என் மலர்
நீங்கள் தேடியது "புதுச்சேரி மதுபானம்"
- மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் புகுந்தது.
- பலத்த மழையால் புதுச்சேரியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் கடந்த மே 4-ந் தேதி தொடங்கி 28-ந் தேதியுடன் முடிவடைந்தது.
கத்திரியின் முதல் நாளில் புதுச்சேரியில் 100.6 டிகிரியும். 12-ந் தேதி 102.6 டிகிரியும் பதிவானது. அதன் பிறகு பருவமழை காரணமாக இந்த ஆண்டு கத்திரியின் தாக்கம் பெரிதாக தெரியவில்லை. ஆனால் கத்திரி முடிந்த பிறகும் அனல் காற்றுடன் வெயில் வறுத்தெடுத்து வருகிறது. கடந்த 11 மற்றும் 22-ந் தேதிகளில் பலத்த மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து இருந்தது. அதன் பிறகு மீண்டும் தினமும் வெயில் அதிகரித்து காணப்பட்டது சராசரியாக 97 முதல் 99 டிகிரி வரை வெயில் வாட்டி எடுத்தது.
இந்நிலையில் மாலை 6 மணிக்கு லேசாக தொடங்கிய மழை பின்னர் வெளுத்து வாங்கியது. பலத்த காற்று, இடி, மின்ன லுடன் சுமார் 45 நிமிடம் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. சற்று ஓய்ந்த நிலை யில், மீண்டும் இரவு 8.40 மணி முதல் அரை மணி நேரம் கனமழை பெய்தது.
மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் புகுந்தது. சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. காமராஜர் சாலை, 45 அடி ரோடு உள்ளிட்ட முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியது. இதனால் அவ்வழியே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
100அடி ரோடு மேம்பாலத்தில் இருந்து வில்லியனூருக்கு செல்லும் புதிய பைபாஸ் ரோடு இறக்கத்தில் நெடுஞ்சாலை துறை சார்பில் வாகன ஓட்டிகளுக்காக வைக்கப்பட்டிருந்த வழிகாட்டி பெயர் பலகை சூறை காற்று மழையால் கீழே சரிந்து விழுந்தது. ஆனால் யாருக்கும்காயம் ஏற்படவில்லை. இதனால் அவ்வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அதேபோல், மூலகுளம்-விழுப்புரம் மெயின் ரோட்டில் பெயர் பலகை உயர்மின் அழுத்த கம்பி மீது விழுந்தது. இது பற்றி தகவலறிந்த கோரிமேடு தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று சரி செய்தனர். பலத்த மழையால் புதுச்சேரியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.
- புதுச்சேரியில் ஷோரூம்கள் போல பெரிய மதுக்கடைகள் நகர பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
- அரசின் வருவாயை பெருக்குவதற்காக மதுபானங்கள் விலை கிடுகிடுவென உயர்த்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி என்றாலே பிற மாநில மக்கள் நினைவுக்கு வருவதில் மதுபானமும் ஒன்று.
புதுச்சேரியில் மதுபானம் விலை குறைவு என்பதோடு, சுமார் 800 முதல் 900 பிராண்டுகளில் விதவிதமான மது வகைகள் கிடைக்கும். அதோடு, நின்று கொண்டே மது அருந்திவிட்டு செல்வது முதல், குளு குளு ஏசி வசதியுடன் மது அருந்தும் வசதிகளுடன் மதுபார்களும் உள்ளது.
புதுச்சேரிக்கு வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா வரும் பயணிகளில் பெரும்பாலானவர்கள் மது வகைகளை ருசிப்பதற்காகவே வருகின்றனர். இதற்காகவே புதுச்சேரியில் ஷோரூம்கள் போல பெரிய மதுக்கடைகள் நகர பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு வார இறுதி நாட்களில் இளைஞர்கள், தங்களுக்கு தேவையான மது வகைகளை தேர்வு செய்து வாங்கி செல்வதை பார்க்க முடியும். இது மட்டுமின்றி புதுச்சேரி அரசுக்கு சுமார் ரூ.1000 கோடி வரை கலால்துறை மூலம் வருமானமும் கிடைக்கிறது.
கடந்த காலங்களில் மதுபான விலையை ரூ.2 முதல் ரூ.10 வரை உயர்த்துவார்கள். மதுபான விலை உயர்ந்தாலும், அண்டை மாநிலங்களின் விலையை விட எப்போதும் புதுச்சேரியில் மதுபானம் விலை குறைவாக இருக்கும்.
