என் மலர்
நீங்கள் தேடியது "டெல்லி காங்கிரஸ்"
- தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டம் நிறைவடைந்தது.
- சட்டமன்ற தேர்தல் மற்றும் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
டெல்லியில் ராகுல் காந்தி தலைமையில் நடந்த தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டம் நிறைவடைந்தது.
அந்த கூட்டத்தில், சட்டமன்ற தேர்தல் மற்றும் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
டெல்லியில் நடந்த தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகளிடம் தனித்தனியாக கருத்து கேட்டதாக தகவல் வெளியாக உள்ளது.
மேலும், கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசக்கூடாது என டெல்லியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் ராகுல்காந்தி அறிவுறுத்தியதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
இதுகுறித்து மேலும் கூறிய செல்வப்பெருந்தகை," கூட்டணி குறித்து சமூக ஊடகங்களில் பதிவுகளை இடக்கூடாது. தலைமை எடுக்கும் முடிவுக்கு மாநில காங்கிரஸ் கட்டுப்பட வேண்டும்" என்றும் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு ராகுல் அறிவுறுத்தினார்.
- டெல்லி மாநில காங்கிரசுக்கு இடைக்கால தலைவராக தேவேந்தர் யாதவ் நியமிக்கப்பட்டார்.
- இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளனர்.
புதுடெல்லி:
டெல்லி மாநில காங்கிரஸ் தலைவராக இருந்தவர் முன்னாள் டெல்லி மந்திரி அரவிந்த் சிங் லவ்லி. இவர் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.
இதற்கிடையே, கடந்த இரு நாட்களுக்கு முன் தனது கட்சியின் மாநில தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, டெல்லி மாநில காங்கிரசின் இடைக்கால தலைவராக தேவேந்தர் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்தார். இடைக்கால தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள தேவேந்தர் யாதவ் ஏற்கனவே பஞ்சாப் மாநில பொறுப்பாளராக உள்ளார்.
இந்நிலையில், டெல்லி மாநில இடைக்கால தலைவராக தேவேந்தர் நியமனம் செய்யப்பட்டதற்கும், ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம் எல் ஏக்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து விலகியுள்ளனர். இதுதொடர்பான கடிதத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.






