search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "temple bank"

    • கோவிலில் இருந்த ஒரு உண்டியல் திருடப்பட்டு இருந்தது
    • போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    தாளவாடி:

    தாளவாடி அருகே உள்ள ஓங்கன் புரம் என்ற ஊரில் சாமுண்டீஸ்வரி கோவில் உள்ளது. இந்த கோவிலில் 2 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு கோவில் பூசாரி வழக்கம் போல கோவிலை பூட்டி சென்றார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு கோவிலில் இருந்து சத்தம் கேட்டது. இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஓடிவந்து பார்த்தனர்.

    அப்போது கோவிலில் இருந்த 2 உண்டியலில் ஒரு உண்டியல் திருடப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் தாளவாடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    சம்பவ இடத்துக்கு சப்-இன்ஸ்பெக்டர் ரத்தினம் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    அப்போது திருடப்பட்ட உண்டியலில் சுமார் ரூ.10 ஆயிரம் இருக்கலாம் என்று தெரியவந்தது. மேலும் இது தொடர்பாக கோவிலில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராவை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • உண்டியலில் இருந்த ரூ.20 ஆயிரம் கொள்ளையடிக்க ப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்டது யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி:

    கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள சுக்குவாரி பாளையம் பகுதியில் கொண்ண மரத்தையன் கோவில் உள்ளது. இத கோவில் பூசாரி தங்கவேல் தினமும் காலை கோவிலுக்கு வந்து பூைஜ செய்து விட்டு இரவில் பூட்டி விட்டு செல்வது வழக்கம்.

    இந்த கோவிலுக்கு தின மும் சுற்று வட்டார பகுதி களை சேர்ந்த பொதுமக்கள் பலர் வந்து சாமி தரிசனம் செய்து உண்டியலில் காணி க்கை செலுத்தி விட்டு செல்வார்கள்.

    இந்த நிலையில் கோவில் பூசாரி தங்கவேல் நேற்று முன்தினம் பூைஜ செய்வ தற்காக வழக்கம் போல் கோவிலை திறந்தார். அப்போது அந்த பகுதியில் இருந்த கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு இருந்தது. இதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    இதையடுத்து பூசாரி கோவில் தர்மகர்த்த தன வேலுக்கு தகவல் கொடுத் தார். அவர் கோவிலுக்கு வந்து பார்த்தார். அப்போது உண்டியலில் இருந்த ரூ.20 ஆயிரம் கொள்ளையடிக்க ப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

    இது குறித்து கோவில் தர்மகர்த்த தனவேல் சிறு வலூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்டது யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×