search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில் உண்டியல் கொள்ளை
    X

    கோவில் உண்டியல் கொள்ளை

    • கோவிலில் இருந்த ஒரு உண்டியல் திருடப்பட்டு இருந்தது
    • போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    தாளவாடி:

    தாளவாடி அருகே உள்ள ஓங்கன் புரம் என்ற ஊரில் சாமுண்டீஸ்வரி கோவில் உள்ளது. இந்த கோவிலில் 2 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு கோவில் பூசாரி வழக்கம் போல கோவிலை பூட்டி சென்றார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு கோவிலில் இருந்து சத்தம் கேட்டது. இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஓடிவந்து பார்த்தனர்.

    அப்போது கோவிலில் இருந்த 2 உண்டியலில் ஒரு உண்டியல் திருடப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் தாளவாடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    சம்பவ இடத்துக்கு சப்-இன்ஸ்பெக்டர் ரத்தினம் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    அப்போது திருடப்பட்ட உண்டியலில் சுமார் ரூ.10 ஆயிரம் இருக்கலாம் என்று தெரியவந்தது. மேலும் இது தொடர்பாக கோவிலில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராவை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×