என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Textile shop robbery"
ராயபுரம்:
தண்டையார்பேட்டை கும்மாளம்மன் கோவில் தெருவில் ரெடிமேடு துணிக்கடை உள்ளது. இந்த கடையில் விக்னேஷ் என்பவர் வேலை செய்து வருகிறார். 2 நாட்களுக்கு முன்பு 4 பேர் துணி எடுக்க கடைக்கு சென்றனர். ரெடிமேடு துணி வகைகளை எடுத்துக்காட்டிய ஊழியரை தாக்கி ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள துணிகளை கொள்ளை அடித்தனர்.
மேலும் பணப்பெட்டியில் இருந்த ரூ.5 ஆயிரம் ரொக்கத்தையும் எடுத்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். ஜவுளிக் கடையில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து விக்னேஷ் தண்டையார்பேட்டை போலீசில் புகார் செய்தார்.
போலீசார் ஜவுளி கடையில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் கொள்ளையில் ஈடுபட்ட 4 பேரின் உருவமும், தாக்கியதும் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
காசிமேடு பல்லவன் நகர் பகுதியை சேர்ந்த வாலிபர்கள் என தெரிய வந்தது. முகேஷ், விமல், சூர்யா, பிரகாஷ் ஆகியோரை கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து துணிகளையும் போலீசார் கைப்பற்றினார்கள்.
மதுரை தபால்தந்தி நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரகுமார் (வயது 42). இவர் மகால் சாலையில் ஜவுளிக் கடை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை அடைத்துச் சென்று விட்டார். நேற்று காலை கடைக்கு வந்த அவர் பொருட்கள் சிதறிக் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து தெற்குவாசல் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தியபோது ஜவுளிக்கடையின் 3-வது மாடி ஜன்னலை உடைத்து யாரோ உள்ளே வந்திருப்பது தெரியவந்தது.
கடையில் இருந்த ரூ.1 லட்சத்து 12 ஆயிரம் மற்றும் கம்ப்யூட்டர், சி.சி.டி.வி. ஆகியவற்றின் ஹார்டு டிஸ்க்குகள் கொள்ளை போயிருப்பதாக போலீசாரிடம் ராஜேந்திரகுமார் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எஸ்.எஸ்.காலனி கிருஷ்ணன் தெருவைச் சேர்ந்த சந்திரன் மனைவி மணிமாலா (44) போலீசில் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:-
விராட்டிப்பத்து பகுதியில் உள்ள ஷாப்பிங் காம்ப்ளக்சில் திருமங்கலம் ஊத்துப்பட்டியைச் சேர்ந்த சசிகுமார், அவரது மனைவி ஜெயஸ்ரீ, கூடல்நகர் ரமேஷ்குமார், சவுந்தர பாண்டி ஆகியோர் கூட்டாக ஓட்டல் நடத்தி வருகின்றனர்.
ரூ.5 லட்சம் அட்வான்ஸ், மாத வாடகை ரூ.30 ஆயிரம் என்று பேசி வாடகைக்கு விட்டேன். ஆனால் பணத்தை சரிவர கொடுக்காமல் போலி ஆவணம் தயாரித்து குத்தகையை கால நீட்டிப்பு செய்து 4 பேரும் மோசடி செய்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
அதன்பேரில் எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்