ஆனால் தற்போது அரசின் வருவாயை பெருக்குவதற்காக மதுபானங்கள் விலை கிடுகிடுவென உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் கீழ்மட்ட அளவில் உள்ள மது வகைகள் கூட குவார்ட்டருக்கு ரூ.12 முதல் ரூ.15 வரை உயர்ந்துள்ளது. பெரும்பாலனவர்கள் விரும்பி அருந்தும் பிராண்டுகள் விலை குவார்டருக்கு ரூ.30 வரை விலை உயர்ந்துள்ளது.
இந்த விலை உயர்வு கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய விலைப்பட்டியலுடன் கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த விலை உயர்வு மது பிரியர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விலை உயர்வு மது விற்பனையாளர்களிடையே பெரும் கவலையையும் ஏற்படுத்தியிருந்தது.
வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் புதுச்சேரிக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருவார்கள். கடந்த 3 நாட்களில் நாள்தோறும் நடைபெற்ற விற்பனையில் 20 முதல் 25 சதவீதம் வரை சரிவு ஏற்பட்டுள்ளது.
வார நாட்களில் வழக்கமாக மது அருந்தக் கூடியவர்கள் விலை உயர்வால் தங்களின் பிராண்டுகளை மாற்றியுள்ளனர். விலை குறைவான பிராண்டுகளுக்கு நாள்தோறும் மது அருந்துவர்கள் நகர்ந்துள்ளனர். இதுவும் விற்பனையை பாதித்துள்ளது.
இதுகுறித்து மதுபான விற்பனையாளர் ஒருவர் கூறியதாவது:-
கடந்த காலங்களில் பல முறை மதுபான விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் 25 ஆண்டுகளில் தற்போது உயர்த்தப்கபட்டுள்ள விலை உச்சபட்சமாகும். இதனால் புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மது வாங்குவதற்கு தயக்கம் காட்டுகின்றனர்.
இந்த விலை உயர்வு மட்டுமின்றி, மது உரிமை கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களில் 20 முதல் 25 சதவீதம் வரை மதுபான விற்பனை சரிந்துள்ளது. இருப்பினும் முழுமையாக ஒரு மாத காலம் மது விற்பனையை கணக்கிடும் போதுதான் எந்த அளவுக்கு விற்பனை சரிந்துள்ளது என தெரியவரும் என்றார்.
- கலால் துறையினரின் இந்த திடீர் சோதனையால் மதுபான கடைகளில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
- மது பிரியர்களும் தாங்கள் அருந்திய சரக்கு ஒரிஜினல்தானா? என்ற குழப்பத்துக்குள்ளானார்கள்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் உள்ளூர் முதல் வெளிநாடுகள் வரையிலான பலவிதமான மது பானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதற்காகவே தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு வந்து செல்கின்றனர்.
புதுவையில் குறைந்த விலையில் விற்கப்படும் மதுபானங்களை பக்கத்து மாநிலமான தமிழகத்தை சேர்ந்தவர்கள் வாங்கி சென்றும் அருந்தி வருகின்றனர். அவர்கள் சில நேரங்களில் உடல்நலம் பாதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும் கடந்த மாதம் கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த விஷசாராயம் குடித்தவர்களில் 200-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டனர். இதில் 65-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள்.
இந்த விஷசாராய சாவு சம்பவத்துக்கு புதுவையில் இருந்து மெத்தனால் கடத்தப்பட்டதாக புகார் எழுந்தது. இதுபோல் புதுவையில் விற்கப்பட்ட சாராயத்தை வாங்கி சென்று குடித்த விழுப்புரம் பகுதியை சேர்ந்த 2 பேர் இறந்து போனார்கள். இதனால் புதுவை சாராயக் கடைகளில் புதுவை கலால் துறை அதிகாரிகள் அனைத்து அதிரடி சோதனை நடத்தினர்.
இந்நிலையில் புதுவையில் உள்ள மதுபான கடைகளில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உயர் ரக மதுபானங்களில் சிலர் கொள்ளை லாபம் ஈட்ட கலப்படம் செய்து விற்கப்படுவதாக கலால் துறைக்கு புகார் சென்றது.
