search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "state human rights commission"

    • புகாரின் பேரில் அடையாறு மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
    • மாணவிகளிடம் தனித்தனியாக மனித உரிமைகள் ஆணைய குழுவினர் விசாரணை நடத்தினர்.

    சென்னை:

    சென்னை திருவான்மியூர் கலாஷேத்ரா கல்லூரியில் பேராசிரியர் ஹரிபத்மன் உள்பட 3 நடன பயிற்சியாளர்கள் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக மாணவிகள் அளித்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்ட பேராசிரியர் மற்றும் நடன பயிற்சியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கேரளாவை சேர்ந்த முன்னாள் மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் அடையாறு மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பேராசிரியர் ஹரிபத்மன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரி கலாஷேத்ரா கல்லூரிக்கு நேரில் சென்று மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். இதேபோல் மாநில மனித உரிமைகள் ஆணையமும் விசாரணை நடத்தியது.

    நேற்று மனித உரிமைகள் ஆணைய எஸ்.பி. மகேஷ்வரன் தலைமையிலான குழுவினர் விசாரணையை தொடங்கினர். கல்லூரி இயக்குனர் ராமச்சந்திரன், துணை இயக்குனர் பத்மாவதி, முதல்வர் பகல ராமதாஸ் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இன்று இரண்டாவது நாளாக சுமார் 30 மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். மாணவிகள் சுதந்திரமாக தங்கள் கருத்துக்களை ஆணையத்திடம் தெரிவிக்கும் வகையில், நிர்வாகத்தினர் யாரும் இல்லாமல் தனித்தனியாக விசாரணை நடத்தினர். இன்று பிற்பகல் விசாரணை நிறைவடைந்தது.

    இதையடுத்து இறுதி அறிக்கையை மாநில மனித உரிமைகள் ஆணையத்திடம் எஸ்.பி. மகேஷ்வரன் தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • பேராசிரியர் ஹரிபத்மன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
    • 3 பேர் மீதும் உரிய சட்ட நடவடிக்கைகள் விரைவில் பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    திருவான்மியூர் கலாஷேத்ராவில் பேராசிரியர் ஹரிபத்மன் உள்பட 3 நடன பயிற்சியாளர்கள் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக மாணவிகள் அளித்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்த முன்னாள் மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் அடையாறு மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    பேராசிரியர் ஹரிபத்மன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே கலாஷேத்ரா கல்லூரியில் மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரி நேரில் சென்று மாணவிகளிடம் விசாரணை நடத்தினார்.

    அப்போது மாணவிகள் பலர் கலாஷேத்ராவில் நடைபெற்று வரும் பாலியல் அத்துமீறல் தொடர்பாக பல்வேறு தகவல்களை தெரிவித்து வாக்குமூலம் அளித்தனர். இதனை மகளிர் ஆணையம் அறிக்கையாக தயாரித்து தமிழக அரசிடம் வழங்கி உள்ளது.

    அந்த அறிக்கையில் கலாஷேத்ராவில் நடைபெற்ற பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக மாணவிகள் தெரிவித்த கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி வெளியில் உள்ள நடன பயிற்சியாளர்கள் 3 பேர் மீது குற்ற நடவடிக்கை எடுக்க ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. நடன பயிற்சியாளர்களான ஸ்ரீநாத், சஞ்சித்லால், சாய் கிருஷ்ணன் ஆகிய 3 பேர் மீதும் ஏற்கனவே மாணவிகள் பாலியல் புகார் கூறி இருந்தனர். இந்த நிலையில் மகளிர் ஆணையம் 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்து உள்ளது. இதையடுத்து 3 பேர் மீதும் உரிய சட்ட நடவடிக்கைகள் விரைவில் பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நடன பயிற்சியாளர்கள் 3 பேர் மீதும் மகளிர் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் கைது நடவடிக்கை எடுப்பது பற்றி போலீசார் ஆலோசித்து வருகிறார்கள். இதன் முடிவில் 3 பேரும் விரைவில் கைது செய்யப்பட உள்ளனர்.

    • கலாஷேத்ராவில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தனது விசாரணையை இன்று தொடங்கியது.
    • பேராசிரியர் ஹரிபத்மன் சார்பில் ஜாமீன் மனு சைதாப்பேட்டை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

    சென்னை:

    சென்னையை அடுத்த திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் படிக்கும் மாணவிகள் சிலர் பேராசிரியர் ஹரிபத்மன் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறினர்.

