search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    துருவ் ஜூரல் அபாரம்: இந்தியா முதல் இன்னிங்சில் 307 ரன்களுக்கு ஆல் அவுட்
    X

    துருவ் ஜூரல் அபாரம்: இந்தியா முதல் இன்னிங்சில் 307 ரன்களுக்கு ஆல் அவுட்

    • இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 353 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • இந்தியா முதல் இன்னிங்சில் 307 ரன்கள் எடுத்தது.

    ராஞ்சி:

    இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நடந்துவருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 353 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஜோ ரூட் 122 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்திய அணி சார்பில் ஜடேஜா 4 விக்கெட்டும், அறிமுக வீரர் ஆகாஷ் தீப் 3 விக்கெட்டும், சிராஜ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் வெளியேறியதால் இந்திய அணி திணறியது.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் நிதானமாக ஆடிய ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்து 73 ரன்னில் ஆட்டமிழந்தார். சுப்மன் கில் 38 ரன்கள் எடுத்தார். இரண்டாம் நாள் முடிவில் இந்தியா 7 விக்கெட்டுக்கு 219 ரன்கள் எடுத்திருந்தது. துருவ் ஜுரல் 30 ரன்னும், குல்தீப் யாதவ் 17 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. பொறுமையாக ஆடிய துருவ் ஜுரல் அரை சதம் கடந்தார். 8வது விக்கெட்டுக்கு துருவ் ஜுரல், குல்தீப் யாதவ் ஜோடி 76 ரன்கள் சேர்த்த நிலையில் குல்தீப் யாதவ் 28 ரன்னில் அவுட்டானார். அதிரடி காட்டிய துருவ் ஜுரல் 90 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 307 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இங்கிலாந்து சார்பில் பஷீர் 5 விக்கெட்டும், டாம் ஹார்ட்லி 3, ஆண்டர்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    Next Story
    ×