அதன்பேரில் கலால் துறை துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் உத்தரவுப் படி தாசில்தார் சிலம்பரசன் தலைமையில் கலால் துறை அதிகாரிகள் புதுச்சேரி வில்லியனூர் பகுதிகளில் உள்ள மதுபான கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது போலீசாரும் உடன் சென்றனர்.
ஆய்வின்போது அனைத்து மது பாட்டில்களிலும் ஹாலோகிராம் ஒட்டப்பட்டுள்ளதா? என்றும் பாட்டில்களின் சீல்கள் சரியாக உள்ளதா? என்றும் சோதனையிட்டனர்.
மேலும் உயர் ரக மது பாட்டில்களில் மாதிரி பாட்டில்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்த கலால் துறை அதிகாரிகள் எடுத்து சென்றனர்.
கலால் துறையினரின் இந்த திடீர் சோதனையால் மதுபான கடைகளில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. மேலும் அங்கு மது குடித்துக்கொண்டிருந்த மது பிரியர்களும் தாங்கள் அருந்திய சரக்கு ஒரிஜினல்தானா? என்ற குழப்பத்துக்குள்ளானார்கள்.
- பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
- 1 மணி வரை மதுகடைகள் செயல்பட அனுமதி அளித்துள்ளதன் மூலம் குடிமகன்களுக்கு இந்த புத்தாண்டு மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில புத்தாண்டு வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.
இதையொட்டி புதுச்சேரியில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள், ரிசார்ட்டுகள், தங்கும் விடுதிகள், ரெஸ்டோ பார்கள் மற்றும் பொது இடங்களில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள். கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
குறிப்பாக தனியார் ஓட்டல்களில் ஆட்டம்-பாட்டம் என புத்தாண்டு கொண்டாட்டம் களைக்
கட்டும். இதற்கான முன்பதிவு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.
புதுச்சேரியில் ஆங்கில புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான இளைஞர்கள், இளம் பெண்கள் வருகை தருவார்கள். சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் அரசு சார்பிலும், தனியார் சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
புதுச்சேரி மாநிலத்தை பொறுத்தவரை மதுபான கடைகள் வழக்கமாக காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ரெஸ்டோ பார்கள் நள்ளிரவு 12 மணி வரை செயல்பட அனுமதி உள்ளது.
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மதுபான கடைகளை கூடுதல் நேரம் திறக்க சிறப்பு அனுமதி வழங்கப்படுவது வழக்கம். அதன்படி வருகிற 2025-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டையொட்டி மதுபானகடைகள், பார்களை கூடுதல் நேரம் திறக்க கலால்துறை அனுமதி வழங்கியுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி அரசு கலால்துறை துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் மதுபான கடை
களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
புதுச்சேரியில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு டிசம்பர் 31-ந் தேதி நள்ளிரவு வரை மதுபான விற்பனைக்கு சிறப்பு அனுமதி (உரிமம்) வழங்கப்படுகிறது.
அதன்படி மதுபானம் விற்பனை செய்யும் கடைகள் (சில்லரை, மொத்த விற்பனை) இரவு 11 மணி முதல் 11.30 மணி வரை சிறப்பு அனுமதி பெற ரூ.5 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மதுபார்களுடன் செயல்படும் மதுபான கடைகளுக்கு இரவு 11 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை செயல்பட ரூ.10 ஆயிரமும், சுற்றுலா பிரிவு' (ரெஸ்டோ, ஓட்டல்களுடன் இணைந்த மது பார்களுக்கு) ரூ.5 ஆயிரமும், ஓட்டல்களில் சிறப்பு அனுமதி பெற்று மதுவிருந்துடன் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்துபவர்களுக்கு ரூ.15 ஆயிரமும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எனவே கூடுதலாக மதுபான விற்பனை செய்ய விரும்புவோர் உரிய கட்டணம் செலுத்தி சிறப்பு அனுமதி பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
குடிமகன்களுக்கு கொண்டாட்டம் கடந்த காலங்களில் புத்தாண்டையொட்டி நள்ளிரவு 12 மணிவரை மட்டுமே மதுகடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. தற்போது 1 மணி வரை மதுகடைகள் செயல்பட கலால்துறை அனுமதி அளித்துள்ளதன் மூலம் குடிமகன்களுக்கு இந்த புத்தாண்டு மகிழ்ச்சியடைய செய்துள்ளது.






