search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tax arrears"

    • தொழில்துறையினர் சாயமிடுதலுக்காக துணிகளை ஜாப்ஒர்க் அடிப்படையில் சாய ஆலைகளுக்கு அனுப்பி வருகிறது.
    • வரி செலுத்த தவறியவர்களுக்கு வங்கி கடனை முடக்குவதாக அச்சுறுத்தல்கள் வருகின்றன.

    திருப்பூர்:

    தமிழ்நாடு வணிகத்துறை சார்பில் அனைத்து வணிக சங்க பிரதிநிதிகளின் கருத்து கேட்பு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் திருப்பூர் சைமா சங்கம் சார்பில் பொதுச்செயலாளர் கீதாஞ்சலி கோவிந்தப்பன் கலந்து கொண்டு 2 மனுக்களை தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தியிடம் வழங்கினார். அந்த மனுக்களில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தொழில்துறையினர் சாயமிடுதலுக்காக துணிகளை ஜாப்ஒர்க் அடிப்படையில் சாய ஆலைகளுக்கு அனுப்புவதும், அதன் அடிப்படையில் வரவு, செலவு செய்வதும் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த நடைமுறையின் போது சாய ஆலைகள் செலுத்த வேண்டிய வாட் வரிக்கு ஏன் டி.டி.எஸ். பிடித்தம் செய்து கட்டவில்லை என்று கூறி அபராதத்துடன் கட்டுமாறு அறிக்கை அனுப்பப்படுகிறது.

    வாட் சட்டப்படி பதிவு செய்யப்பட்ட சாய ஆலைகளிடம் இருந்து வரி வசூலிக்க வாய்ப்பு இருக்கும்போது பின்னலாடை நிறுவனங்களிடம் கேட்பது நியாயமான ஒன்றல்ல. மேலும் வணிக வரித்துறை உத்தரவின்படி டி.டி.எஸ். பிடித்தம் செய்ய வேண்டியதில்லை என்று ஈரோடு ஜவுளி வியாபாரிகள் சங்கத்திற்கு கடிதம் வழங்கப்பட்டுள்ளது. எங்களது சில நிறுவனங்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வணிக வரித்துறை அதிகாரிகள் அனுப்பிய அறிக்கைகளை மறுபரிசீலனை செய்யவும் உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.

    எனவே கடந்த 10, 15 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற வியாபார பரிவர்த்தனைகளில் வரி நிலுவை உள்ளதாக அனுப்பப்படும் அனைத்து அறிக்கைகளையும் ரத்து செய்ய உத்தரவிட வேண்டும். மேலும் பாரம்பரியமிக்க தொழிலை இதுபோன்ற சிரமங்களில் இருந்து மீட்டு தர வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இதேபோல் மற்றொரு மனுவில், பனியன் தொழிலில் வெளி மாநில விற்பனைக்கான சி படிவம் சமர்ப்பித்து 1 சதவீத வரி செலுத்தும் ஆணை நீண்ட காலமாக நடைமுறையில் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத்தப்பட்டபோது சி படிவம் சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது. இந்த சூழலில் 1 சதவீத வரி செலுத்தி கணக்கு முடித்த உறுப்பினர்களுக்கு கூட 2002-2003-ம் ஆண்டு அதாவது 10, 20 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள கணக்குகள் குறித்து கேட்பு அறிக்கைகள் வருகின்றன. வரி செலுத்த தவறியவர்களுக்கு வங்கி கடனை முடக்குவதாக அச்சுறுத்தல்கள் வருகின்றன.

    எனவே 1 சதவீத வரி கட்டிய எங்களது சங்க உறுப்பினர்களின் கணக்கை ஏற்றுக் கொள்ளவும், 10 ஆண்டுகளுக்கு மேலான கணக்குகளுக்கு கேட்பு அறிக்கை அனுப்புவதை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • உடனடியாக செலுத்த ஆணையாளர் வேண்டுகோள்
    • குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என எச்சரிக்கை

    தூசி:

    செய்யாறில் உள்ள திருவத்திபுரம் நகராட்சி ஆணையாளர் கி.ரகுராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்ப தாவது:-

    திருவத்திபுரம் நகராட்சியில் சொத்து வரி, காலி மனை வரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம், கடை வாடகை என மொத்தம் ரூ.2 கோடியே 66 லட்சத்து 30 ஆயிரம் நிலுவை பாக்கியாக உள்ளது. நிலுவை பாக்கி அதிகமாக வைத்துள்ள காரணத்தினால் பொது மக்களுக்கு தேவையான வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள முடியாமல் உள்ளது.

