search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tarun agarwal committee"

    ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும், மூட வேண்டும் என கருத்து கூறுவதற்கு தருண் அகர்வால் குழுஹவக்கு அதிகாரம் கிடையாது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். #SterlitePlant #KadamburRaju
    கோவில்பட்டி:

    கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

    அரசு துறையில் உள்ள ஒரு அதிகாரி ஓய்வு பெறும் போது, அந்த இடத்துக்கு மற்றொரு அதிகாரியை நியமிப்பது என்பது மரபு. அந்த வகையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் ஓய்வு பெற்ற காரணத்தால், அபய்குமார்சிங் என்ற அதிகாரியை அரசு நியமித்தது. ஆனால் சிலை கடத்தல் வழக்கில் தொய்வு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக பொன் மாணிக்கவேல் தொடர வேண்டும் என நீதிமன்றம் அறிவித்திருக்கலாம்.

    இதில் ஆட்சேபிக்க ஒன்றுமில்லை. இது நீதிமன்றத்தின் முடிவு. அரசால் அறிவிக்கப்பட்டவரும், அந்த பணியை செய்வார். அவர் விசாரித்த வழக்குகள் முடிவடையாததால், பொன் மாணிக்கவேலுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

    தமிழக அரசு மக்களின் உணர்வுகளை மதிக்கிறது. தருண் அகர்வால் குழுவுக்கு அந்த அக்கறை இல்லை. அவர்கள் வந்த காரணம், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த பிரச்சனை என்ன? அந்த ஆலையின் தன்மை என்ன? என்பது குறித்து மட்டும் தான் விசாரிக்க அனுப்பப்பட்டனர்.

    ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும், மூட வேண்டும் என கருத்து கூறுவதற்கு அவர்களுக்கு அதிகாரம் கிடையாது. அது மாநில அரசின் கையில் தான் உள்ளது. அவர்கள் தங்கள் கருத்தாக பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கையை வழங்கியுள்ளனர்.


    பசுமை தீர்ப்பாயம் என்ன நிலைப்பாட்டை எடுத்தாலும், இறுதியாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அந்த ஆலையின் உரிமம் புதுப்பித்தால் தான் ஆலை இயங்க முடியும் என்பதில் அரசு தெளிவாக உள்ளது. தவறான கருத்துகளை பரப்பிய காரணத்தால் தான் 13 உயிர்கள் பறிபோகி விட்டன. இனியும் இதுபோன்ற நிலைக்கு மக்களை தூண்டிவிட வேண்டாம். எனவே இதனை அரசியலாக்கி பார்க்க வேண்டாம்.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதற்கட்டமாக தான் ஒரு லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். ஒரு லட்சம் வீடுகள் மட்டும் தான் கட்டித்தரப்படும் என கூறவில்லை. மக்களின் பாதிப்புகளை கூட அரசியல் செய்கின்ற நிலை தமிழகத்தில் உள்ளது. இது ஆரோக்கியமான அரசியல் அல்ல.

    திரைத்துறையை பாதுகாப்பதற்காக திருட்டு விசிடிக்கு தனியாக சட்டம் கொண்டு வந்தது அ.தி.மு.க. அரசு தான். அந்த சட்டம் அப்படியே நிலுவையில் உள்ளது. அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த திரைத்துறையினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் ஒருமித்த கருத்துடன் வந்தால், அந்த சட்டத்தை மிக வேகமாக நடைமுறைப்படுத்தி முழுமையாக திருட்டு விசிடி இல்லாத நிலையை உருவாக்க அரசு தயாராக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #SterlitePlant #KadamburRaju
    ஸ்டெர்லைட் தொடர்பாக வல்லுநர் குழு அளித்த அறிக்கை எதிர்பார்த்ததுதான் என்றும், ஆட்சியாளர்கள் மக்களை ஏமாற்றிவிட்டதாகவும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்த முன்னாள்  நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழு, தனது ஆய்வறிக்கை மற்றும் பரிந்துரைகளை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில் ஸ்டெர்லைட் ஆலையை மூடப்பட்டது நீதிக்கு எதிரானது என்றும், சில நிபந்தனைகளுடன் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி தரலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை ஆய்வு செய்த பசுமை தீர்ப்பாயம், இதுபற்றி தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்துள்ளது.

    பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கை தமிழக அரசுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. ஆனால், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஆலை மூடப்பட்டதாகவும், ஆலை மீண்டும் திறக்கப்படாது என்றும் ஆட்சியாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.



    இந்நிலையில், பா.மக. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை ஏற்க முடியாது என வல்லுனர் குழு அறிக்கை தாக்கல். இது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது தான். நான் முன்பே கூறியதுதான். புத்தாண்டில் ஆலை திறக்கப்படுவது உறுதி. உலக நீதிமன்றத்துக்கே சென்றாலும் ஆலையை திறக்க முடியாது என்று கூறிய ஆட்சியாளர்கள் மக்களை ஏமாற்றி விட்டனர்” என்று கூறியுள்ளார்.

    ஸ்டெர்லைட் ஆலை தரப்பு வக்கீல்களில் ஒருவரான அரிமா சுந்தரம் இன்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது, “தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சாதகமான சூழ்நிலை உருவாகி உள்ளது” என்றார். #SterliteProtest #SterliteClosureOrder #NGT 
    ஸ்டெர்லைட் வழக்கில் தருண் அகர்வால் குழு அறிக்கை தாக்கல் செய்ததையடுத்து, தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யும்படி தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. #NGT #NationalGreenTribunal #SterliteCase
    புதுடெல்லி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த தீர்ப்பாயம், நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு அனுமதி அளித்தும், ஆலையை ஆய்வு செய்ய மேகாலயா ஐகோர்ட்டின் முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை அமைத்தும் உத்தரவு பிறப்பித்தது.

    அத்துடன், ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யுமாறும் கூறியது.

    இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு கடந்த செப்டம்பர் 10-ந் தேதியன்று தள்ளுபடி செய்யப்பட்டது. மீண்டும் தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு கடந்த 26-ந் தேதியன்று தள்ளுபடி செய்யப்பட்டது.

    இதற்கிடையே, தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமித்த நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான மூவர் குழுவினர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலும் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் ஆய்வு நடத்தினர், சென்னை நகரிலும் விசாரணை மேற்கொண்டனர். ஆய்வுப் பணிகள் முடிவடைந்த நிலையில், நேற்று முன்தினம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.


    அந்த அறிக்கையில், ஸ்டெர்லைட் ஆலையை சில நிபந்தனைகளுடன் மீண்டும் செயல்பட அனுமதி தரலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூடியது நீதிக்கு எதிரானது என்றும் கூறியுள்ளது.

    இந்நிலையில் ஸ்டெர்லைட் வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தருண் அகர்வால் குழுவின் அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள், இந்த அறிக்கைக்கு தமிழக அரசு ஒரு வாரத்திற்குள் பதில் மனுதாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை டிசம்பர் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.  #NGT #NationalGreenTribunal #SterliteCase
    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை சில நிபந்தனைகளின் பேரில் செயல்பட அனுமதி அளிக்கலாம் என தருண் அகர்வால் தலைமையிலான குழு பரிந்துரை செய்துள்ளது. #SterliteProtest #SterliteClosureOrder #NGT
    புதுடெல்லி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் தீவிர போராட்டம் நடைபெற்றது. ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிப்பதாகவும், பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுவதாகவும் கூறி நடந்த இந்த போராட்டம் வன்முறையில் முடிந்தது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகினர். இதனை அடுத்து அந்த ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது.

    இதை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த தீர்ப்பாயம், நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு அனுமதி அளித்தும், ஆலையை ஆய்வு செய்ய மேகாலயா ஐகோர்ட்டின் முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை அமைத்தும் உத்தரவு பிறப்பித்தது.

    அத்துடன், ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யுமாறும் அந்த உத்தரவில் கூறப்பட்டு இருந்தது.


    அதன்படி ஆய்வு நடத்திய தருண் அகர்வால் குழு நேற்று முன்தினம் அறிக்கையை தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்தது.

    அந்த அறிக்கையில், ஸ்டெர்லைட் ஆலையை சில நிபந்தனைகளுடன் மீண்டும் செயல்பட அனுமதி தரலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூடியது நீதிக்கு எதிரானது என்றும் கூறியுள்ளது. இந்த அறிக்கை தமிழக அரசுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. இந்த அறிக்கையின் அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்க உள்ளது. #SterliteProtest #SterliteClosureOrder #NGT
    ×