search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "samugarengapuram"

    • நெல்லை மாவட்ட பள்ளி மாணவ- மாணவர்க ளுக்கான மாவட்ட அளவி லான கைப்பந்து போட்டிகள் சமூகரெங்கபுரம் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் போட்டியும் நடைபெற்றது.
    • போட்டியினை வள்ளியூர் டி.டி.என். கல்வி குழும தலைவர் லாரன்ஸ், தாளா ளர் ஹெலன் லாரன்ஸ், கல்லூரியின் முதல்வர் சுரேஷ் தங்கராஜ் தாம்சன் ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர்.

    வள்ளியூர்:

    நெல்லை மாவட்ட பள்ளி மாணவ- மாணவர்க ளுக்கான மாவட்ட அளவி லான கைப்பந்து போட்டிகள் சமூகரெங்கபுரம் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆண்களுக்கான கைப்பந்து போட்டியும், பெண்க ளுக்கான கைப்பந்து போட்டியும் நடைபெற்றது.

    போட்டியினை வள்ளியூர் டி.டி.என். கல்வி குழும தலைவர் லாரன்ஸ், தாளா ளர் ஹெலன் லாரன்ஸ், கல்லூரியின் முதல்வர் சுரேஷ் தங்கராஜ் தாம்சன் ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர்.

    நெல்லை மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியின் ஒருங்கிணைப் பாளர் லில்லி வரவேற்று பேசினார். 14 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் அம்பாச முத்திரம் பி.எல்.ட.பி.ஏ. மேல் நிலைப்பள்ளி மாணவி கள் முதலிடம் பெற்றனர்.

    ஆவரைகுளம் பாலை மார்த்தாண்டம் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 2-ம் இடம் பெற்றனர். 17 வய துக்கு உட்பட்டோருக்கான பிரிவில் சங்கர் நகர் கீதா கிருஷ்ணமூர்த்தி வித்யாலயா மேல்நிலைப் பள்ளி மாணவிகள் முதலி டத்தையும், பாளையங் கோட்டை சின்மயா வித்யா லயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 2-ம் இடத்தையும் பெற்றனர்.

    19 வயதுக்குட்பட்டோ ருக்கான பிரிவில் அம்பா சமுத்திரத்தில் உள்ள பாபநாச தொழிலாளர் நல உரிமைக்கழக மேல்நிலைப் பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்து அசத்தி னர். 2-ம் இடத்தையும் பாளையங்கோட்டை சாரா டக்கர் பெண்கள் மேல் நிலை ப்பள்ளி மாணவிகள் பெற்றனர். ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெற்ற அணி யினர் மாநில அளவி லான போட்டிக்கு தேர்ந்தெ டுக்கப்பட்டனர்.

    அவர்களுக்கான சான்றிதழ்க ளையும் வெற்றி கேடயங்களையும் கல்லூரி யின் தலைவர் லாரன்ஸ் வழங்கி, மாணவிகளின் திறனை பாராட்டி தனது வாழ்த்துக் களை தெரி வித்துக் கொண்டார்கள்.

    இதற்கான ஏற்பாட்டினை கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர் சுந்தர் செய்திருந்தார்.

    • சமூகரெங்கபுரத்தில் உள்ள ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் தேசிய பொறியாளர் தினவிழா கொண்டாடப்பட்டது.
    • பொறியாளர் தினத்தில் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.

    வள்ளியூர்:

    சமூகரெங்கபுரத்தில் உள்ள ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில்தேசிய பொறியாளர் தினவிழா கொண்டாடப்பட்டது.

    பொறியாளர் தின சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி ஜெயா என்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரிஆனந்த் கலந்துகொண்டார்.

    பொறியாளர் தினத்தில் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. தொழில்நுட்ப தாள் மற்றும் விளக்கக்காட்சி போட்டி நடைபெற்றது. போட்டியின் நடுவர்களாக விவி பொறியியல் கல்லூரியின் பேராசிரியர்கள் சைமன் கிறிஸ்டோபர், தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களின் திறமையை மதிப்பீடு செய்தனர்.

