search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Students complaint"

    • திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் செய்வதால் மேற்படிப்பு பாதிக்கப்படுவதாக மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்
    • தொலை தூர கல்வி இயக்ககத்தின் இந்த போக்கால் ஏராளமான மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடப்பட்டுள்ளது

    திருச்சி:

    திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு தொலை தூரக்கல்வி மூலம் தமிழ்செல்வன், மதன்குமார், பிரகாஷ் குமார் உள்ளிட்ட 5 மாணவர்கள் பி.காம். படிப்பில் சேர்ந்தனர்.

    மூன்று ஆண்டுகள் படிப்பின் கடைசி ஆண்டான் 2022-ல் நடத்த வேண்டிய இறுதித்தேர்வானது கடந்த ஆகஸ்டு மாதம் நடத்தப்பட்டுள்ளது. மே மாதமே நடத்த வேண்டிய தேர்வானது காலதாமதமாக நடத்தப்பட்டுள்ளது.

    பல்கலைக்கழக நிர்வாகம் தாமதமாக தேர்வை நடத்தியும் தற்போது வரை அதற்கான முடிவுகளை அறிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் ஏற்படும் கால தாமதத்தால் எம்.பி.ஏ. படிக்க வேண்டும் என்ற ஆசையுடன் இருந்த அந்த மாணவர்கள் நிலை கேள்விக்குறியாகி உள்ளது. மேலும் அதற்கான டான்செட் 2022 தேர்வில் இந்த மாணவர்களில் ஒருவர் 97.81 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருந்தும், பி.காம். படிப்பிற்கான தேர்வு முடிவுகள் வராததால் கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்.

    தற்போது அவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.எஸ்.டபிள்யூ. படிக்க விண்ணப்பித்து உள்ளார். ஆனாலும் பி.காம். முடிவுகள் வராததால் கடந்த ஆகஸ்டு மாதமே ஆரம்பமான முதுகலை வகுப்பில் பங்கேற்க முடியாமல் தவித்து வருகிறார்.

    இதனால் அந்த மாணவரின் ஓராண்டு காலம் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வி அலுவலகத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டாலும் உரிய பதில் அளிப்பதில்லை என்று ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளனர்.

    இதேபோல் பல மாணவர்களின் மேற்படிப்பு கேள்விக்குறியாகி இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    மேற்படிப்பு படிக்க முடியாமல் உள்ள மாணவர்களின் நலன் கருதி திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்கம் உரிய நடவடிக்கை எடுத்து அவர்களின் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டு உள்ளனர்.

    மாணவ- மாணவிகள் தங்களது குறைகளை- புகார்கள் கூற கல்வித்துறை சார்பில் 14417 என்ற புதிய எண் அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். #MinisterSengottaiyan #EducationDepartment

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள நாகதேவன் பாளையத்தில் ரூ.2 கோடி மதிப்பில் புதிய பாலம் கட்டப்படுகிறது. இதற்கான பணி தொடக்க விழா இன்று நடந்தது.

    தமிழக கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்ட பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.

    அப்போது அமைச்சர் செங்கோட்டையன் நிரூபர்களிடம் கூறியதாவது:-

    இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் 1 லட்சம் மாணவ- மாணவிகள் சேர்ந்து உள்ளனர். அடுத்த ஆண்டு 3 லட்சம் மாணவ- மாணவிகள் அரசு பள்ளியில் சேர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


    நகர பகுதிகளைப் போல் மலைப்பகுதி அரசு பள்ளிகளிலும் ‘‘ஸ்மார்ட் கிளாஸ்’’ ஆரம்பிக்கப்படும். மலைப் பகுதி பள்ளிகளும் கம்ப்யூட்டர் மயமாக்கப்படும்.

    மாணவ- மாணவிகள் தங்களது குறைகளை- புகார்கள் கூற கல்வித்துறை சார்பில் 14417 என்ற புதிய எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எண் மூலம் மாணவ- மாணவிகள் புகார் மற்றும் குறைகளை தெரிவிக்கலாம். புகார் கூறுபவர்கள் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும். தொடர்ந்து இதன் மீது விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நாளை முதல் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

    இந்தியாவிலேயே முதன் முதலாக இந்த திட்டம் தமிழகத்தில் தான் தொடங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #MinisterSengottaiyan #EducationDepartment

    ×