search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "S.Ve.Shekher"

    போலீசாரையும், நீதிமன்றத்தையும் பற்றிய பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவின் சர்ச்சை பேச்சு நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வெளிநாட்டில் ‘எடிட்’ செய்யப்பட்டுள்ளது என எஸ்.வி.சேகர் குற்றம்சாட்டியுள்ளார். #HRaja #SVeShekher
    சென்னை :

    சென்னை அடையாரில் உள்ள மணிமண்டபத்தில் சிவாஜிகணேசன் உருவப்படத்துக்கு நடிகர் எஸ்.வி.சேகர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஓரினச்சேர்க்கை, கள்ள உறவு, அய்யப்பன் கோவிலில் பெண்களுக்கான அனுமதி என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு பரபரப்பாக பேசப்படுகிறது. மக்களின் மத நம்பிக்கைகளில் தலையிடும் எந்த விஷயமாக இருந்தாலும் அது நல்லதல்ல.

    நீதிமன்றத்தையும், போலீசாரையும் அவமதித்ததாக எச்.ராஜா பேசிய பேச்சு, ஒரு ‘வெர்சனில்’ இல்லை, இன்னொரு ‘வெர்சனில்’ இருக்கிறது. அந்த ஆடியோ ‘டேப்’ வெளிநாட்டில் நவீன தொழில்நுட்ப வழியாக ‘எடிட்’ செய்து மாற்றப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அதை கண்டுபிடிக்க வேண்டிய பொறுப்பு தடயவியல் துறைக்கு உள்ளது. தவிர இது எச்.ராஜா பிரச்சினை. அதை அவரே சரி செய்வார். என் மீதான வழக்குகளை சட்டரீதியாக எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #HRaja #SVeShekher
    எஸ்.வி.சேகரை கைது செய்ய விடாமல் பாதுகாப்பது, மத்திய அரசா, அவரது உறவினர்களா? என கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார். #DMK #Kanimozhi #SVeShekher
    அவனியாபுரம்:

    தி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி இன்று காலை விமானம் மூலம் மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காவிரி விவகாரத்தில் தொடர்ந்து அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. பா.ஜனதா சொல்வதை கேட்டு தலையாட்டும் அரசாக அ.தி.மு.க. உள்ளது.

    பா.ஜனதாவினருக்கு முக்கிய பதவிகள் வழங்கப்படுவது இதனை வெளிப்படையாக காட்டுகிறது.


    நடிகர் எஸ்.வி.சேகர் விவகாரத்தில் அவரை கைது செய்யாதது ஏன்? அவரை பாதுகாப்பது மத்திய அரசா? அல்லது இங்குள்ள அவரது உறவினர்களா? என்று தெரியவில்லை. இதை நீங்கள் தான் கேள்வி கேட்க வேண்டும்.

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது வடமாநிலத்தில் கோவிலுக்குள், ஜனாதிபதி அனுமதிக்கப்படாதது பற்றி நிருபர்கள் கேட்டனர். இதற்கு பதில் அளித்த கனிமொழி சாதி என்பது இந்திய சமூகத்தில் எப்படி இருக்கிறது? என்பதையே இது காட்டுகிறது.

    தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் இருப்பதால் இது போன்று நடப்பது இல்லை என்றார். #DMK #Kanimozhi #SVeShekher
    ×