search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜோலார்பேட்டை நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கியை வருகிற 15-ந்தேதிக்குள் செலுத்த வேண்டும்
    X

    ஜோலார்பேட்டை நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கியை வருகிற 15-ந்தேதிக்குள் செலுத்த வேண்டும்

    • நகராட்சி ஆணையர் வேண்டுகோள்
    • வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள ஒத்துழைக்க வலியுறுத்தல்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை நகராட்சி ஆணையர் பழனி விடுத் துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    ஜோலார்பேட்டை நகராட்சியில் 18 வார்டுகளில் சொத்து வரி, குடிநீர் கட்டணம், காலிமனை வரி என மொத்தம் ரூ.1 கோடியே 26 லட்சம் வரி மற்றும் வரியில்லா இனங்களில் நகராட்சிக்கு வரி செலுத்தாமல் நிலுவையாக உள்ளது.

    வருகிற மார்ச் மாதம் 15-ந் தேதிக்குள் நிலுவை தாரர்கள் வரி இனங் களை சிரமமின்றி செலுத்துவதற்கு ஏதுவாக மார்ச் மாதம் 31-ந் தேதி வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் உள்பட அனைத்து நாட்களும் காலை 9 மணி முதல் மாலை 5 வரை நகராட்சியில் கணினி வசூல் மையம் செயல்படும்.

    மேலும் நிலுவைதாரர்கள் h://turbarepay.g என்ற இணையதளம் மூல மாகவும் ஜோலார்பேட்டை நகராட்சியை தேர்வு செய்து வரி மற்றும் வரியில்லாத இளங்களின் தொகையை உடனே செலுத்தவும் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    வரி நிலுவை வைத்துள்ள நிலுவைதாரர்கள் உடனடியாக மார்ச் மாதம் 15-ந் தேதிக்குள் வரி பாக்கியை நிலுவையின்றி செலுத்தி ஜப்தி நடவடிக்கை, குடிநீர் இணைப்புதுண் டிப்பு மற்றும் நீதிமன்ற நடவடிக்கையை தவிர்க்குமாறும், நகராட்சியின் வளர்ச்சி பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள ஒத்துழைப்பு கொடுக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×