search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண் காவலரை தாக்கிய கோவில் ஊழியர் கைது
    X

    பெண் காவலரை தாக்கிய கோவில் ஊழியர் கைது

    • பணியில் இருந்த பெண் காவலரை தாக்கிய கோவில் ஊழியர் கைது செய்யப்பட்டார்.
    • இருக்கன்குடி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    சாத்தூர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரி யம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு முழு வதும் பல்வேறு பகுதிகளிலி ருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வரு கின்றனர். இதனால் கோவி லில் பாதுகாப்பிற்காக இருக் கன்குடி மற்றும் அப்பயநா யக்கன்பட்டி உள்ளிட்ட காவல் நிலையங்களில் இருந்து காவலர்கள் பாது காப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று அப்பையநாயக்கன்பட்டி காவல் நிலையத்தில் பணிபு ரியும் காளியம்மாள் என்ற பெண் காவலர் கோவில் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டு வந்துள்ளார். அப் போது இருக்கன்குடி மாரி யம்மன் கோவிலில் பணிபுரி யும் மணிசங்கர் என்பவர் பணியில் இருந்த பெண் காவலர் காளியம்மாளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள் ளார்.

    வாக்குவாதம் முற்றியதை யடுத்து அவர் பெண் கா வலரை தாக்கியதாக தெரிகி றது. உடனடியாக இதைப் பார்த்த அருகில் உள்ள காவ லர்கள் காளியம்மாளை காவல் நிலையம் அழைத்து வந்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் பணியில் இருந்த பெண் காவலரை பணி செய்ய விடாமல் தடுத்தல் மற்றும் பெண் என்றும் பாராமல் தாக்கிய குற்றத்திற்காக கோவில் பணியாளர் மணிசங்கரை கைது செய்து இருக்கன்குடி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×