    பொதுமக்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை செலுத்தினால் வசதியாக இருக்கும். இதற்காக ஞாயிற்றுக்கிழமைகளில் வரி வசூல் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. மேலும் திருவத்திபுரம் நகராட்சி அலுவலர்கள் அனைத்து வார்டுகளில் தீவிர வசூல் பணி யினை மேற்கொள்ள உள்ளனர்.

    வரிகளை செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் ஜப்தி நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். எனவே பொதுமக்கள் அனைத்து வரிக ளையும் உடனே செலுத்தி நகராட்சிக்கு உதவிட வேண்டும். இவ்வாறு'அதில் கூறப்பட்டுள்ளது.

    • நகராட்சி ஆணையர் வேண்டுகோள்
    • வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள ஒத்துழைக்க வலியுறுத்தல்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை நகராட்சி ஆணையர் பழனி விடுத் துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    ஜோலார்பேட்டை நகராட்சியில் 18 வார்டுகளில் சொத்து வரி, குடிநீர் கட்டணம், காலிமனை வரி என மொத்தம் ரூ.1 கோடியே 26 லட்சம் வரி மற்றும் வரியில்லா இனங்களில் நகராட்சிக்கு வரி செலுத்தாமல் நிலுவையாக உள்ளது.

    வருகிற மார்ச் மாதம் 15-ந் தேதிக்குள் நிலுவை தாரர்கள் வரி இனங் களை சிரமமின்றி செலுத்துவதற்கு ஏதுவாக மார்ச் மாதம் 31-ந் தேதி வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் உள்பட அனைத்து நாட்களும் காலை 9 மணி முதல் மாலை 5 வரை நகராட்சியில் கணினி வசூல் மையம் செயல்படும்.

    மேலும் நிலுவைதாரர்கள் h://turbarepay.g என்ற இணையதளம் மூல மாகவும் ஜோலார்பேட்டை நகராட்சியை தேர்வு செய்து வரி மற்றும் வரியில்லாத இளங்களின் தொகையை உடனே செலுத்தவும் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    வரி நிலுவை வைத்துள்ள நிலுவைதாரர்கள் உடனடியாக மார்ச் மாதம் 15-ந் தேதிக்குள் வரி பாக்கியை நிலுவையின்றி செலுத்தி ஜப்தி நடவடிக்கை, குடிநீர் இணைப்புதுண் டிப்பு மற்றும் நீதிமன்ற நடவடிக்கையை தவிர்க்குமாறும், நகராட்சியின் வளர்ச்சி பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள ஒத்துழைப்பு கொடுக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் வாடகை பாத்திரம் குடோன் உரிமையாளர் சொத்து வரி கட்டாததால் கடைக்கு சீல் வைத்து கடும் நடவடிக்கை மேற்கொண்டனர்.
    • வரி வசூல் செய்வதற்கு நூதன முறையில் குப்பை தொட்டிகளை வள்ளியம்மை பஜார் முன்பு வைக்கப்பட்டன.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சொத்து வரி, குடிநீர் வரி, மாநகராட்சி கடை வாடகைகள் உள்ளிட்ட பல்வேறு வரிகளை மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா அறிவுறுத்தலின் பேரில், மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன் தலைமையில், அதிகாரிகள் தீவிர வரி வசூல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் வாடகை பாத்திரம் குடோன் உரிமையாளர் சொத்து வரி கட்டாததால் கடைக்கு சீல் வைத்து கடும் நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த நிலையில் கடலூர் மாநகராட்சி சார்பில் தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வரிகள் மற்றும் மாநகராட்சி கடை வாடகையை உடனடியாக கட்ட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்‌. இந்த நிலையில் கடலூரில் மிக முக்கிய சாலையாக இருந்தவரும் லாரன்ஸ் சாலையில் வள்ளியம்மை பஜார் உள்ளது.

