என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொடர் மின்தடை"

    • சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
    • உடையாம்பாளையம், வெள்ளக்கிணறு ஹவுசிங் யூனிட் பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.

    கோவை:

    சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (4-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதையொட்டி அங்கிருந்து மின் வினியோகம் செய்யப்படும் பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை செய்யப்படுகிறது.

    அதன்படி சரவணம்பட்டி, அம்மன் கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவானந்தபுரம், வெள்ளக்கிணறு, உருமாண்டம்பாளையம், கவுண்டர்மில், சுப்பிரமணியம் பாளையம், கே.என்.ஜி. புதூர், மணியகாரம்பாளையம் (பகுதி), லட்சுமி நகர், நாச்சிமுத்து நகர், ஜெயபிரகாஷ் நகர், கணபதிபுதூர், உடையாம்பாளையம், வெள்ளக்கிணறு ஹவுசிங் யூனிட் பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.

    • கோவை மத்தம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
    • சாமநாயக்கன்பாளையம் ரோடு, கண்ணார்பாளையம்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    கோவை:

    கோவை மத்தம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதன் காரணமாக இங்கிருந்து மின் வினியோகம் பெறும் பெட்டதாபுரம், தண்ணீர்பந்தல், கோட்டைப்பிரிவு, ஒன்னியம்பாளையம் ரோடு, அறிவொளிநகர், சின்னமத்தம்பாளையம், மத்தம்பாளையம், செல்வபுரம், சாந்திமேடு, பாரதிநகர், சாமநாயக்கன்பாளையம் ரோடு, கண்ணார்பாளையம்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை கு.வடமதுரை செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

    • பழனியை அடுத்த மேல்கரைப்பட்டி துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • சங்கம்பாளையம், பெரிச்சிபாளையம், சரவணப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

    பழனி:

    பழனியை அடுத்த மேல்கரைப்பட்டி துணை மின்நிலையத்தில் நாளை (4-ந் தேதி ) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மேல்கரைப்பட்டி, கீரனூர், கொழுமம்கொண்டான், ஆண்டிநாயக்கன்வலசு, கல்துறை, நால்ரோடு, சந்தன்செட்டிவலசு, சங்கம்பாளையம், பெரிச்சிபாளையம், சரவணப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என பழனி மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

    • 6 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை கபிலர்மலை துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்டும் பகுதிகளுக்கு மின் தடை ஏற்பட்டது.
    • சுமார் 8 மணி நேரத்திற்கு மேலாக நீடித்த மின்தடையால், பொதுமக்கள் கொசு கடியால் தூங்க முடியாமல் அவதிப்பட்டனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை துணை மின் நிலையத்திலிருந்து சுற்றுவட்டார பகுதிகளான கபிலர்மலை, கபிலக்குறிச்சி, பள்ளக்காடு, பெரிய சோளிபாளையம், சின்னசோளி பாளையம், பாகம் பாளையம், ஆனங்கூர், அய்யம்பாளையம், அண்ணா நகர், பொன்மலர் பாளையம், சேளூர், செல்லப்பம்பாளையம், குன்னத்தூர், பாண்டமங்கலம், பொத்தனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் நேற்று மாலை 6 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை கபிலர்மலை துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்டும் பகுதிகளுக்கு மின் தடை ஏற்பட்டது.

    சுமார் 8 மணி நேரத்திற்கு மேலாக நீடித்த மின்தடையால், பொதுமக்கள் கொசு கடியால் தூங்க முடியாமல் அவதிப்பட்டனர். கபிலர்மலை துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் விநியோகம் செய்யப்படும் பகுதிகளுக்கு அடிக்கடி இதுபோன்று தடை ஏற்பட்டு வருகிறது.

    நேற்று மட்டும் 16 முறைக்கு மேலாக மின்தடை ஏற்பட்டது. மின்வாரிய அதிகாரிகள் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மின்வாரிய அதிகாரியிடம் இது குறித்து கேட்டால், மின்கம்பி செல்லும் வழிநெடுகிலும் தென்னை மரங்கள் இருப்பதாகவும், அடிக்கடி தென்னை மட்டை கம்பிகளில் விழுவதால் மின்தடை ஏற்படுவதாகவும் தெரிவித்தனர்.

    அதேபோல் உயர் அழுத்த மின்சாரம் திடீரென வரும் போது பல பகுதிகளில் கம்பி அறுந்து விழுந்து விடுவதாகவும் தெரிவித்தனர்.

    எனவே இதுகுறித்து உயர் மின்வாரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, தினசரி நீண்ட நேரம் மின்சப்ளை நிறுத்தப்படுவது குறித்து விசாரணை நடத்தி, மின்தடை ஏற்படாமல் மின்சாரம் வழங்க போதுமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×