search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thaipusath festival"

    • பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து தண்டாயுதபாணியை தரிசனம் செய்வார்கள்.
    • காவடிகள் எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

    பழனி:

    தமிழ் கடவுள் முருகனின் 3-ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இங்கு கொண்டாடப்படும் விழாக்களில் தைப்பூசத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

    இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்வார்கள். மேலும் அலகு குத்தியும், பால், பன்னீர், பறவை உள்ளிட்ட காவடிகள் எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான தைப்பூசத் திருவிழா நேற்று முன்தினம் பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்கு முன்னரே வெளி மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் பாத யாத்திரையாக வரத் தொடங்கினர்.

    தற்போது பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கூட்ட நெரிசலை சமாளிக்க மலைக்கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் குடமுழுக்கு நினைவரங்கம் வழியாகவும், கீழே இறங்கும் பக்தர்கள் படிப்பாதை வழியாகவும் செல்ல ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

    நேற்று தை மாத கார்த்திகை என்பதால் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அடிவாரம், கிரி வீதிகளில் பால்குடம், காவடி எடுத்தும், அலகு குத்தியும் அவர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். பழனி மலைக்கோவிலில் நீண்ட நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    ×