    இங்குள்ள ஒரு சில கடைகளுக்கு சொத்து வரி பாக்கி இருப்பதாக மாநகராட்சி சார்பில் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு, வரி கட்ட வேண்டும் என வலியுறுத்தப் பட்டு வந்தனர். இன்று காலை கடலூர் மாநகராட்சி சார்பில் வரி வசூல் செய்வதற்கு நூதன முறையில் குப்பை தொட்டிகளை வள்ளியம்மை பஜார் முன்பு வைக்கப்பட்டன. இதனை பார்த்த வியாபாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பொதுமக்கள் வியாபாரிகள் உள்ளிட்ட யாரும் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் வியாபாரிகள் தரப்பில் கடலூர் மாநகராட்சி அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். கடலூர் மாநகராட்சியில் தற்போது 78 கோடிக்கு மேல் வரி பாக்கி உள்ள நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் வசூலில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நூதன முறையில் வியாபாரிகள் வரி கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பரமக்குடி நகராட்சிக்கு வரி பாக்கி செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    • நகராட்சியில் வரி வசூல் 100 சதவீதம் இருந்தால் மட்டுமே நகர வளர்ச்சிக்கு தேவையான திட்ட பணிகளை உடனுக்குடன் செய்ய முடியும் என்றார்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சிக்கு சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி, காலியிட வரி, குத்தகை பாக்கியை நீண்ட நாட்கள் கட்டாமல் வைத்துள்ளவர்களின் பெயர் பட்டியல் விவரங்களை நாளிதழ்கள், விளம்பர பதாதைகள் மூலம் வெளியிடப்படும் என நகராட்சி ஆணையாளர் திருமால் செல்வம் எச்ச ரித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது:-

    பரமக்குடி நகராட்சியில் 36 வார்டுகளில் வசிக்கும் பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நகராட்சி நிதியில் இருந்து மேற்கொள்ள திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் நகராட்சி மூலம் அறிவிப்புகள் வழங்கியும், நகராட்சி பணி யாளர்கள் தொடர்ந்து வலி யுறுத்தியும் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், உடனுக்குடன் செய்ய இயலாத சூழ்நிலை உள்ளது.நகராட்சி சட்ட விதி களின்படி ஒவ்வொரு ஆண்டும் முதல் அரை யாண்டுக்கான சொத்து வரியை ஏப்ரல் 31-ந் தேதிக்குள், 2-ம் அரை யாண்டுக்கான சொத்து வரியினை அக்டோபர் 30-ந் தேதிக்குள்ளும் நகராட்சிக்கு செலுத்த வேண்டும். நகராட்சியில் வரி வசூல் 100 சதவீதம் இருந்தால் மட்டுமே நகர வளர்ச்சிக்கு தேவையான திட்ட பணிகளை உடனுக்குடன் செய்ய முடியும்.

    எனவே சொத்து வரி விதிப்புதாரர்கள், குடிநீர் கட்டண நிலுவைதாரர்கள், காலிமனை வரி நிலுவை தாரர்கள் கடை மற்றும் குத்தகைதாரர்கள் தொழில் வரி இதர கட்டணங்களை நகராட்சிக்கு செலுத்தாமல் நிலுவை வைத்துள்ள அனைவரும் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் கட்டணங்களை 7 தினங்களுக்குள் நகராட்சி கருவூலத்தில் செலுத்த வேண்டும். பொதுமக்கள் நலன் கருதி சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வரி வசூல் மையம் செயல்படும்.அதே நேரம் அறிவிப்பு கள், தொடர் அறிவிப்பு கள் மூலமும் நகராட்சி பணியாளர்களால் பல முறை வலியுறுத்தியும், இதுவரை வரி மற்றும் கட்டணம் செலுத்தாத நிலுவைதாரர்களின் பெயர் பட்டியல், நாளிதழ்கள் மற்றும் விளம்பர பலகை மூலம் வெளியிட்டும் 1920-ம் ஆண்டு மாவட்ட நகராட்சிகளின் சட்ட பிரிவுகளின் படி ஜப்தி மற்றும் சீல் வைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×