    போட்டியில் முதலாமாண்டு எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் பயிலும் சுந்தர விக்னேஸ்வரன் மற்றும் தருண் அந்தோணி ஆகியோர் முதல் பரிசு பெற்றனர். முதலாம் ஆண்டு மெக்கானிக்கல் மாணவர்கள் மகேஸ்வரன் மற்றும் ஆகாஷ் 2-ம் பரிசும் 3-ம் ஆண்டு மெக்கானிக்கல் மாணவர் பிரதீப் ராஜா 3-ம் பரிசும் பெற்றனர்.

    வினாடி-வினா போட்டியில் 2-ம் ஆண்டு எலக்ட்ரிக்கல் பிரிவு மாணவர் தீபக் ஆகாஷ் மற்றும் சந்தோஷ் ஜேம்ஸ் ஆகியோர் முதல் பரிசு பெற்றனர். 3-ம் ஆண்டு எலக்ட்ரானிக்ஸ் பிரிவு மாணவர் ஜெபம் மற்றும் சாமுவேல் 2-ம் பரிசும், 3-ம்ஆண்டு மெக்கானிக்கல் பிரிவு மாணவர் மரியசூசை ரோகன் மற்றும் குட்டி சாமுவேல் ஆகியோர் 3-ம் பரிசும் பெற்றனர்.

    போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினார்கள். நிகழ்ச்சியை கல்லூரியின் தலைவர் டி.டி.என்.லாரன்ஸ் அவர்கள் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்கள்.

    விழாவில் கலந்து கொண்ட கல்லூரியின் முதல்வர் டாக்டர் சுரேஷ் தங்கராஜ் தாம்சன் மாணவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி தனது பொறியாளர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். விழா ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம், இளைஞர் செஞ்சிலுவைத் சங்கம் மற்றும் ரோட்டரி கிளப் ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.

    • ராதாபுரம் மேற்கு ஒன்றிய சமூக ரங்கபுரத்தில் கருணாநிதியின் பிறந்தநாள் விழா மற்றும் தி.மு.க.வின் ஓராண்டு சாதனைகள் குறித்து தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியின் தலைமையில் தமிழகத்தில் மக்கள் முன்னேற்றத்திற்காக எடுத்து வைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ள பல திட்டங்கள் குறித்து எடுத்துக் கூறப்பட்டது.

    திசையன்விளை:

    ராதாபுரம் மேற்கு ஒன்றிய சமூக ரங்கபுரத்தில் கருணாநிதியின் பிறந்தநாள் விழா மற்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வின் ஓராண்டு சாதனைகள் குறித்து தெருமுனை கூட்டம் நடைபெற்றது.

    நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் முன்னிலை வகித்தார். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளரும், ஒன்றிய ஊராட்சி மன்ற கூட்டமைப்பு தலைவருமான அனிதா பிரின்ஸ் வரவேற்றார். ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ேஜாசப்பெல்சி தலைமை தாங்கினார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் முதல்- அமைச்சர் கருணா நிதியின் தலைமையில் தமிழகத்தில் மக்கள் முன்னேற்றத்திற்காக எடுத்து வைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ள பல திட்டங்கள் குறித்து எடுத்துக் கூறப்பட்டது.

    மேலும் அதன் வழி தொடர்ச்சியாக தற்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறந்த முறையில் நடைபெற்று வரும் ஆட்சியின் சாதனைகள் குறித்து எடுத்துக் கூறப்பட்டது. மிகச் சிறப்பான முறையில் இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டுமே மகளிருக்கான இலவச பேருந்து திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    மேலும் சாலை விபத்தில் சிகிச்சை பெறுவதற்கான இன்னுயிர் காப்போம் திட்டம், வீடு தேடி மருத்துவம் , அனைவருக்கும் கல்வி, கலைஞர் காப்பீடு போன்ற பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் மற்றும் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி ஆகியோர் எடுத்து கூறினர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாநில பேச்சாளர் உடன்குடி தனபால் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். ஒன்றிய கவுன்சிலர் இசக்கிபாபு நன்றி கூறினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் ஜான்ஸ் ரூபா, ராதாபுரம் மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×