search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "temple employee"

    • பணியில் இருந்த பெண் காவலரை தாக்கிய கோவில் ஊழியர் கைது செய்யப்பட்டார்.
    • இருக்கன்குடி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    சாத்தூர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரி யம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு முழு வதும் பல்வேறு பகுதிகளிலி ருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வரு கின்றனர். இதனால் கோவி லில் பாதுகாப்பிற்காக இருக் கன்குடி மற்றும் அப்பயநா யக்கன்பட்டி உள்ளிட்ட காவல் நிலையங்களில் இருந்து காவலர்கள் பாது காப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று அப்பையநாயக்கன்பட்டி காவல் நிலையத்தில் பணிபு ரியும் காளியம்மாள் என்ற பெண் காவலர் கோவில் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டு வந்துள்ளார். அப் போது இருக்கன்குடி மாரி யம்மன் கோவிலில் பணிபுரி யும் மணிசங்கர் என்பவர் பணியில் இருந்த பெண் காவலர் காளியம்மாளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள் ளார்.

    வாக்குவாதம் முற்றியதை யடுத்து அவர் பெண் கா வலரை தாக்கியதாக தெரிகி றது. உடனடியாக இதைப் பார்த்த அருகில் உள்ள காவ லர்கள் காளியம்மாளை காவல் நிலையம் அழைத்து வந்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் பணியில் இருந்த பெண் காவலரை பணி செய்ய விடாமல் தடுத்தல் மற்றும் பெண் என்றும் பாராமல் தாக்கிய குற்றத்திற்காக கோவில் பணியாளர் மணிசங்கரை கைது செய்து இருக்கன்குடி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • கிருஷ்ணன் என்ற கிட்டுசாமி அப்பகுதியில் உள்ள ஒரு கோவிலில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார்.
    • கிருஷ்ணன் உறவினர்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

    நெல்லை:

    நெல்லை அருகே உள்ள மேலச்செவல் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் என்ற கிட்டுசாமி (வயது 55).

    கொலை

    இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கோவிலில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த 15-ந் தேதி ஒரு கும்பல் இவரை வெட்டி கொலை செய்தது. இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 பேரை கைது செய்தனர்.

    இந்நிலையில் கிருஷ்ணன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பேச்சுவார்த்தை

    இதையடுத்து கிருஷ்ணன் குடும்பத்தினர், உறவினர்களிடம் போலீஸ் மற்றும் வருவாய் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். எனினும் நேற்று 5-வது நாளாக அவர்களின் போராட்டம் நீடித்தது.

    இந்நிலையில் அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து கிருஷ்ணன் உடலை பெற்றுக்கொள்ள அவரது குடும்பத்தினர் சம்மதித்தனர். பின்னர் இன்று காலை கிருஷ்ணனின் உறவினர்கள் பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கிருஷ்ணன் உடலை பெற்றுச்சென்றனர்.

    திண்டுக்கல்லில் கோவில் ஊழியர் மற்றும் வியாபாரியை தாக்கி பணம் மற்றும் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே உள்ள நல்லமனார்கோட்டையைச் சேர்ந்தவர் சவுந்தரராஜன் (வயது 40). இவர் பெரியகுளம் கருப்பணசாமி கோவிலில் அறங்காவலராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு பெரியகுளத்தில் இருந்து திண்டுக்கல் பஸ் நிலையம் வந்தார்.

    இரவு நேரம் என்பதால் அவரது ஊருக்கு செல்ல பஸ் கிடைக்கவில்லை. அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் தான் கரூர் ரோட்டில் செல்வதாகவும், நல்லமனார்கோட்டையில் இறக்கி விடுவதாகவும் கூறியுள்ளார்.

    அதனை நம்பி அவரது வண்டியில் சவுந்தரராஜன் ஏறினார். செல்லமந்தாடி அருகே வந்தபோது கீழே இறங்கி திடீரென சவுந்தரராஜன் தலையில் கல்லால் தாக்கி கீழே தள்ளினார். பின்னர் அவரிடம் இருந்த ரூ.2 ஆயிரம் பணம், ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்துக் கொண்டு ஓடி விட்டார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அவ்வழியே ரோந்து வந்த போலீசார் மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இது குறித்து தாடிக்கொம்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இப்பகுதியில் அடிக்கடி இதே போல் வழிப்பறி நடைபெறுவதால் இரவு நேரங்கள் மட்டு மின்றி பகலிலும் பொதுமக்கள் நடமாட அச்சமடைந்துள்ளனர்.

    இதேபோல் திண்டுக்கல் காந்திஜி புதுரோடு பகுதியைச் சேர்ந்தவர் காதர்பாட்ஷா. (38). வியாபாரி. இவர் நேற்று இரவு தனது வீட்டு அருகே நடந்து சென்று கொண்டு இருந்த போது 10 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து தாக்கி அவர் கழுத்தில் அணிந்திருந்த நகையை பறித்துக் கொண்டு சென்று விட்டனர்.

    படுகாயமடைந்த அவர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து நகர் தெற்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல் நகர் மற்றும் புறநகர் பகுதியில் இரவு நேர வழிப்பறி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முகூர்த்த நாட்கள், பண்டிகை, விசே‌ஷ நாட்கள் அடுத்தடுத்து வரும் நிலையில் இரவு நேர கொள்ளையர்களை போலீசார் கண்டறிந்து அவர்களை கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    ×