என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுச்சேரியில் காற்று, இடி-மின்னலுடன் பலத்த மழை
    X

    புதுச்சேரியில் காற்று, இடி-மின்னலுடன் பலத்த மழை

    • மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் புகுந்தது.
    • பலத்த மழையால் புதுச்சேரியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் கடந்த மே 4-ந் தேதி தொடங்கி 28-ந் தேதியுடன் முடிவடைந்தது.

    கத்திரியின் முதல் நாளில் புதுச்சேரியில் 100.6 டிகிரியும். 12-ந் தேதி 102.6 டிகிரியும் பதிவானது. அதன் பிறகு பருவமழை காரணமாக இந்த ஆண்டு கத்திரியின் தாக்கம் பெரிதாக தெரியவில்லை. ஆனால் கத்திரி முடிந்த பிறகும் அனல் காற்றுடன் வெயில் வறுத்தெடுத்து வருகிறது. கடந்த 11 மற்றும் 22-ந் தேதிகளில் பலத்த மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து இருந்தது. அதன் பிறகு மீண்டும் தினமும் வெயில் அதிகரித்து காணப்பட்டது சராசரியாக 97 முதல் 99 டிகிரி வரை வெயில் வாட்டி எடுத்தது.

    இந்நிலையில் மாலை 6 மணிக்கு லேசாக தொடங்கிய மழை பின்னர் வெளுத்து வாங்கியது. பலத்த காற்று, இடி, மின்ன லுடன் சுமார் 45 நிமிடம் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. சற்று ஓய்ந்த நிலை யில், மீண்டும் இரவு 8.40 மணி முதல் அரை மணி நேரம் கனமழை பெய்தது.

    மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் புகுந்தது. சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. காமராஜர் சாலை, 45 அடி ரோடு உள்ளிட்ட முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியது. இதனால் அவ்வழியே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    100அடி ரோடு மேம்பாலத்தில் இருந்து வில்லியனூருக்கு செல்லும் புதிய பைபாஸ் ரோடு இறக்கத்தில் நெடுஞ்சாலை துறை சார்பில் வாகன ஓட்டிகளுக்காக வைக்கப்பட்டிருந்த வழிகாட்டி பெயர் பலகை சூறை காற்று மழையால் கீழே சரிந்து விழுந்தது. ஆனால் யாருக்கும்காயம் ஏற்படவில்லை. இதனால் அவ்வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    அதேபோல், மூலகுளம்-விழுப்புரம் மெயின் ரோட்டில் பெயர் பலகை உயர்மின் அழுத்த கம்பி மீது விழுந்தது. இது பற்றி தகவலறிந்த கோரிமேடு தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று சரி செய்தனர். பலத்த மழையால் புதுச்சேரியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.

    Next Story
    ×