என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Government Vocational Training Center"
- டூல் அண்டு டைமேக்கர் தொழிற் பிரிவில் ஒரு காலிப்பணியிடம் உள்ளது.
- வயர்மேன் தொழிற்பிரிவில் ஒரு காலிப்பணியிடம் உள்ளது.
தாராபுரம் :
தாராபுரத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) கைவினைஞர் பயிற்சி திட்டமாக மாற்றப்பட்ட தொழிற் பிரிவுகளில் இரண்டு முழுநேர தற்காலிக ஒப்பந்த பயிற்றுநர் காலி பணியிடங்கள் நிரப்பிட உள்ளன.
1. டூல் அண்டு டைமேக்கர் தொழிற் பிரிவில் ஒரு காலிப்பணியிடம் (முழு நேர தற்காலிக ஒப்பந்த பயிற்றுநர்) உள்ளது. இந்தப் பணியிடமானது மிகவும் பிற்படுத்தப்பட்டோர் /சீர் மரபினர். முன்னுரிமையற்றவர் என்ற இன சுழற்சி அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது. இதற்கு மெக்கானிக்கல் என்ஜினீயரிங் டிகிரி/ டிப்ளமோ மற்றும் என்.டி.சி. டூல் அண்டுடை மேக்கர் தொழிற் பிரிவு (பிடி. ஜே&எப்) கல்வித் தகுதி ஆகும்.
2. வயர்மேன் தொழிற்பிரிவில் ஒரு காலிப்பணியிடம் (முழு நேர தற்காலிக ஒப்பந்த பயிற்றுநர்) உள்ளது. இந்தப் பணியிடமானது பிற்படுத்தப்பட்டோர் (பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் தவிர) முன்னுரிமையற்றவர் என்ற இன சுழற்சி அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது. இதற்கு எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் டிகிரி/ டிப்ளமோ மற்றும் என்.டி.சி. வயர்மேன் தொழிற்பிரிவு கல்வித் தகுதி ஆகும்.
என்.டி.சி. ஆக இருப்பின் 3 வருட தொழிற்சாலை அனுபவம், என்.ஏ.சி. ஆக இருப்பின் இரண்டு வருட தொழிற்சாலை அனுபவமும் அதே தொழிற் பிரிவில் இருக்க வேண்டும்.
பத்தாம் வகுப்பு படித்த பின்னர் ஐடிஐ. முடித்தவர்களுக்கு வயது வரம்பு 18 முதல் 34 வரை ஆகும். 12ம் வகுப்பு படித்து விட்டு ஐடிஐ. முடித்தவர்கள் டிப்ளமா ,டிகிரி முடித்தவர்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை. தகுதியான தற்காலிக ஒப்பந்த பயிற்றுநருக்கு மாதம் ரூ.20,000 தொகுப்பூதியமாக வழங்கப்படும். தகுதியுடையவர்கள் உரிய சான்றிதழ்களின் ஒளிப்பட நகல்களுடன் தாராபுரம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்திற்கு நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், தாராபுரம்-638 657 என்ற முகவரிக்கு வரும் 30.8.2022ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். இத்தகவலை தாராபரம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் முதல்வர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், அடையார் புற்றுநோய் மையம் இணைந்து நிலைய வளாகத்தில் புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் ஆரம்ப நிலை கண்டறியும் பரிசோதனை முகாம் கல்லூரி முதல்வர் ராமர் தலைமையில் நடைபெற்றது.
முகாமில் அடையார் புற்றுநோய் மருத்துவமனை மருத்துவர் ஆறுமுகக்குமரன் கலந்து கொண்டு விழிப்புணர்வு கையேடு வழங்கி கூறுகையில், இந்தியாவில் ஆண்டிற்கு சுமார் 10 லட்சம் பேர் புகையிலையினால் ஏற்படும் நோய்களுக்கு பலியாகின்றனர்.
புகையிலை பயன்பாட்டில் ஆண்கள் 43, பெண்கள் 16 சதவிகிதம் பேர் புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர். தினமும் சுமார் 2500 பேர் புகையிலை சம்பந்தப்பட்ட நோயினால் உயிரிழக்கின்றனர். இளையோர்களான நீங்கள் முதலில் புகையிலை சம்பந்தப்பட்ட பொருட்களை உபயோகப்படுத்தமாட்டோம் என்பதில் உறுதியாக இருங்கள். இவ்வாறு அவர் கூறினார்.
சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொது நலச் சங்கத்தலைவர் மாருதி.க.மோகன்ராஜ் கலந்து கொண்டு பேசும் போது, புகைப்பழக்கம் புகை பிடிப்பவரை மட்டுமல்லாது அவர் உடனிருப்பவரையும் பாதிக்கிறது. புகைப்பிடிப்பதால் புற்றுநோய் மட்டுமல்லாமல், இருதய நோய், நரம்பு தளர்ச்சி, சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் அனைத்தும் ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகம்.
மேலும் ரத்தக்குழாய் அடைப்பால் கை, கால், இழப்பு மற்றும் ஆண்மை குறைபாடு ஏற்படலாம். எனவே புகையிலை, பாக்கு போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய பொருட்கள் உபயோகத்தை இளைஞர்கள் தவிர்க்க வேண்டும் என்றார். முகாமில் பயிற்சி அலுவலர்கள் ராஜேந்திரன், சுந்தரகணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஜோதிமணி வரவேற்றார். முடிவில் அலுவலர் ரமேஷ் நன்றி கூறினார். முகாமில் சுமார் 300 பேர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்