search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Testing Camp"

    • தமிழகம் முழுவதும் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது
    • இதனால் இன்று 1.000 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் அமைத்து பொதுமக்களுக்கு பரிசோதனை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது

    நெல்லை:

    தமிழகம் முழுவதும் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் இன்று 1.000 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் அமைத்து பொதுமக்களுக்கு பரிசோதனை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

    121 முகாம்கள்

    அதன்படி நெல்லை மாவட்டத்தில் இன்று 121 இடங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான பள்ளிகளில் நடந்த முகாம்களில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலமாக உடல் வெப்பநிலை கணக்கிடப்பட்டது. அதிக வெப்பநிலை இருந்தவர்களுக்கு மாத்திரைகள் கொடுக்கப்பட்டன. ஒரு சில இடங்களில் மாணவ- மாணவிகள் காய்ச்சல் அதிகமாக இருந்தால் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

    மாநகரப் பகுதியில் கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் 2 குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்கள் பள்ளிகளில் சென்று மாணவ மாணவிகளுக்கு காய்ச்சல் பரிசோதனையை மேற்கொண்டனர். இந்த குழுவில் மருந்தாளுனர்கள், செவிலியர்கள் இருக்குமாறு அமைக்கப்பட்டு இருந்தது. மாநகர பகுதியில் பாட்டப்பத்து ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் வெள்ளம் தாங்கி பிள்ளையார் கோவில் தெரு, டி.எம்.சி. காலனி ஆகிய இடங்களில் காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டது.

    பேட்டை பகுதியில் பாரதியார் உயர்நிலைப்பள்ளி உள்பட 4 பள்ளிகளிலும், கருவேலம் குண்டு தெரு, பாளை மனக்காவலம் பிள்ளை நகர், ரஹ்மத் நகர், பொதிகை நகர், ஆமீன் புரம், ராஜீவ் காந்தி நகர், காயிதே மில்லத் பள்ளி அருகில் மற்றும் ஏராளமான இடங்களில் இன்று காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான பெற்றோர் தங்களது குழந்தைகளை அழைத்து வந்து காய்ச்சல் பரிசோதனையை மேற்கொண்டனர்.

    புதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், அடையார் புற்றுநோய் மையம் இணைந்து புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் ஆரம்ப நிலை கண்டறியும் பரிசோதனை முகாம் கல்லூரி முதல்வர் ராமர் தலைமையில் நடைபெற்றது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், அடையார் புற்றுநோய் மையம் இணைந்து நிலைய வளாகத்தில் புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் ஆரம்ப நிலை கண்டறியும் பரிசோதனை முகாம் கல்லூரி முதல்வர் ராமர் தலைமையில் நடைபெற்றது.
    முகாமில் அடையார் புற்றுநோய் மருத்துவமனை மருத்துவர் ஆறுமுகக்குமரன் கலந்து கொண்டு விழிப்புணர்வு கையேடு வழங்கி கூறுகையில், இந்தியாவில் ஆண்டிற்கு சுமார் 10 லட்சம் பேர் புகையிலையினால் ஏற்படும் நோய்களுக்கு பலியாகின்றனர்.

    புகையிலை பயன்பாட்டில் ஆண்கள் 43, பெண்கள் 16 சதவிகிதம் பேர் புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர். தினமும் சுமார் 2500 பேர் புகையிலை சம்பந்தப்பட்ட நோயினால் உயிரிழக்கின்றனர்.  இளையோர்களான நீங்கள் முதலில் புகையிலை சம்பந்தப்பட்ட பொருட்களை உபயோகப்படுத்தமாட்டோம் என்பதில்  உறுதியாக இருங்கள். இவ்வாறு அவர் கூறினார்.  

    சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொது நலச் சங்கத்தலைவர் மாருதி.க.மோகன்ராஜ் கலந்து கொண்டு பேசும் போது, புகைப்பழக்கம் புகை பிடிப்பவரை மட்டுமல்லாது அவர் உடனிருப்பவரையும் பாதிக்கிறது. புகைப்பிடிப்பதால் புற்றுநோய்  மட்டுமல்லாமல், இருதய நோய், நரம்பு தளர்ச்சி, சுவாசம்  சம்பந்தப்பட்ட நோய்கள் அனைத்தும் ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகம்.  
    மேலும் ரத்தக்குழாய் அடைப்பால் கை, கால், இழப்பு மற்றும் ஆண்மை குறைபாடு ஏற்படலாம். எனவே புகையிலை, பாக்கு  போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய பொருட்கள் உபயோகத்தை  இளைஞர்கள் தவிர்க்க வேண்டும் என்றார். முகாமில் பயிற்சி அலுவலர்கள் ராஜேந்திரன், சுந்தரகணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஜோதிமணி  வரவேற்றார். முடிவில் அலுவலர் ரமேஷ் நன்றி கூறினார். முகாமில் சுமார் 300 பேர் கலந்து கொண்டு பயன்  பெற்றனர். #tamilnews
    ×