    இதையடுத்து பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரிபத்மனை கைது செய்தனர்.

    மேலும் 3 பேராசிரியர்கள் மீதும் குற்றச்சாட்டுகளை மாணவிகள் கூறியதால் ஹரிபத்மன் உள்பட 4 பேராசிரியர்களையும் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்டு செய்தது.

    கலாஷேத்ராவில் மாணவிகளுக்கு கல்லூரி பேராசிரியரே பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக மகளிர் ஆணையம் கல்லூரி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தியது. மாணவிகள் எந்தெந்த வகையில் பாலியல் சீண்டலுக்கு ஆளானார்கள் என நேரில் சென்று விசாரணை நடத்தப்பட்டது. கலாஷேத்ரா கல்லூரி முதல்வர் மற்றும் முக்கிய பொறுப்பாளர்களிடமும் விசாரணை நடந்தது.

    இந்த நிலையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தனது விசாரணையை இன்று தொடங்கியது. போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரேசன், குமார், பெண் இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேர் கொண்ட குழுவினர் கலாஷேத்ரா கல்லூரிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    கல்லூரி நிர்வாகம் தரப்பில் இன்று தேர்வு நடப்பதால் நாளை விசாரிக்குமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால் அதனை மனித உரிமைகள் ஆணைய குழுவினர் ஏற்கவில்லை. விசாரணை தாமதம் ஆனால் வழக்கு நீர்த்து போகும் என்பதால் இன்றே விசாரணையை தொடங்கினர்.

    பாதிக்கப்பட்ட மாணவிகள், பேராசிரியர்களிடம் தனித்தனியாக விசாரித்தனர். பேராசிரியர் ஹரி பத்மன் எவ்வாறெல்லாம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார். அவர் வகுப்பில் படித்த மாணவிகளிடமும் விசாரணை நடந்தது. மாணவிகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், உதவி ஆசிரியர்களிடம் நடத்திய விசாரணை பதிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளிடம் இன்று விசாரணை நடத்திய மாநில மனித உரிமைகள் ஆணையம், மாணவ-மாணவியர்களுக்கு தற்போது தேர்வு நடைபெறுவதால் தேர்வு முடிந்த பிறகு அடுத்த வாரம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.

    இதற்கிடையில் பேராசிரியர் ஹரிபத்மன் சார்பில் ஜாமீன் மனு சைதாப்பேட்டை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

    அப்போது அந்த ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    • மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பேராசிரியர் ஹரிபத்மன் என்பவரை அடையாறு மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    • கலாஷேத்ரா விவகாரத்தை மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து (சூமோட்டோ) வழக்காக எடுத்து விசாரித்தது.

    சென்னை:

    சென்னை அடையாறில் உள்ள கலாஷேத்ரா நடனக்கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பேராசிரியர் ஹரிபத்மன் என்பவரை அடையாறு மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து மாநில மகளிர் ஆணையம் விசாரணை நடத்தி தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

    தற்போது இந்த விவகாரத்தை மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து (சூமோட்டோ) வழக்காக எடுத்து விசாரித்தது. பின்னர், மனித உரிமைகள் ஆணையத்தின் புலனாய்வு பிரிவு ஐ.ஜி., பாதிக்கப்பட்ட மாணவிகள் மற்றும் நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி 6 வாரத்தில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து ஐ.ஜி. தலைமையிலான அதிகாரிகள் இன்று கலாஷேத்ரா கல்லூரிக்கு நேரில் சென்று விசாரணை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

    இந்நிலையில் 2 டி.எஸ்.பி.க்கள், பெண் காவல் ஆய்வாளர் உட்பட 4 அதிகாரிகள் கலாஷேத்ராவில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரோகிணி திரையரங்கிற்கு பத்து தல படம் பார்க்க வந்த நரிக்குறவர்களை, ஊழியர்கள் அனுமதிக்க மறுத்த சம்பவம் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியது.
    • இந்த சம்பவத்திற்கு பலர் சமூக வலைத்தளத்தின் வாயிலாக கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

    சென்னை ரோகிணி திரையரங்கில் நேற்று பத்து தல படத்தின் முதல் காட்சியை பார்க்க வந்த நரிக்குறவர்களை ஊழியர்கள் அனுமதிக்க மறுத்துள்ளனர். டிக்கெட் இருந்தும் அவர்களை அனுமதிக்காததை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி பேசுப்பொருளாகியுள்ளது.

    இதையடுத்து நரிக்குறவர்களை அனுமதிக்காததற்கான காரணம் குறித்து ரோகிணி திரையரங்கம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், யு/ஏ சான்றிதழ் அனுமதி பெற்ற படம் என்பதால் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், வந்தவர்கள் 2,6,8 மற்றும் 10 வயது குழந்தைகளுடன் வந்ததால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னர் உரிய நேரத்தில் அவர்கள் படம் பார்த்ததாக திரையரங்க நிர்வாகம் வீடியோ ஒன்றை வெளியிட்டது.

    எனினும் இந்த சம்பவம் தொடர்பாக திரைப்பிரபலங்கள் பலர் தொடர்ந்து கண்டன குரல் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட நபர்களை அழைத்து விசாரணை நடத்த மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்துள்ளது. குறிப்பாக மாநில மனித உரிமை ஆணையத்தின் அதிகாரி எஸ்.பி. மகேஸ்வரன் தலைமையில் விசாரணை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதற்காக சென்னை, ரோகிணி திரையரங்கத்தின் வளாகத்திற்கு பாதிக்கப்பட்ட நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த 4 பேர் அழைகப்பட்டுள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக ரோகிணி திரையரங்க உரிமையாளரிடமும் விசாரணை நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஊழியர் குடியிருப்பு பகுதியில் தீ வைக்கப்பட்டு சேதமான வாகனங்களை மாநில மனித உரிமை ஆணைய குழுவினர் பார்வையிட்டனர். #ThoothukudiShooting
    தூத்துக்குடி:

    ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22-ந்தேதி தூத்துக்குடியில் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு பேரணியாக புறப்பட்டு சென்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்ததால் மோதல் உண்டானது. இதனால் ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் 13 பேர் பலியானார்கள். 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்த கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்று மனித உரிமை ஆணையம் சார்பாக விசாரணை நடத்த மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர்கள் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சித்தரஞ்சன் மோகன்தாஸ், ஓய்வுபெற்ற நீதிபதி ஜெயச்சந்திரன் மற்றும் சத்தியபிரியா, பாலகிருஷ்ண பிரபு மற்றும் மாநில மனித உரிமை ஆணைய உதவி பதிவாளர் வாசுதேவன் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த குழுவினர் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து துப்பாக்கி சூடு நடந்த கலெக்டர் அலுவலக வளாகத்துக்கு சென்றார்கள். துப்பாக்கி சூடு நடந்த இடங்களை அவர்கள் பார்வையிட்டனர்.

    பின்பு காயப்பட்டவர்கள் சிகிச்சை பெறும் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்றார்கள். அங்கு சிகிச்சை பெறுபவர்களிடம் நடந்த விவரங்களை கேட்டறிந்தனர். பின்பு அவர்கள் திரேஸ்புரம் பகுதிக்கு சென்றனர்.



    இதையடுத்து துப்பாக்கி சூட்டில் இறந்தவர்கள் வீடுகளுக்கு சென்று அவர்களது குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர். துப்பாக்கி சூடு சம்பவத்தில் மனித உரிமை மீறல் எந்த அளவுக்கு நடந்துள்ளது? துப்பாக்கி சூட்டின் பின்னணி என்ன? என்றும் கள ஆய்வில் ஈடுபட்டனர்.

    ஸ்டெர்லைட் ஊழியர் குடியிருப்பு மற்றும் கலவரத்தில் தீவைக்கப்பட்டு சேதமான வாகனங்களையும் அவர்கள் பார்வையிட்டனர். துப்பாக்கிச் சூடு பற்றி மட்டும் அல்லாமல் போராட்டக்காரர்கள் மீதான பொய் வழக்குகள், சட்டவிரோதமாக அடைத்து வைத்த விவகாரம் மற்றும் இதர மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட விவரங்கள் குறித்தும் விசாரித்தனர்.

    தொடர்ந்து தூத்துக்குடியில் உள்ள விருந்தினர் மாளிகையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள். ஆய்வுக்கு பின்னர் அவர்கள் இன்று மாலையே சென்னை திரும்புகின்றனர். #ThoothukudiShooting
    ×