search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SrivaiGundam"

    • லெட்சுமி நரசிம்மர், ராமவிநாயகர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை தொல்லியல் ஆலோசர் மணி ஆய்வு செய்தார்.
    • கோவிலுக்கு தேவையான கோரிக்கைகளை அறங்காவலர்கள் தொல்லியல் ஆலோசகரிடம் மனுவாக அளித்தனர்.

    செய்துங்கநல்லூர்:

    ஸ்ரீவைகுண்டம் ஆய்வாளர் அலுவலகத்துக்கு உட்பட்ட இந்து அறநிலையத்துறை கோவில்களில் தற்போது அறங்காவலர்கள் நியமிக்க ப்பட்டுள்ளனர்.

    ஒவ்வொரு கோவில்களை யும் முன்னேற்றப்படுத்த இந்து அறநிலையத்துறை தொல்லியல் ஆலோசகர் ஆய்வு மேற்கொண்டு கோவிலுக்கு தேவையான வேலைகள் தொடர்பான அறிக்கை சமர்பிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதற்காக ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள முத்தாலங்குறிச்சியில் உள்ள மிகவும் பழமையான வீரபாண்டிஸ்வரர், லெட்சுமி நரசிம்மர், ராமவிநாயகர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை தொல்லியல் ஆலோசர் மணி ஆய்வு செய்தார்.

    சிவன் கோவிலை புதிதாக கல் கட்டிடமாக கட்டவும், கோவில் ஆகம விதிபடி தெட்சிணாமூர்த்தி, கன்னி விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகன், சனீஸ்வரன், கஜலெட்சுமி, பைரவர், நந்தீஸ்வரர், நவகிரகங்கள், கொடி மரம் பிரதிட்சை செய்வது குறித்தும், ராமவிநாய கரை சுற்றி கல் பிரகாரம் அமைக்கவும், லெட்சுமி நரசிம்மர் கோவிலையும் கல்கட்டிடமாக கட்டி முன்னால் கருட வாகனம் மற்றும் கொடி மரம் அமைக்கவும் அறங்கா வலர் காமராசு மனு கொடுத்தார். இதுகுறித்து அறிக்கையை அரசுக்கு சமர்பிப்பதாக அவர் கூறினார். அப்போது அவருடன் ஸ்ரீவைகுண்டம் இந்து அறநிலையத்துறை ஆய்வாளர் நம்பி, உதவியாளர் விசுவ நாதன், அர்ச்சகர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் சிங்காத்தா குறிச்சி அரியநாச்சியம்மன், வல்லநாடு செல்வ விநாயகர், ஆழிவிளங்கும் பெருமாள், வசவப்பபுரம் ராமசாமி கோவில், விட்டிலாபுரம் விட்டீலேஸ்வரர் செய்துங்க நல்லூர் வியாக்கிரபாதீஸ்வரர், ஸ்ரீவைகுண்டம் சூடிகொடுத்த நாச்சியார் கோவிலும் அறநிலையத்துறை தொல்லியல் ஆலோசகர் மணி ஆய்வு செய்தார்.

    அறங்காவலர்கள் நாரயண சாமி, கேசவன், நாச்சியார், கோமதி, குருமாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டு கோவிலுக்கு தேவையான கோரிக்கைகளை தொல்லியல் ஆலோசகரிடம் மனுவாக அளித்தனர். அப்போது ஆய்வாளர் நம்பி உள்பட பலர் அவருடன் சென்றனர்.

    • ஸ்ரீவைகுண்டம் புதிய டி.எஸ்.பி. மாயவன் பதவியேற்றார்.
    • சட்டவிரோத குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது உரிய விசாரணை செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    செய்துங்கநல்லூர்:

    ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. வெங்கடேசன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு புதிய டி.எஸ்.பி.யாக மாயவன் பதவியேற்றார்.

    அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த இவர் திருப்பூரில் பயிற்சி டிஎஸ்பி-ஆக பணியாற்றி உள்ளார். தற்போது ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி.யாக பதவியேற்றுள்ளார்.

    அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    போதை பொருள் விற்பனையை முற்றிலுமாக ஒழித்தால் குற்றங்கள் நடைபெறாது. எனவே போதைப் பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    அரியலூர் மாவட்டத்தில் போக்குவரத்து வசதி இல்லாத கிராமத்தில் பிறந்து அரசு பள்ளியில் படித்து தற்போது டி.எஸ்.பி.யாக பொறுப்பேற்றுள்ளேன்.

    அரசு பள்ளி மாணவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை உள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வுகள் வழங்கப்படும்.

    தனியார் பள்ளியில் படித்தால் மட்டுமே உயர் கல்வி பயில முடியும் அரசு வேலைவாய்ப்பினை பெற முடியும் என்ற தவறான எண்ணங்களை மாற்றி அரசு பள்ளி பயிலும் மாணவர்களும் உயர் பதவிக்கு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

    ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, ஏரல், மற்றும் கருங்குளம் தாமிரபரணி ஆற்றுப் பகுதிகளில் மணல் கடத்துபவர் மீதும் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுப்பொருட்களை கொட்டுவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சட்டவிரோத குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது உரிய விசாரணை செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஸ்ரீவைகுண்டம் வட்டாரத்தில் வேளாண் வளர்ச்சி திட்ட விழாவில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    தென்திருப்பேரை:

    வேளாண்மை உழவர் நலத்துறையின் கீழ் ஸ்ரீவைகுண்டம் வட்டாரத்தில் வெள்ளூர் கஸ்பா, வரதராஜபுரம், வாழவல்லான், கொட்டாரகுறிச்சி, பழையகாயல் ஆகிய கிராமங்களில் கலைஞரின் ஒருங்கிணைந்த கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் தொடக்க விழா முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக தொடங்கி வைக்கப்பட்டது.

    இத்திட்டத்தில் கிராம பஞ்சாயத்துகளில் உள்ள தரிசு நிலங்களை தேர்வு செய்து சாகுபடி நிலமாக மாற்றுதல் மற்றும் அதற்கான நீர்வள ஆதாரங்களை அமைத்தல் போன்ற திட்டங்களை வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, கால்நடை துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை போன்ற துறைகள் இணைந்து இத்திட்டத்தில் அனைத்து பண்ணை குடும்பங்களும் பயன் பெறும் நோக்கில் தொடங்கப்பட்டது. 

    இத்திட்டத்தின்படி தென்னை கன்றுகள், கைத்தெளிப்பான், வரப்பு பயிராக உளுந்து சாகுபடி, வீட்டு காய்கறி விதை, மண்புழு உரம் போன்ற இடுபொருள்கள் வழங்கப்பட்டன.

    ஸ்ரீவைகுண்டம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் வனஜா தேவி 5 பஞ்சாயத்துகளிலும் நிகழ்ச்சி நடைபெற தேவையான ஏற்பாடுகள் மற்றும் இடுபொருட்கள் விவசாயிகளுக்கு வழங்க ஏற்பாடு செய்திருந்தார். 

    நிகழ்ச்சியில் வேளாண் துறை, தோட்டக்கலை துறை மற்றும் வேளாண்துறை சார்ந்த அலுவலர்கள், பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீவைகுண்டம் வட்டார வேளாண் அலுவலர்கள், உதவி தொழில் நுட்ப மேலாளர், வட்டார தொழில் நுட்ப மேலாளர் ஆகியோர் செய்திருந்தனர்.
    ×