search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Wards"

    நெல்லை மேலப்பாளையம் மண்டலத்திற்குட்பட்ட வார்டுகளில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர். ராஜூ ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.
    நெல்லை:

    நெல்லை மேலப்பாளையம் மண்டலத்திற்குட்பட்ட   வார்டுகளில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர். ராஜூ மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இன்று காலை ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது 50-வது வார்டிற்கு தேவையான   ஆரம்ப சுகாதார நிலையம், கழிவு நீர் ஓடை, அனைத்து தெருக்களிலும் சாலை அமைத்திட வேண்டும், கன்னிமார்குளம் கரையில் உள்ள கருவேல  மரங்களை அகற்றுதல்,

    குளத்தில் கலக்கும் கழிவுநீர் ஓடையை தனி கால்வாய் கட்டிவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து வார்டு உறுப்பினர் மற்றும்  பல்வேறு தரப்பினர் எடுத்து கூறினர்.  

    அதற்கு கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்றி தருவதாக எம்.எல்.ஏ., மேயர், துணை மேயர் ஆகியோர் வாக்குறுதி அளித்தனர்.

    பின்னர் பஜார் திடல் அருகே பள்ளிக்கு  செல்ல திண்ணையில் காத்திருந்த மாணவர்களிடம் சென்று அருகில் அமர்ந்து அவர்களிடம் நலம் விசாரித்து குறைகளை கேட்டறிந்தனர்.

    மேலப்பாளையம் ஹாமீம்புரம்  மாநகராட்சி ஆரம்பப் பள்ளிக்குச் சென்ற ஆய்வுக் குழுவினர் பள்ளிக்கு தேவையான கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து குறைகளை நிவர்த்தி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

    தொடர்ந்து தனியார் கல்லூரி பகுதியில் தூய்மைப்பணி மற்றும் வளர்ச்சித் திட்ட பணிகளை ஆய்வு செய்தனர். மேலும்  பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டனர்.

    நிகழ்ச்சியில் மாநகராட்சி கவுன்சிலர்கள் ரசூல் மைதீன், ரம்ஜான் அலி, ஆமினா பீவி,  மாநகர செயற்பொறியாளர் நாராயணன், உதவி ஆணையாளர் அய்யப்பன், சுகாதார அலுவலர் சாகுல் ஹமீது, சுகாதார ஆய்வாளர்  அந்தோணி, மேலப்பாளையம் பகுதி தி.மு.க. செயலாளர் துபை சாகுல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    குமாரபாளையம் 3,9-வது வார்டுகளில் நகராட்சி சேர்மன் ஆய்வு செய்தார்.
    குமாரபாளையம்:

    குமாரபாளையம் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் பொறுப்பேற்ற நாள் முதல் தினமும் ஒவ்வொரு வார்டாக சென்று ஆய்வு செய்து, தேவைப்படும் அத்தியாவசிய பணிகள் மேற்ெகாள்ள நடவடிக்கை எடுத்து வருகிறார். 

    நேற்று 9-வது வார்டு ராஜம் தியேட்டர் பகுதியில் ஆய்வு சேர்மன் விஜய்கண்ணன் செய்தார். வார்டு கவுன்சிலர் விஜயா மற்றும் அப்பகுதி மக்கள் சாலை வசதி, வடிகால், குடிநீர் குழாய் உள்ளிட்ட பணிகள் செய்து தர கேட்டுக்கொண்டனர். 

    இதையடுத்து அவர் அதிகாரிகளை வரவழைத்து, பணிகளை மேற்கொள்ளுமாறு  சேர்மன் அறிவுறுத்தினார். அதே போல் 3-வது வார்டிலும் ஆய்வு செய்தார். அப்போது கவுன்சிலர் வேல்முருகன் உடனிருந்தார்.
    ×