search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Street meeting"

    • நல்லூர் பகுதி 47-வது வார்டில் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது
    • வட்ட செயலாளர்கள் வெங்கட்ராஜ், ஆறுமுகம், மனோகரன், பத்ரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்டம் தெற்கு மாநகருக்கு உட்பட்ட நல்லூர் பகுதி 47-வது வார்டில் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவைமுன்னிட்டு தெருமுனைக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. கூட்டத்துக்கு வடக்கு மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன், மேயர் தினேஷ்குமார், 3-வது மண்டல தலைவர் கோவிந்தசாமி, பகுதி செயலாளர் மேங்கோ பழனிச்சாமி ஆகியோர் பங்கேற்று பேசினார்கள்.

    கட்சியின் தலைமை கழக பேச்சாளர்கள் கந்தலி கண்ணன், மனோகர் பாபு ஆகியோர் கருணாநிதியின் சாதனைகள் குறித்து பேசினார்கள். இதில் வட்ட செயலாளர்கள் வெங்கட்ராஜ், ஆறுமு–கம், மனோகரன், பத்ரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    • ராதாபுரம் மேற்கு ஒன்றிய சமூக ரங்கபுரத்தில் கருணாநிதியின் பிறந்தநாள் விழா மற்றும் தி.மு.க.வின் ஓராண்டு சாதனைகள் குறித்து தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியின் தலைமையில் தமிழகத்தில் மக்கள் முன்னேற்றத்திற்காக எடுத்து வைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ள பல திட்டங்கள் குறித்து எடுத்துக் கூறப்பட்டது.

    திசையன்விளை:

    ராதாபுரம் மேற்கு ஒன்றிய சமூக ரங்கபுரத்தில் கருணாநிதியின் பிறந்தநாள் விழா மற்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வின் ஓராண்டு சாதனைகள் குறித்து தெருமுனை கூட்டம் நடைபெற்றது.

    நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் முன்னிலை வகித்தார். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளரும், ஒன்றிய ஊராட்சி மன்ற கூட்டமைப்பு தலைவருமான அனிதா பிரின்ஸ் வரவேற்றார். ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ேஜாசப்பெல்சி தலைமை தாங்கினார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் முதல்- அமைச்சர் கருணா நிதியின் தலைமையில் தமிழகத்தில் மக்கள் முன்னேற்றத்திற்காக எடுத்து வைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ள பல திட்டங்கள் குறித்து எடுத்துக் கூறப்பட்டது.

    மேலும் அதன் வழி தொடர்ச்சியாக தற்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறந்த முறையில் நடைபெற்று வரும் ஆட்சியின் சாதனைகள் குறித்து எடுத்துக் கூறப்பட்டது. மிகச் சிறப்பான முறையில் இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டுமே மகளிருக்கான இலவச பேருந்து திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    மேலும் சாலை விபத்தில் சிகிச்சை பெறுவதற்கான இன்னுயிர் காப்போம் திட்டம், வீடு தேடி மருத்துவம் , அனைவருக்கும் கல்வி, கலைஞர் காப்பீடு போன்ற பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் மற்றும் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி ஆகியோர் எடுத்து கூறினர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாநில பேச்சாளர் உடன்குடி தனபால் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். ஒன்றிய கவுன்சிலர் இசக்கிபாபு நன்றி கூறினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் ஜான்ஸ் ரூபா, ராதாபுரம் மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பாவூர்சத்திரம் பஸ் நிலையம் முன்பு நடந்த தெருமுனை கூட்டத்தில் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் சிவபத்மநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
    • கூட்டத்தில் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது.

    தென்காசி:

    மத்திய அரசை கண்டித்து தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கண்டன தெருமுனை கூட்டம் பாவூர்சத்திரத்தில் நடைபெற்றது. பாவூர்சத்திரம் பஸ் நிலையம் முன்பு நடந்த தெருமுனை கூட்டத்தில் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் சிவபத்மநாதன், தலைமைக் கழக பேச்சாளர் சரத்பாலா உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

    கூட்டத்தில் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், நாடாளுமன்ற தேர்தலில் குடும்பத்திற்கு ரூ. 15 லட்சம் கொடுக்கப்படும் என்ற வாக்குறுதியை மத்திய பா.ஜ.க. அரசு, நிறைவேற்ற வேண்டும் என கூறி கோஷம் எழுப்பப்பட்டது.

    இதில் கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சீனித்துரை, கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவன்பாண்டியன், தென்காசி ஒன்றிய செயலாளர் அழகுசுந்தரம், கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரி, பேரூராட்சி தலைவர் ராஜன், மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×