என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஆந்திராவில் கொலை செய்து சென்னை கூவத்தில் உடலை வீசிய கொடூரம்- 5 பேர் கைது
    X

    ஆந்திராவில் கொலை செய்து சென்னை கூவத்தில் உடலை வீசிய கொடூரம்- 5 பேர் கைது

    • இறந்து கிடந்த நபர் திருப்பதியை சேர்ந்த ஸ்ரீனிவாசலி என்கிற ராயுடு என்பது தெரிய வந்தது.
    • பேசின் பாலம் கூவம் அருகே வீசிவிட்டு சென்றதாகவும் கைதானவர்கள் வாக்கு மூலம் அளித்துள்ளனர்.

    சென்னை ஏழுகிணறு பகுதியில் எம்.எஸ்.நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பின்புறத்தில் கூவம் கரையோரமாக கடந்த 8ந் தேதி 25 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் எடுக்கப்பட்டது.

    இது பற்றி ஏழுகிணறு போலீசார் விசாரணை நடத்தி உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடலில் காயங்கள் இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணையை துவக்கிய போலீசார் சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    இதில் இறந்து கிடந்த நபர் திருப்பதியை சேர்ந்த ஸ்ரீனிவாசலி என்கிற ராயுடு என்பது தெரிய வந்தது.

    சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து துப்பு துலக்கியதில் திருப்பதியை சேர்ந்த சிவகுமார், கோபி, தாசர், சந்திரபாபு அவரது துனைவி வினுதா கோட்டா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

    சடலமாக மீட்கப்பட்ட ஸ்ரீனிவாசலி காளஸ்திரி ஜனசேனா கட்சி பொறுப்பாளர் வினுதா கோட்டா என்பவரின் வீட்டில், 15 வயதில் இருந்து வேலை செய்து வந்த நிலையில் தங்களிடம் பணியாற்றிவிட்டு எதிர்தரப்பை சேர்ந்தவர்களிடம் பணம் வாங்கி கொண்டு தங்களுக்கு துரோகம் இழைத்துவிட்டதாகவும்,

    இதன் காரணமாக காளஹஸ்தியில் உள்ள தங்களது ஷோ ரூம் குடோனில் கட்டி வைத்து அடித்து சித்ரவதை செய்ததாகவும் கைதானவர்கள் தெரிவித்துள்ளனர்.

    சித்ரவதை தாங்காத நிலையில் ஸ்ரீனிவாசலி கயிற்றால் கழுத்தை நெருக்கி உயிரை மாய்த்து கொண்டதாகவும், சடலத்தை மறைக்க காளஹஸ்தியில் இருந்து உடலை கடத்தி வந்து பேசின் பாலம் கூவம் அருகே வீசிவிட்டு சென்றதாகவும் கைதானவர்கள் வாக்கு மூலம் அளித்துள்ளனர்.

    தாங்கள் கொலை செய்யவில்லை, அடைத்து வைத்து சித்ரவதை மட்டுமே செய்தாகவும், அது தொடர்பான சி.சி.டி.வி. ஆதாரங்கள் ஷோ ரூமில் இருப்பதாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ள நிலையில் காளஹஸ்திக்கு ஏழுகிணறு போலீசார் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.

    கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் ஆந்திராவில் அரசியல் செல்வாக்குமிக்கவர்கள் என்று கூறப்படுகிறது. கைதாகி இருப்பவர்களில் வினுதா கோட்டா பவன் கல்யாணின் ஆதரவாளர், ஜனசேனா கட்சியின் காளஹஸ்தி பொறுப்பாளராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×