என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை கூவம்"

    • இறந்து கிடந்த நபர் திருப்பதியை சேர்ந்த ஸ்ரீனிவாசலி என்கிற ராயுடு என்பது தெரிய வந்தது.
    • பேசின் பாலம் கூவம் அருகே வீசிவிட்டு சென்றதாகவும் கைதானவர்கள் வாக்கு மூலம் அளித்துள்ளனர்.

    சென்னை ஏழுகிணறு பகுதியில் எம்.எஸ்.நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பின்புறத்தில் கூவம் கரையோரமாக கடந்த 8ந் தேதி 25 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் எடுக்கப்பட்டது.

    இது பற்றி ஏழுகிணறு போலீசார் விசாரணை நடத்தி உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடலில் காயங்கள் இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணையை துவக்கிய போலீசார் சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    இதில் இறந்து கிடந்த நபர் திருப்பதியை சேர்ந்த ஸ்ரீனிவாசலி என்கிற ராயுடு என்பது தெரிய வந்தது.

    சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து துப்பு துலக்கியதில் திருப்பதியை சேர்ந்த சிவகுமார், கோபி, தாசர், சந்திரபாபு அவரது துனைவி வினுதா கோட்டா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

    சடலமாக மீட்கப்பட்ட ஸ்ரீனிவாசலி காளஸ்திரி ஜனசேனா கட்சி பொறுப்பாளர் வினுதா கோட்டா என்பவரின் வீட்டில், 15 வயதில் இருந்து வேலை செய்து வந்த நிலையில் தங்களிடம் பணியாற்றிவிட்டு எதிர்தரப்பை சேர்ந்தவர்களிடம் பணம் வாங்கி கொண்டு தங்களுக்கு துரோகம் இழைத்துவிட்டதாகவும்,

    இதன் காரணமாக காளஹஸ்தியில் உள்ள தங்களது ஷோ ரூம் குடோனில் கட்டி வைத்து அடித்து சித்ரவதை செய்ததாகவும் கைதானவர்கள் தெரிவித்துள்ளனர்.

    சித்ரவதை தாங்காத நிலையில் ஸ்ரீனிவாசலி கயிற்றால் கழுத்தை நெருக்கி உயிரை மாய்த்து கொண்டதாகவும், சடலத்தை மறைக்க காளஹஸ்தியில் இருந்து உடலை கடத்தி வந்து பேசின் பாலம் கூவம் அருகே வீசிவிட்டு சென்றதாகவும் கைதானவர்கள் வாக்கு மூலம் அளித்துள்ளனர்.

    தாங்கள் கொலை செய்யவில்லை, அடைத்து வைத்து சித்ரவதை மட்டுமே செய்தாகவும், அது தொடர்பான சி.சி.டி.வி. ஆதாரங்கள் ஷோ ரூமில் இருப்பதாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ள நிலையில் காளஹஸ்திக்கு ஏழுகிணறு போலீசார் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.

    கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் ஆந்திராவில் அரசியல் செல்வாக்குமிக்கவர்கள் என்று கூறப்படுகிறது. கைதாகி இருப்பவர்களில் வினுதா கோட்டா பவன் கல்யாணின் ஆதரவாளர், ஜனசேனா கட்சியின் காளஹஸ்தி பொறுப்பாளராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னையில் எங்கு பார்த்தாலும் வெள்ளமாக காட்சி அளிக்கிறது.
    • தொடர்ந்து மழை பெய்வதால் மழை நீர் வடியாமல் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    சென்னையில் நேற்று முதல் தொடர்ந்து 12 மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை மாநகரில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மழை பாதிப்பு குறித்து பேரிடர் மேலாண்மை துறை இயக்குநர் ராமன் கூறியதாவது:-

    புயல் சின்னம் கடலோர மாவட்டங்கள் அருகே நெருங்கி செல்வதால் கனமழை நீடித்து வருகிறது. அடையாறு கூவம் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதுபோல் அனைத்து கால்வாய்களிலும் மழைநீர் அதிகம் செல்கிறது.

    கடல் நீர் எதிர்த்து வருவதால் ஆறு-கால்வாய் தண்ணீர் மெதுவாகத்தான் கடலுக்குள் செல்கிறது. எனவே பொது மக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம். இதுவரை 153 முகாம்களில் 6,200 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    சென்னை பெருங்குடியில் அதிக பட்சமாக 29 செ.மீ மழை பதிவாகியுள்ளது. பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மீட்பு நிவாரண பணிகளுக்கு வீரர்கள் தயார் நிலையில் இருக்கிறார்கள். மழை தொடர்ந்து பெய்வதால் அனைத்து ரோடுகளிலும் மழைநீர் மெதுவாகதான் வடிகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×