என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துருவ் ஜுரல்"

    • முதல் இன்னிங்சில் 175 பந்தில் 132 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
    • 2ஆவது இன்னிங்சில் 118 பந்தில் 134 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்தியா 'ஏ'- தென்ஆப்பிரிக்கா 'ஏ' அணிகளுக்கு இடையிலான அதிகாரப்பூர்வமற்ற 2ஆவது டெஸ்ட் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா 'ஏ' அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா 'ஏ' அணி முதலில் பேட்டிங் செய்தது.

    கே.எல். ராகுல் (19), அபிமன்யூ ஈஸ்வரன் (0), சாய் சுதர்சன் (17), தேவ்தத் படிக்கல் (5) ரிஷப் பண்ட் (24) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 86 ரன்கள் எடுப்பதற்குள் முக்கிய 5 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்தது.

    ஆனால் துருவ் ஜுரல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சதம் விளாசிய அவர் 175 பந்தில் 12 பவுண்டரி, 4 சிக்சருடன் 132 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருக்க இந்தியா 'ஏ' அணி முதல் இன்னிங்சில் 255 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    பின்னர் தென்ஆப்பிரிக்கா 'ஏ' அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. இந்தியா 'ஏ' அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது தென்ஆப்பிரிக்கா 'ஏ' அணி. ஆனால் கேப்டன் மார்கியூஸ் தனியொரு ஆளாக நின்று 134 ரன்கள் அடிக்க, தென்ஆப்பிரிக்கா 'ஏ' அணி 221 ரன்னில் சுருண்டது.

    34 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 'ஏ' அணி 2ஆவது இன்னிங்சை தொடங்கியது. இன்றைய 3ஆவது நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 382 ரன்கள் குவித்து இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இந்த இன்னிங்சிலும் துருவ் ஜுரல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 170 பந்தில் 127 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். ரிஷப் பண்ட் 54 பந்தில் 65 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

    இதனால் தென்ஆப்பிரிக்கா 'ஏ' அணிக்கு 417 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா 'ஏ'. பின்னர் 2ஆவது இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா 'ஏ', இன்றைய ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 25 ரன்கள் சேர்த்துள்ளது.

    நாளை கடைசி நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

    • இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 353 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • இந்தியா முதல் இன்னிங்சில் 307 ரன்கள் எடுத்தது.

    ராஞ்சி:

    இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நடந்துவருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 353 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஜோ ரூட் 122 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்திய அணி சார்பில் ஜடேஜா 4 விக்கெட்டும், அறிமுக வீரர் ஆகாஷ் தீப் 3 விக்கெட்டும், சிராஜ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் வெளியேறியதால் இந்திய அணி திணறியது.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் நிதானமாக ஆடிய ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்து 73 ரன்னில் ஆட்டமிழந்தார். சுப்மன் கில் 38 ரன்கள் எடுத்தார். இரண்டாம் நாள் முடிவில் இந்தியா 7 விக்கெட்டுக்கு 219 ரன்கள் எடுத்திருந்தது. துருவ் ஜுரல் 30 ரன்னும், குல்தீப் யாதவ் 17 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. பொறுமையாக ஆடிய துருவ் ஜுரல் அரை சதம் கடந்தார். 8வது விக்கெட்டுக்கு துருவ் ஜுரல், குல்தீப் யாதவ் ஜோடி 76 ரன்கள் சேர்த்த நிலையில் குல்தீப் யாதவ் 28 ரன்னில் அவுட்டானார். அதிரடி காட்டிய துருவ் ஜுரல் 90 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 307 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இங்கிலாந்து சார்பில் பஷீர் 5 விக்கெட்டும், டாம் ஹார்ட்லி 3, ஆண்டர்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ×