என் மலர்
உள்ளூர் செய்திகள்

மேலப்பாளையம் மாநகராட்சி பள்ளியில் அப்துல்வகாப் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார். அருகில் மேயர் சரவணன், துணைமேயர் கே.ஆ
மேலப்பாளையம் பகுதியில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு
நெல்லை மேலப்பாளையம் மண்டலத்திற்குட்பட்ட வார்டுகளில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர். ராஜூ ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.
நெல்லை:
நெல்லை மேலப்பாளையம் மண்டலத்திற்குட்பட்ட வார்டுகளில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர். ராஜூ மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இன்று காலை ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது 50-வது வார்டிற்கு தேவையான ஆரம்ப சுகாதார நிலையம், கழிவு நீர் ஓடை, அனைத்து தெருக்களிலும் சாலை அமைத்திட வேண்டும், கன்னிமார்குளம் கரையில் உள்ள கருவேல மரங்களை அகற்றுதல்,
குளத்தில் கலக்கும் கழிவுநீர் ஓடையை தனி கால்வாய் கட்டிவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து வார்டு உறுப்பினர் மற்றும் பல்வேறு தரப்பினர் எடுத்து கூறினர்.
அதற்கு கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்றி தருவதாக எம்.எல்.ஏ., மேயர், துணை மேயர் ஆகியோர் வாக்குறுதி அளித்தனர்.
பின்னர் பஜார் திடல் அருகே பள்ளிக்கு செல்ல திண்ணையில் காத்திருந்த மாணவர்களிடம் சென்று அருகில் அமர்ந்து அவர்களிடம் நலம் விசாரித்து குறைகளை கேட்டறிந்தனர்.
மேலப்பாளையம் ஹாமீம்புரம் மாநகராட்சி ஆரம்பப் பள்ளிக்குச் சென்ற ஆய்வுக் குழுவினர் பள்ளிக்கு தேவையான கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து குறைகளை நிவர்த்தி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
தொடர்ந்து தனியார் கல்லூரி பகுதியில் தூய்மைப்பணி மற்றும் வளர்ச்சித் திட்ட பணிகளை ஆய்வு செய்தனர். மேலும் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி கவுன்சிலர்கள் ரசூல் மைதீன், ரம்ஜான் அலி, ஆமினா பீவி, மாநகர செயற்பொறியாளர் நாராயணன், உதவி ஆணையாளர் அய்யப்பன், சுகாதார அலுவலர் சாகுல் ஹமீது, சுகாதார ஆய்வாளர் அந்தோணி, மேலப்பாளையம் பகுதி தி.மு.க. செயலாளர் துபை சாகுல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நெல்லை மேலப்பாளையம் மண்டலத்திற்குட்பட்ட வார்டுகளில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர். ராஜூ மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இன்று காலை ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது 50-வது வார்டிற்கு தேவையான ஆரம்ப சுகாதார நிலையம், கழிவு நீர் ஓடை, அனைத்து தெருக்களிலும் சாலை அமைத்திட வேண்டும், கன்னிமார்குளம் கரையில் உள்ள கருவேல மரங்களை அகற்றுதல்,
குளத்தில் கலக்கும் கழிவுநீர் ஓடையை தனி கால்வாய் கட்டிவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து வார்டு உறுப்பினர் மற்றும் பல்வேறு தரப்பினர் எடுத்து கூறினர்.
அதற்கு கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்றி தருவதாக எம்.எல்.ஏ., மேயர், துணை மேயர் ஆகியோர் வாக்குறுதி அளித்தனர்.
பின்னர் பஜார் திடல் அருகே பள்ளிக்கு செல்ல திண்ணையில் காத்திருந்த மாணவர்களிடம் சென்று அருகில் அமர்ந்து அவர்களிடம் நலம் விசாரித்து குறைகளை கேட்டறிந்தனர்.
மேலப்பாளையம் ஹாமீம்புரம் மாநகராட்சி ஆரம்பப் பள்ளிக்குச் சென்ற ஆய்வுக் குழுவினர் பள்ளிக்கு தேவையான கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து குறைகளை நிவர்த்தி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
தொடர்ந்து தனியார் கல்லூரி பகுதியில் தூய்மைப்பணி மற்றும் வளர்ச்சித் திட்ட பணிகளை ஆய்வு செய்தனர். மேலும் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி கவுன்சிலர்கள் ரசூல் மைதீன், ரம்ஜான் அலி, ஆமினா பீவி, மாநகர செயற்பொறியாளர் நாராயணன், உதவி ஆணையாளர் அய்யப்பன், சுகாதார அலுவலர் சாகுல் ஹமீது, சுகாதார ஆய்வாளர் அந்தோணி, மேலப்பாளையம் பகுதி தி.மு.க. செயலாளர் துபை சாகுல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story






