என் மலர்
செய்திகள்

எஸ்.வி.சேகரை கைது செய்யாதது ஏன்?- கனிமொழி கண்டனம்
எஸ்.வி.சேகரை கைது செய்ய விடாமல் பாதுகாப்பது, மத்திய அரசா, அவரது உறவினர்களா? என கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார். #DMK #Kanimozhi #SVeShekher
அவனியாபுரம்:
தி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி இன்று காலை விமானம் மூலம் மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
காவிரி விவகாரத்தில் தொடர்ந்து அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. பா.ஜனதா சொல்வதை கேட்டு தலையாட்டும் அரசாக அ.தி.மு.க. உள்ளது.

நடிகர் எஸ்.வி.சேகர் விவகாரத்தில் அவரை கைது செய்யாதது ஏன்? அவரை பாதுகாப்பது மத்திய அரசா? அல்லது இங்குள்ள அவரது உறவினர்களா? என்று தெரியவில்லை. இதை நீங்கள் தான் கேள்வி கேட்க வேண்டும்.
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது வடமாநிலத்தில் கோவிலுக்குள், ஜனாதிபதி அனுமதிக்கப்படாதது பற்றி நிருபர்கள் கேட்டனர். இதற்கு பதில் அளித்த கனிமொழி சாதி என்பது இந்திய சமூகத்தில் எப்படி இருக்கிறது? என்பதையே இது காட்டுகிறது.
தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் இருப்பதால் இது போன்று நடப்பது இல்லை என்றார். #DMK #Kanimozhi #SVeShekher
தி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி இன்று காலை விமானம் மூலம் மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
காவிரி விவகாரத்தில் தொடர்ந்து அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. பா.ஜனதா சொல்வதை கேட்டு தலையாட்டும் அரசாக அ.தி.மு.க. உள்ளது.
பா.ஜனதாவினருக்கு முக்கிய பதவிகள் வழங்கப்படுவது இதனை வெளிப்படையாக காட்டுகிறது.

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது வடமாநிலத்தில் கோவிலுக்குள், ஜனாதிபதி அனுமதிக்கப்படாதது பற்றி நிருபர்கள் கேட்டனர். இதற்கு பதில் அளித்த கனிமொழி சாதி என்பது இந்திய சமூகத்தில் எப்படி இருக்கிறது? என்பதையே இது காட்டுகிறது.
தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் இருப்பதால் இது போன்று நடப்பது இல்லை என்றார். #DMK #Kanimozhi #SVeShekher
Next Story






