search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tirupattur murder"

    வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே பெண் துப்புரவு பணியாளர் குத்திக்கொல்லப்பட்டது தொடர்பாக அண்ணன் மகனை போலீசார் கைது செய்தனர்.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே உள்ள கெஜல்நாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் திருமலை. கூலித் தொழிலாளி. இவரது மனைவி உமா (வயது 46), அதே பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் துப்புரவு பணியாளராக வேலைபார்த்து வந்தார்.

    அதே ஊரைச் சேர்ந்தவர் உமாவின் அண்ணன் கோவிந்தராஜ். இவரது மகன்கள் மணிகண்டன், மாதேஷ் (21). உமாவிற்கும், கோவிந்தராஜுக்கும் இடையே பணப்பிரச்சனை தொடர்பாக தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் உமா நேற்று வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த மாதேஷ், உமாவிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த மாதேஷ் உமாவின் முகம், கழுத்து உள்ளிட்ட இடங்களில் கத்தியால் சரமாரியாக குத்தினார். படுகாயம் அடைந்த உமா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். அதன்பின்னர் மாதேஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    தகவல் அறிந்த கந்திலி போலீசார் இன்ஸ்பெக்டர் பழனி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து கந்திலி போலீசார் வழக்குப்பதிவு செய்து, உமாவை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய மாதேஷை கைது செய்தனர். அவர் கந்திலியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் ஊழியராக பணியாற்றி வருகிறார். கைதான அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பத்தூர் அருகே கள்ளக்காதலனை ஏவி கூலிப்படை மூலம் கணவரையும் அவரது 2-வது மனைவியையும் பெண் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    திருப்பத்தூர்:

    வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த அங்கநாதவலசை ஈச்சநேரி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 40). விவசாயி. இவரது மனைவி கலா (37). இவர்களுக்கு ஆனந்தன், நந்தினி என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.

    கலாவுக்கு அதே பகுதியை சேர்ந்த ஏகாம்பரம்(40) என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனை அறிந்த சண்முகம் அவரை கண்டித்தார்.

    கடந்த ஆண்டு கலா கள்ளக்காதலன் ஏகாம்பரத்துடன் வீட்டை விட்டு ஓடினார். அவர்கள் இருவரும் கேரளாவில் குடும்பம் நடத்தி வந்தனர்.

    மனைவி ஓடிச்சென்ற துயரத்தில் இருந்த சண்முகம் கடந்த 6 மாதங்கங்களுக்கு முன்பு சிங்காரப்பேட்டையை சேர்ந்த சுஜாதா (30) என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். அவர்கள் இருவரும் சந்தோசமாக வாழ்ந்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த மாதம் கேரளாவில் கள்ளக்காதலனுடன் வசித்த கலா திரும்பி வந்தார்.

    தான் கணவருடன் தான் சேர்ந்து வாழ்வேன் என அடம்பிடித்தார். உறவினர்கள், ஊர் பெரியவர்கள் பேசி சேர்ந்து வாழுமாறு கூறிச் சென்றனர்.

    இதனையடுத்து கலாவும் சண்முகம் வீட்டிலேயே தங்கினார். ஆனால் சண்முகம் கலாவுடன் பேசவில்லை. 2-வது மனைவி சுஜாதாவுடன் குடும்பம் நடத்தினார்.

    இதனால் ஆத்திரமடைந்த கலா கணவரையும், சுஜாதாவையும் தீர்த்து கட்ட முடிவு செய்தார். இதுபற்றி போன் மூலம் ஏகாரம்பத்துக்கு தகவல் தெரிவித்தார்.

    இரவு தூங்கும் போது வீட்டுக்குள் புகுந்து கொலை செய்ய சதி திட்டம் தீட்டினர். நேற்று நள்ளிரவு சண்முகம், சுஜாதா தூங்கி கொண்டிருந்தனர்.

    ஏகாம்பரம் ஈரோட்டை சேர்ந்த கூலிப்படையினர் 2 பேருடன் வந்தார். அவர்களுக்காக காத்திருந்த கலா வீட்டு கதவை திறந்து விட்டார். ஏகாம்பரம் மற்றும் கூலிப்படையினர் வீட்டுக்குள் புகுந்து சண்முகத்தையும், சுஜாதாவையும் இரும்பு கம்பியால் தாக்கி கத்தியால் வெட்டினர்.

    ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த அவர்கள் 2 பேரும் படுக்கையிலேயே இறந்தனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர்.

    அதற்குள் ஏகாம்பரம் மற்றும் கூலிப்படையினர் தப்பி ஓடிவிட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த திருப்பத்தூர் டி.எஸ்.பி. ஜேசுராஜ், இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் சென்று உடல்களை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து சண்முகத்தின் முதல் மனைவி கலா, கூலிப்படையை சேர்ந்த நாகராஜ் (36) ஆகியோரை கைது செய்தனர்.

    கள்ளக்காதலன் ஏகாம்பரம் உள்ளிட்ட 2 பேரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    ×