையும், கிழக்கு கோபுரத்தின் எதிர் திசையில் இருந்து ஒரு வரிசையும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    இந்த ஆண்டு சிறப்பு தரிசனம் கிடையாது என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவித்திருப்பதால் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கு வரும் அனைத்து பக்தர்களும் பொது தரிசன வரிசை வழியாகவே அனுமதிக்கப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்துள்ள னர். 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    இதையொட்டி திரு வல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இன்று பிற்பகலில் போலீஸ் உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து பாதுகாப்பு பணிகளை முடுக்கி விட உள்ளனர். இன்று இரவு முதல் நாளை இரவு வரை தொடர்ச்சியாக அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது.

    கோவிலை சுற்றிலும் 10 இடங்களில் தீயணைப்பு கருவிகளுடன் 3 வாகனங்களில் 60 தீயணைப்பு வீரர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 32 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதன் மூலமாக போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வெயில் மற்றும் மழையால் பக்தர்கள் பாதிக்கப்படாமல் இருக்க தகரத்திலான தற்காலிக மேற்கூரைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    கோவிலின் தெப்பக்குளத்தில் ரப்பர் படகுகளுடன் 10 தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. கோவிலை சுற்றிலும் தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பக்தர்களுக்கு ஒலிபெருக்கி மூலம் அறிவிப்புகள் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு குடிநீர் விநி யோகம், தற்காலிக கழிப்பிட வசதி, தாய்மார்கள் பாலூட் டும் தற்காலிக அறை என மற்றும் கோவிலுக்கு உள்ளேயும் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ×