என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "examined"
- பெரிய பாறைகள் மற்றும் மரங்கள் இருப்பதால் இடத்தை துல்லியமாக அளவீடு செய்ய முடியவில்லை
- ஜி.பி.எஸ். கருவியுடன் அளவீடு பணியில் ஈடுபட்டனர்
அணைக்கட்டு:
அல்லேரி மலைப்பகுதியில் வனத்துறைக்கு நிலம் ஒப்படைக்க நேற்று டிஆர்ஓ ராமமூர்த்தி ஆய்வு செய்தார்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட்ட அல்லேரி மலைப்பகுதியில் உள்ள அத்தி மரத்துக் கொல்லை பகுதியை சேர்ந்த விஜி - பிரியா தம்பதியினரின் ஒன்றரை வயது மகள் தனுஷ்கா.
இவர் கடந்த 27-ந்தேதி இரவு பாம்பு கடித்த நிலையில் போதிய மருத்துவ வசதி மற்றும் முறையான சாலை வசதி இல்லாததால் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். மேலும் உயிரிழந்த சிறுமியின் உடலை சாலை வசதி இல்லாததால் மலைப்பகுதிக்கு கையால் சுமந்து நடந்தே செல்லும் அவல நிலையும் ஏற்பட்டது. இதனையடுத்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன், எம்.எல்.ஏ. நந்தகுமார் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதனையடுத்து அல்லேரி மலைப்பகுதிக்கு சாலை அமைக்க அளவீடு பணி நடந்து, மேலும் அனுமதி கேட்டு மத்திய அரசின் பர்வேஸ் போர்ட் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது,
இதற்கு இடையில் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவு சாலை அமைக்கப்பட உள்ள இடத்திற்கு, வனத்துறைக்கு மாற்று இடம் வழங்க அல்லேரி மலை பகுதியில் வருவாய் துறைக்கு சொந்தமான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தில் பெரிய பாறைகள் மற்றும் மரங்கள் இருப்பதால் இடத்தை துல்லியமாக அளவீடு செய்ய முடியவில்லை.
எனவே வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்க ழகத்தின், தொழில்நுட்ப பிரிவு குழுவின் உதவியோடு ஜி.பி.எஸ். கருவி மூலம் நிலத்தை அளவீடு செய்ய முடிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் நிபுணர் குழுவினர், ஜி.பி.எஸ். கருவியுடன் அல்லேரி மலையில் அளவீடு பணியில் ஈடுபட்டனர். மேலும் தொடர்ந்து வருவாய்துறையினர் அளவீடு செய்ததில் ஒரு சில அளவீடு கற்கல் கண்டுப்பிடிக்கப்பட்டதாக கூறுகின்றனர்.
இதனை தொடர்ந்து நேற்று வேலூர் டிஆர்ஓ ராமமூரத்தி மற்றும் அணைக்கட்டு தாசில்தார் வேண்டா ஊராட்சிமன்ற தலைவர் சுந்தரேசன், புஷ்பராஜ் மற்றும் ஊர் பொதுமக்கள் முன்னிலையில் சம்பந்தப்பட்ட இடத்தினை ஆய்வு செய்தனர்.
இதனையடுத்து அளவிடும் பணிகள் விரைவாக துவங்கி வனத்துறைக்கு சேர வேண்டிய நிலத்தினை ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் கூறினர்.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22-ந்தேதி தூத்துக்குடியில் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு பேரணியாக புறப்பட்டு சென்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்ததால் மோதல் உண்டானது. இதனால் ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் 13 பேர் பலியானார்கள். 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்த கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்று மனித உரிமை ஆணையம் சார்பாக விசாரணை நடத்த மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர்கள் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சித்தரஞ்சன் மோகன்தாஸ், ஓய்வுபெற்ற நீதிபதி ஜெயச்சந்திரன் மற்றும் சத்தியபிரியா, பாலகிருஷ்ண பிரபு மற்றும் மாநில மனித உரிமை ஆணைய உதவி பதிவாளர் வாசுதேவன் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த குழுவினர் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து துப்பாக்கி சூடு நடந்த கலெக்டர் அலுவலக வளாகத்துக்கு சென்றார்கள். துப்பாக்கி சூடு நடந்த இடங்களை அவர்கள் பார்வையிட்டனர்.
இதையடுத்து துப்பாக்கி சூட்டில் இறந்தவர்கள் வீடுகளுக்கு சென்று அவர்களது குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர். துப்பாக்கி சூடு சம்பவத்தில் மனித உரிமை மீறல் எந்த அளவுக்கு நடந்துள்ளது? துப்பாக்கி சூட்டின் பின்னணி என்ன? என்றும் கள ஆய்வில் ஈடுபட்டனர்.
ஸ்டெர்லைட் ஊழியர் குடியிருப்பு மற்றும் கலவரத்தில் தீவைக்கப்பட்டு சேதமான வாகனங்களையும் அவர்கள் பார்வையிட்டனர். துப்பாக்கிச் சூடு பற்றி மட்டும் அல்லாமல் போராட்டக்காரர்கள் மீதான பொய் வழக்குகள், சட்டவிரோதமாக அடைத்து வைத்த விவகாரம் மற்றும் இதர மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட விவரங்கள் குறித்தும் விசாரித்தனர்.
தொடர்ந்து தூத்துக்குடியில் உள்ள விருந்தினர் மாளிகையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள். ஆய்வுக்கு பின்னர் அவர்கள் இன்று மாலையே சென்னை திரும்புகின்றனர். #ThoothukudiShooting
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்