சமூகரெங்கபுரம் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் தேசிய பொறியாளர் தின விழா

சமூகரெங்கபுரத்தில் உள்ள ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் தேசிய பொறியாளர் தினவிழா கொண்டாடப்பட்டது.பொறியாளர் தினத்தில் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.
விழாவில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
விழாவில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
Published on

வள்ளியூர்:

சமூகரெங்கபுரத்தில் உள்ள ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில்தேசிய பொறியாளர் தினவிழா கொண்டாடப்பட்டது.

பொறியாளர் தின சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி ஜெயா என்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரிஆனந்த் கலந்துகொண்டார்.

பொறியாளர் தினத்தில் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. தொழில்நுட்ப தாள் மற்றும் விளக்கக்காட்சி போட்டி நடைபெற்றது. போட்டியின் நடுவர்களாக விவி பொறியியல் கல்லூரியின் பேராசிரியர்கள் சைமன் கிறிஸ்டோபர், தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களின் திறமையை மதிப்பீடு செய்தனர்.

போட்டியில் முதலாமாண்டு எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் பயிலும் சுந்தர விக்னேஸ்வரன் மற்றும் தருண் அந்தோணி ஆகியோர் முதல் பரிசு பெற்றனர். முதலாம் ஆண்டு மெக்கானிக்கல் மாணவர்கள் மகேஸ்வரன் மற்றும் ஆகாஷ் 2-ம் பரிசும் 3-ம் ஆண்டு மெக்கானிக்கல் மாணவர் பிரதீப் ராஜா 3-ம் பரிசும் பெற்றனர்.

வினாடி-வினா போட்டியில் 2-ம் ஆண்டு எலக்ட்ரிக்கல் பிரிவு மாணவர் தீபக் ஆகாஷ் மற்றும் சந்தோஷ் ஜேம்ஸ் ஆகியோர் முதல் பரிசு பெற்றனர். 3-ம் ஆண்டு எலக்ட்ரானிக்ஸ் பிரிவு மாணவர் ஜெபம் மற்றும் சாமுவேல் 2-ம் பரிசும், 3-ம்ஆண்டு மெக்கானிக்கல் பிரிவு மாணவர் மரியசூசை ரோகன் மற்றும் குட்டி சாமுவேல் ஆகியோர் 3-ம் பரிசும் பெற்றனர்.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினார்கள். நிகழ்ச்சியை கல்லூரியின் தலைவர் டி.டி.என்.லாரன்ஸ் அவர்கள் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்கள்.

விழாவில் கலந்து கொண்ட கல்லூரியின் முதல்வர் டாக்டர் சுரேஷ் தங்கராஜ் தாம்சன் மாணவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி தனது பொறியாளர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். விழா ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம், இளைஞர் செஞ்சிலுவைத் சங்கம் மற்றும் ரோட்டரி கிளப் ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com