என் மலர்
நீங்கள் தேடியது "இனிப்பு கடை"
- மனு மீதான விசாரணை இன்று நுகர்வோர் நீதிமன்றத்திற்கு வந்தது.
- எனக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
சென்னை புரசைவாக்கத்தில் பிரபல இனிப்பகம் உள்ளது. இந்த இனிப்பகத்தில் ரவிசங்கர் என்பவர் இனிப்பு வாங்கும்போது கிலோவுக்கு ரூ.25 கூடுதலா வசூலித்ததாக குற்றம்சாட்டினார்.
இதனால், இனிப்பகத்திற்கு எதிராக ரவிசங்கர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த புகார் மனுவில்,"தான் கால் கிலோ பாதாம் பிஸ்தா ரோல் வாங்கயதாகவும், இதற்கு ரூ.425 பணம் பெறுவதற்கு பதிலாக ரூ.450 வசூலித்தனர்" என்றும் குற்றச்சாட்டினார்.
மேலும், "இனிப்புக்கு கூடுதலாக ரூ. 25 வசூலித்ததில் மன உளைச்சலுக்கு ஆளானேன். அதனால் எனக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று நுகர்வோர் நீதிமன்றத்திற்கு வந்தது.
அப்போது," மன உளைச்சலுக்கு ஆளான வாடிக்கையாளருக்கு ஒரு கிலோ இனிப்பை வீட்டுக்கு அனுப்பி வைக்கும்படி இனிப்பகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், கூடுதலாக வசூலிக்கப்பட்ட பணம், திருப்பி அளிக்கப்பட்டபோதும், இனிப்பகத்தின் செயல்பாடு, சேவை குறைபாட்டை காட்டுகிறது" என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
- இமாச்சலபிரதேசத்தில் உள்ள இனிப்பு கடைக்குள் கரடி ஒன்று நுழைந்துள்ளது.
- இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
ஹிமாச்சலப் பிரதேச மாநிலம், சம்பா மாவட்டத்தில் உள்ள ஜோட் என்ற இடத்தில் உள்ள இனிப்புக் கடைக்குள் நுழைந்த கரடி அங்குள்ள பர்பி வகை இனிப்பு வகைகளை சுவைத்து சாப்பிட்டுள்ளது.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
இதே போன்றதொரு நிகழ்வு அமெரிக்காவில் கடந்த ஜூன் மாதம் நடந்தது. டென்னசி மாகாணத்தில் உள்ள அனகீஸ்டா மவுண்டன்டாப் அட்வென்ச்சர் பூங்காவில் நுழைந்த கரடி, அங்குள்ள உணவை சாப்பிடும் வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.






