search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டெர்லைட் வல்லுநர் குழு அறிக்கை எதிர்பார்த்ததுதான்- ராமதாஸ்
    X

    ஸ்டெர்லைட் வல்லுநர் குழு அறிக்கை எதிர்பார்த்ததுதான்- ராமதாஸ்

    ஸ்டெர்லைட் தொடர்பாக வல்லுநர் குழு அளித்த அறிக்கை எதிர்பார்த்ததுதான் என்றும், ஆட்சியாளர்கள் மக்களை ஏமாற்றிவிட்டதாகவும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்த முன்னாள்  நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழு, தனது ஆய்வறிக்கை மற்றும் பரிந்துரைகளை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில் ஸ்டெர்லைட் ஆலையை மூடப்பட்டது நீதிக்கு எதிரானது என்றும், சில நிபந்தனைகளுடன் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி தரலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை ஆய்வு செய்த பசுமை தீர்ப்பாயம், இதுபற்றி தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்துள்ளது.

    பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கை தமிழக அரசுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. ஆனால், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஆலை மூடப்பட்டதாகவும், ஆலை மீண்டும் திறக்கப்படாது என்றும் ஆட்சியாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.



    இந்நிலையில், பா.மக. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை ஏற்க முடியாது என வல்லுனர் குழு அறிக்கை தாக்கல். இது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது தான். நான் முன்பே கூறியதுதான். புத்தாண்டில் ஆலை திறக்கப்படுவது உறுதி. உலக நீதிமன்றத்துக்கே சென்றாலும் ஆலையை திறக்க முடியாது என்று கூறிய ஆட்சியாளர்கள் மக்களை ஏமாற்றி விட்டனர்” என்று கூறியுள்ளார்.

    ஸ்டெர்லைட் ஆலை தரப்பு வக்கீல்களில் ஒருவரான அரிமா சுந்தரம் இன்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது, “தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சாதகமான சூழ்நிலை உருவாகி உள்ளது” என்றார். #SterliteProtest #SterliteClosureOrder #NGT 
    Next Story
    ×