search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாராபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தற்காலிக ஒப்பந்த பயிற்றுனர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
    X

    கோப்புபடம்.

    தாராபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தற்காலிக ஒப்பந்த பயிற்றுனர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

    • டூல் அண்டு டைமேக்கர் தொழிற் பிரிவில் ஒரு காலிப்பணியிடம் உள்ளது.
    • வயர்மேன் தொழிற்பிரிவில் ஒரு காலிப்பணியிடம் உள்ளது.

    தாராபுரம் :

    தாராபுரத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) கைவினைஞர் பயிற்சி திட்டமாக மாற்றப்பட்ட தொழிற் பிரிவுகளில் இரண்டு முழுநேர தற்காலிக ஒப்பந்த பயிற்றுநர் காலி பணியிடங்கள் நிரப்பிட உள்ளன.

    1. டூல் அண்டு டைமேக்கர் தொழிற் பிரிவில் ஒரு காலிப்பணியிடம் (முழு நேர தற்காலிக ஒப்பந்த பயிற்றுநர்) உள்ளது. இந்தப் பணியிடமானது மிகவும் பிற்படுத்தப்பட்டோர் /சீர் மரபினர். முன்னுரிமையற்றவர் என்ற இன சுழற்சி அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது. இதற்கு மெக்கானிக்கல் என்ஜினீயரிங் டிகிரி/ டிப்ளமோ மற்றும் என்.டி.சி. டூல் அண்டுடை மேக்கர் தொழிற் பிரிவு (பிடி. ஜே&எப்) கல்வித் தகுதி ஆகும்.

    2. வயர்மேன் தொழிற்பிரிவில் ஒரு காலிப்பணியிடம் (முழு நேர தற்காலிக ஒப்பந்த பயிற்றுநர்) உள்ளது. இந்தப் பணியிடமானது பிற்படுத்தப்பட்டோர் (பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் தவிர) முன்னுரிமையற்றவர் என்ற இன சுழற்சி அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது. இதற்கு எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் டிகிரி/ டிப்ளமோ மற்றும் என்.டி.சி. வயர்மேன் தொழிற்பிரிவு கல்வித் தகுதி ஆகும்.

    என்.டி.சி. ஆக இருப்பின் 3 வருட தொழிற்சாலை அனுபவம், என்.ஏ.சி. ஆக இருப்பின் இரண்டு வருட தொழிற்சாலை அனுபவமும் அதே தொழிற் பிரிவில் இருக்க வேண்டும்.

    பத்தாம் வகுப்பு படித்த பின்னர் ஐடிஐ. முடித்தவர்களுக்கு வயது வரம்பு 18 முதல் 34 வரை ஆகும். 12ம் வகுப்பு படித்து விட்டு ஐடிஐ. முடித்தவர்கள் டிப்ளமா ,டிகிரி முடித்தவர்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை. தகுதியான தற்காலிக ஒப்பந்த பயிற்றுநருக்கு மாதம் ரூ.20,000 தொகுப்பூதியமாக வழங்கப்படும். தகுதியுடையவர்கள் உரிய சான்றிதழ்களின் ஒளிப்பட நகல்களுடன் தாராபுரம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்திற்கு நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், தாராபுரம்-638 657 என்ற முகவரிக்கு வரும் 30.8.2022ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். இத்தகவலை தாராபரம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் முதல்வர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×