என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தண்டையார்பேட்டையில் ஜவுளிக்கடை ஊழியரை தாக்கி துணி கொள்ளை - 4 வாலிபர்கள் கைது
ராயபுரம்:
தண்டையார்பேட்டை கும்மாளம்மன் கோவில் தெருவில் ரெடிமேடு துணிக்கடை உள்ளது. இந்த கடையில் விக்னேஷ் என்பவர் வேலை செய்து வருகிறார். 2 நாட்களுக்கு முன்பு 4 பேர் துணி எடுக்க கடைக்கு சென்றனர். ரெடிமேடு துணி வகைகளை எடுத்துக்காட்டிய ஊழியரை தாக்கி ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள துணிகளை கொள்ளை அடித்தனர்.
மேலும் பணப்பெட்டியில் இருந்த ரூ.5 ஆயிரம் ரொக்கத்தையும் எடுத்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். ஜவுளிக் கடையில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து விக்னேஷ் தண்டையார்பேட்டை போலீசில் புகார் செய்தார்.
போலீசார் ஜவுளி கடையில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் கொள்ளையில் ஈடுபட்ட 4 பேரின் உருவமும், தாக்கியதும் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
காசிமேடு பல்லவன் நகர் பகுதியை சேர்ந்த வாலிபர்கள் என தெரிய வந்தது. முகேஷ், விமல், சூர்யா, பிரகாஷ் ஆகியோரை கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து துணிகளையும் போலீசார் கைப்பற்றினார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்