என் மலர்
நீங்கள் தேடியது "The Hundred Mens Competition 2024"
- இங்கிலாந்தில் 100 பந்துகளை கொண்ட ஹண்ட்ரட் தொடர் நடைபெற்று வருகிறது.
- ரஷித் கான் வீசிய 5 பந்துகளை கொண்ட ஒரே ஓவரில் பொல்லார்ட் 5 சிக்சர்களைப் பறக்க விட்டார்.
இங்கிலாந்தில் 100 பந்துகளை கொண்ட ஹண்ட்ரட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 24வது லீக் போட்டியில் ட்ரெண்ட் ராக்கெட்ஸ் மற்றும் சௌதர்ன் பிரேவ்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ட்ரெண்ட் ராக்கெட்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 100 பந்துகளில் 8 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டாம் பாட்டன் 30 ரன்கள் எடுத்தார். சௌதர்ன் பிரேவ்ஸ் தரப்பில் அதிகபட்சமாக கிரிஸ் ஜோர்டான் 3, ஜோப்ரா ஆர்ச்சர் 2, பிரிக்ஸ் 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.
அதைத் தொடர்ந்து விளையாடிய சௌதர்ன் பிரேவ்ஸ் அணிக்கு கடைசி 20 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டது. இந்நிலையில் அந்த ஓவரை உலகின் நம்பர் ஒன் டி20 சுழற்பந்து வீச்சாளராக கருதப்படும் ரஷித் கான் வீசினார்.
அவர் வீசிய 5 பந்துகளை கொண்ட ஒரே ஓவரில் பொல்லார்ட் அடுத்தடுத்து 5 சிக்சர்களைப் பறக்க விட்டார். அந்த வகையில் உலகின் நம்பர் ஒன் டி20 பவுலரையே பிரித்து மேய்ந்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார் பொல்லார்ட். பொல்லார்ட் 2 பவுண்டரி 5 சிக்ஸருடன் 45 (23) ரன்கள் விளாசி அவுட்டானார்.
இறுதியில் 99-வது பந்திலேயே சௌதர்ன் பிரேவ்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பொல்லார்ட் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.
- இங்கிலாந்து நாட்டில் The Hundred லீக் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
- 100 பந்துகளை மட்டுமே கொண்டு இந்த கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது.
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை போல இங்கிலாந்து நாட்டில் The Hundred லீக் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
100 பந்துகளை மட்டுமே கொண்டு நடத்தப்பட்டு வரும் The Hundred லீக் தொடருக்கு ஐபிஎல் போல மக்களிடையே போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.
இதனால், ஹன்ட்ரட் லீக் தொடரில் விளையாடி வரும் அணிகளில் முதலீடு செய்வதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பல்வேறு தரப்பினருக்கும் அழைப்பு விடுத்துள்ளது.
இந்நிலையில், தற்போது ஒவ்வொரு அணிகளின் 49% பங்குகளை விற்பனை செய்ய இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு எடுத்துள்ளது. ஒவ்வொரு அணிகளின் மதிப்பும் சுமார் ரூ.900 கோடி முதல் ரூ.1,100 கோடி வரை கணக்கிடப்பட்டுள்ளது.
இதனிடையே முதற்கட்ட ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் தரப்பில் ஏலத்திற்கான தொகை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. அதே சமயம் பஞ்சாப் கிங்ஸ் அணி முதலீடு செய்வதில் இருந்து விலகியுள்ளது.
ஹன்ட்ரட் அணிகளின் 49% பங்குகள் விற்பனை செய்யப்பட்டாலும், மீதமுள்ள 51% பங்குகள் கவுண்டி அணிகளிடம் தான் இருக்கும். அவர்களும் இணைந்தே அணியை வழிநடத்துவார்கள் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.






