search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Symptom"

    • இதயத்தில் நோய் இருந்தால் நெஞ்சில் வலி ஏற்படுவது தான் ஒரே அறிகுறி எனும் தவறாக புரிதல் பலரிடம் உள்ளது.
    • கொழுப்புச்சத்து, சோடியம், இனிப்பு உணவுகளை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.

    மனித உடலில் இன்றியமையாத உறுப்பு இதயம் ஆகும். உடல் முழுவதும் குருதியை விநியோகம் செய்யும் பிரதான உறுப்பான இதயத்திற்கு வரும் ஆபத்துகளில் பெரும்பாலானவற்றை நாம் கட்டுப்படுத்த முடியும். உண்ணும் உணவும், வாழ்க்கை முறையுமே இருதய நோய்களை கட்டுப்படுத்தும் கருவிகளாகும்.

    எல்லா வகையான இருதய நோய்களுக்கும் அறிகுறிகள் தெளிவாக புலப்படுவதில்லை. அப்படியிருக்க, நம் இதயம் ஆரோக்கியமாக துடிக்கிறதா என்பதை எப்படி கண்டறிவது? குறிப்பிட்ட இடைவெளிகளில் உடற் பரிசோதனை செய்வதன் மூலம் இருதய நோய் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முடியும்.


    இதயத்தில் நோய் இருந்தால் நெஞ்சில் வலி ஏற்படுவது தான் ஒரே அறிகுறி எனும் தவறாக புரிதல் பலரிடம் உள்ளது. இருதய நோய் உள்ளவர்களுக்கு நெஞ்சு வலி மட்டுமல்லாது மேலும் பல அறிகுறிகள் தென்படலாம். அவை கீழ்வருமாறு:

    சீரற்ற இதயத்துடிப்பு

    நெஞ்சில் அசௌகரியம்

    உடலின் இடப்புறத்தில் தோன்றும் வலி

    மயக்க உணர்வு

    தலைசுற்றல்

    தொண்டை அல்லது தாடை வலி

    உடற்சோர்வு

    தீராத இருமல்

    கால்கள், கணுக்கால், அடிவயிறு ஆகியவற்றில் வீக்கம்

    குறட்டை மற்றும் தூக்கக் கோளாறு


    துவக்கத்திலேயே கண்டறிந்தால் இருதய நோய்களை குணப்படுத்துவது எளிது. எனவே, இருதய நோய்களுக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவேண்டும். ஆரோக்கியமான உணவுடன் போதியளவு உடற்பயிற்சியும் மேற்கொண்டால் இதயம் நலமுடன் துடிக்கும். பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், பயறு வகைகள் ஆகியவற்றை போதியளவு எடுத்துக்கொள்ள வேண்டும். கொழுப்புச்சத்து, சோடியம், இனிப்பு உணவுகளை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. சீரான உடல் எடை பேணுவதுடன், புகைப்பதை தவிர்த்து, மன இறுக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும். நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், உயர் ரத்தக் கொழுப்பு ஆகியவை இருதய நோய்களுக்கு வழிவகுக்கலாம் என்பதால் அவற்றை கட்டுக்குள் வைக்கவேண்டியது அவசியமாகும்.

    • முகாமில் தோல் நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதன் மூலமாக தொழுநோயை கண்டுபிடிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
    • தொழுநோயின் ஆரம்ப அறிகுறிகள் உள்ள 5 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட துணை இயக்குநர் வழிகாட்டுதல் படி தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அண்ணா நகர் பகுதியில் தீவிர தொழுநோய் கண்டுபிடிப்பு முகாமின் ஒரு பகுதியாக சிறப்பு தோல் நோய்கள் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

    இந்த முகாமில் தோல் நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதன் மூலமாக தொழுநோயைக் கண்டுபிடிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    முகாமில் தஞ்சாவூர் மாவட்ட துணை இயக்குநர் தொழுநோய் அலுவலகத்தைச் சார்ந்த நலக் கல்வியாளர், மருத்துவமல்லா மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட மருத்துவ குழுவினர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர், டாமின் பவுண்டேஷன் ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் பங்கேற்றனர்.

    தொழுநோயின் ஆரம்ப அறிகுறிகள் உள்ள 5 புதிய நோயாளிகள் இப்பகுதியில் கண்டறியப்பட்டனர்.

    புதிய நோயாளிகள் 5 நபர்களுக்கும் உடனடியாக சிகிச்சைப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டது.

    முகாம் ஏற்பாடுகளை வட்டார மருத்துவமல்லா மேற்பார்வையாளர் சிவகுமார் மேற்கொண்டார்.

    • அதிகபட்சமாக நெல்லை மாநகர பகுதியில் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • நாங்குநேரியில் 3 பேர், களக்காடு, சேரன்மகாதேவியில் தலா 2 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் நேற்று 17 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று புதிதாக 38 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

    இதில் அதிகபட்சமாக மாநகர பகுதியில் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்பை, பாளை, ராதாபுரத்தில் தலா 4 பேரும், நாங்குநேரியில் 3 பேர், களக்காடு, சேரன்மகாதேவியில் தலா 2 பேர், மானூர், பாப்பாக்குடியில் தலா ஒருவருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ×