search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகை கொள்ளை"

    • பீரோவில் இருந்து நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
    • கோவிலுக்கு சென்றிருந்தவர் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள மகாதானபுரம் நான்கு வழிச்சாலை ரவுண்டானா சந்திப்பு பகுதியை சேர்ந்தவர் கோபி. இவர், கன்னியாகுமரியில் உள்ள ஒரு கடையில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார்.

    கோபி கடந்த 2 நாட்களுக்கு முன்பு, தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் திருப்பதி கோவிலுக்கு புறப்பட்டு சென்றார். இந்த நிலையில் இன்று காலையில் அவரது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்துள்ளது.

    இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்துள்ளனர். அது பற்றி அவர்கள், கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது கோபியின் வீட்டில் உள்ள அறையில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அந்த பீரோவில் இருந்து நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

    யாரோ மர்ம நபர்கள் கோபியின் வீட்டில் ஆட்கள் இல்லாததை பயன்படுத்தி, அவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து கைவரிசை காட்டியது தெரிய வந்தது. கோபி தனது குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்றிருப்பதால், அவரது வீட்டில் எவ்வளவு நகை-பணம் கொள்ளை போயுள்ளது என்பன உடனடியாக தெரியவில்லை.

    அவரிடம் போலீசார் போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது, வீட்டு பீரோவில் ரூ.1½ ரொக்கப்பணம் மற்றும் 5½ தங்க நகைகள் வைத்திருந்ததாக தெரிவித்துள்ளார். அவற்றை கொள்ளையர்கள் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது. கொள்ளை போன நகைகள் மற்றும் பணத்தின் மொத்த மதிப்பு ரூ.4 லட்சம் என்று கூறப்படுகிறது.

    கொள்ளை நடந்த கோபியின் வீட்டிற்கு தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகள் மற்றும் தடயங்களை சேகரித்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அது அங்கிருந்த சிறிது தூரம் ஓடி விட்டு நின்றது.

    கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் காண அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் கைப்பற்றி அதில் பதிவாகி உள்ள காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    கோவிலுக்கு சென்றிருந்தவர் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கள்ளக்குறிச்சியில் கோவில் கும்பாபிஷேக விழாவில் 24 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்
    • கள்ளக்குறிச்சி சிதம்பரம் பிள்ளை தெரு அருகே பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    கள்ளக்குறிச்சி சிதம்பரம் பிள்ளை தெரு அருகே பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் அப்பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இந்நிலையில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் சிதம்பரம்பிள்ளை தெருவைச் சேர்ந்த கந்தசாமி மகள் விஷ்ணு பிரியா (வயது 24) என்பவர் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் நகை, இதேபோல் வாய்க்கால் மேட்டு தெருவைச் சேர்ந்ந ஆசைத்தம்பி மனைவி சொர்ண புஷ்பம் என்பவர் அணிந்திருந்த 13 பவுன் நகை, வேறு ஒரு பெண்ணிடம் 4 பவுன் நகை ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.கும்பாபிஷேக விழாவில் 3 பெண்களிடம் 24 பவுன் நகை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு சுமார் 8 லட்சம் என கூறப்படுகிறது.

    இது குறித்து மூன்று பெண்களும் தனித்தனியாக கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர் அதன்படி போலீசார் இந்த நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா குறித்து பொதுமக்கள் முறையாக காவல் துறைக்கு தகவல் தெரிவித்தும் போலீசார் பாதுகாப்பு பணிக்கு வரவில்லை என கூறப்படுகிறது.

    இந்த சூழ்நிலையை பயன்படுத்தி மர்ம நபர்கள் பெண்களிடம் நகையை திருடிச் சென்றதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். கோவில் கும்பாபிஷேக விழாவில் 3 பெண்களிடம் மர்ம நபர்கள் நகை திருடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×