என் மலர்
நீங்கள் தேடியது "வாழ்நாள் சாதனையாளர் விருது"
- 'தி ஃபியர்லெஸ் ஹைனா' (1979), 'ஹூ ஆம் ஐ?', 'போலீஸ் ஸ்டோரி' (1985) உள்ளிட்ட பல படங்களை அவர் இயக்கவும் செய்துள்ளார்.
- ஜாக்கி சான் கடைசியாக கடந்த 2023ம் ஆண்டு வெளியான ரைட் ஆன் படத்தில் நடித்திருந்தார்.
90ஸ் கிட்ஸ்களின் நாயகன் ஜாக்கி சானுக்கு 78வது லோகார்னோ திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் மைந்தனான ஜாக்கி சான் 90களில் சர்வதேச திரையுலகையே கலக்கிய ஆக்ஷன் ஹீரோவாக வளம் வந்தார். பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்துள்ள அவர், 'தி ஃபியர்லெஸ் ஹைனா' (1979), 'ஹூ ஆம் ஐ?', 'போலீஸ் ஸ்டோரி' (1985) உள்ளிட்ட பல படங்களை அவர் இயக்கவும் செய்துள்ளார்.
இந்நிலையில் கலையுலகில் அவரது பங்களிப்பை பாராட்டி அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது.
லொகர்னோ விழாவின் கலை இயக்குனர் ஜியோனா ஏ. நஸ்ஸாரோ கூறுகையில், "ஜாக்கி சானின் தாக்கம் மிகவும் ஆழமானது, குறிப்பாக ஹாலிவுட்டில் அதிரடி படங்கள் பார்க்கப்படும் மற்றும் தயாரிக்கப்படும் விதத்தை அவர் மாற்றினார்" என்று தெரிவித்தார். இந்த திரைப்பட விழா ஆகஸ்ட் 6 முதல் ஆகஸ்ட் 16 வரை லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ளது.
ஜாக்கி சான் கடைசியாக கடந்த 2023ம் ஆண்டு வெளியான ரைட் ஆன் படத்தில் நடித்திருந்தார். இப்படம் ஜப்பானில் அதிக வசூல் செய்த சீனத் திரைப்படமாகவும், 2023-ல் மலேசியாவில் அதிக வசூல் செய்த சீன படங்களில் டாப் 3 இடத்தையும் பிடித்தது.
தற்போது மீண்டும் ரைட் ஆன் படத்தை இயக்கிய லாரி யாங் இயக்கத்தில் ' தி ஷேடோஸ் எட்ஜ்' என்ற படத்தில் ஜாக்கி சான் நடித்திருக்கிறார். இப்படத்தின் ரிலீஸ் தேதி வரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- கலைத்துறையில் சாதனை படைத்த அலர்மேல்வள்ளி, எஸ்.வி.சேகர், அரவிந்தாக்ஷன், ராதாகிருஷ்ணன் ஸ்தபதி ஆகியோருக்கு விருது.
- பிரபல இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா சமத்துவம் எனும் தலைப்பில் இசைக்கச்சேரி நடத்தி பார்வையாளர்களை கவர்ந்திழுத்தார்.
கலைத்துறையில் சாதனைபடைத்தவர்களை கௌரவப்படுத்தும் விதமாக ப்ரவோக் கலைத்திருவிழா சென்னை சேத்துப்பட்டில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளியில் உள்ள சர் முத்தா வெங்கடசுப்பா ராவ் கலையரங்கத்தில் நடைபெற்றது.
இத்திருவிழாவில், கலைத்துறையில் சாதனை படைத்த அலர்மேல்வள்ளி, எஸ்.வி.சேகர், அரவிந்தாக்ஷன், ராதாகிருஷ்ணன் ஸ்தபதி ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பிரபல இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா சமத்துவம் எனும் தலைப்பில் இசைக்கச்சேரி நடத்தி பார்வையாளர்களை கவர்ந்திழுத்தார்.
நாட்டியக் கலைஞரான பத்மஸ்ரீ லீலா சாம்சன் அகத்தீ எனும் தலைப்பில் நடன விருந்து படைத்தார். மேலும் ஓ.எஸ் அருணனின் ஸ்பந்தமாத்ரிகா நடன நிகழ்ச்சி, முத்துசாமி தீட்சிதர் உருவாக்கிய குமுதக்ரியாவில் அர்த்தநாரீ எனும் சிவ பார்வதி நடனம், ரேவதி, மதுவந்தி மற்றும் கல்யாண வசந்தம் ஆகிய ராகங்களில் புகழ்பெற்ற வயலின் இசைக்கலைஞர் மேஸ்ட்ரோ லால்குடி ஜி. ஜெயராமன் இசையமைத்த தில்லானா இசைக்கச்சேரி ஆகியவை பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.
நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக, கலை வடிவங்களுக்காக உலக அரங்கில் தனக்கென தனி முத்திரை படைத்த பத்ம பூஷன் அலர்மேல் வள்ளி, கலைமாமணி எஸ்.வி சேகர், கணபூஷணம் வி. ஏ. அரவிந்தாக்ஷன் மற்றும் டி. ராதாகிருஷ்ண ஸ்தபதி ஆகியோருக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், சௌமியா அன்புமணி, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு சுந்தர், சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், தொழிலதிபரும் டோனி அண்டு கை அழகு நிலைய நிறுவனருமான சாம்பால் மற்றும் அஸ்வினி சாம்பால் ஆகியோர் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்தனர்.
விருது பெற்றபின் உரையாற்றிய எஸ். வி. சேகர், "கலைத்துறையில் இயங்கிகொண்டு இருக்கும்போதே விருது பெறுவது வரம் என்றும், இயங்கி முடித்த பின் வழங்கினால் அது ஓய்வூதியம். தற்போது வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது" என்று கூறினார்.
"பல்வேறு வேறுபாடுகள் நிறைந்தது இந்தியா எனவும், அதனை நாம் கட்டிக் காப்பாற்ற வேண்டும்" என்றும் கூறிய அன்புமணி ராமதாஸ், இந்த நிகழ்ச்சியில் "தகுதி உடையவர்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது" என்றார். மேலும், "நவீனத்துவம், முதலாளித்துவம் உள்ளிட்டவற்றை பின்பற்றும் இளைய தலைமுறையினர் நமது கலை, பண்பாடு உள்ளிட்டவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும்" என்றும் அவர் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த குஷ்பூசுந்தர், "இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும், வாழ்நாள் சாதனையாளர் விருது சாதாரண விஷயமல்ல. தலைசிறந்த கலைஞர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
- 2017-ம் ஆண்டு ஜூலை 13-ம் தேதி இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றார்.
- இந்திய அணி 2019-ம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி வரை சென்றது.
பிசிசிஐ ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டுகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது. கடந்த 2019-ம் ஆண்டுக்கு பிறகு கொரோனா தொற்றின் காரணமாக நிறுத்தப்பட்ட பிசிசிஐ விருதுகள், 4 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நடத்தப்பட்டது.
பிசிசிஐ-ன் சிறந்த விருதான சி.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது முதன் முதலில் 1994-ல் வழங்கப்பட்டது. இது முன்னாள் வீரருக்கு பிசிசிஐ வழங்கும் மிக உயர்ந்த கவுரவமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரிக்கு சி.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. கடந்த 1981-ம் ஆண்டு முதல் 1992-ம் ஆண்டு வரையில் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடியவர் ரவி சாஸ்திரி. 80 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 11 சதங்கள் மற்றும் 12 அரைசதங்கள் உள்பட 3830 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அதிகபட்சமாக 206 ரன்கள் அடங்கும். இதே போன்று 150 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 4 சதங்கள், 18 அரைசதங்கள் உள்பட 3108 ரன்களும் எடுத்துள்ளார். இதில் அதிகபட்சமாக 109 ரன்கள் அடங்கும்.
அதன் பிறகு கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 13-ம் தேதி இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றார். இவர், பயிற்சியாளராக இருந்த போது இந்திய அணி 2019-ம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி மற்றும் 2021-ம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் லீக் சுற்றுடன் வெளியேறியது. இதையடுத்து தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து ரவி சாஸ்திரி விலகினார். அதன் பின் கிரிக்கெட் வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார்.
- அதிக ரன்கள் எடுத்ததற்காக மந்தனாவும் விருது பெற்றார்.
- இரு தசாப்தங்களுக்கும் மேலாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார்.
மும்பையில் நடைபெற்ற பி.சி.சி.ஐ.-இன் வருடாந்திர விருது வழங்கும் விழாவில் முன்னாள் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கர்னல் சி.கே. நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
ஆண்கள் பிரிவில் 2023-24 ஆம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் (ஆண்கள்) பாலி உம்ரிகர் விருதை ஜஸ்பிரித் பும்ராவும், பெண்கள் பிரிவில் ஸ்மிருதி மந்தனாவும் வென்றனர். 2023-24 காலக்கட்டத்தில் பெண்கள் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்ததற்காக மந்தனாவும் விருது பெற்றார்.
இந்தியாவின் முதல் டெஸ்ட் கேப்டன் சி.கே. நாயுடு நினைவாக 1994-இல் நிறுவப்பட்ட வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற்ற 31வது வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆவார். 1989 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தனது 16 வயதில் அறிமுகமான சச்சின் டெண்டுல்கர் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார்.
இவரது 200 டெஸ்ட் மற்றும் 463 ஒருநாள் போட்டிகள் விளையாட்டு வரலாற்றில் எந்தவொரு வீரருக்கும் அதிகபட்சமாகும். அதே போல் இருவித கிரிக்கெட் போட்டிகளிலும் அவரது ரன்கள்: டெஸ்ட் போட்டிகளில் 15,921 மற்றும் ஒருநாள் போட்டிகளில் 18,426 ஆகும்.
இவர் மட்டுமின்றி சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த ரவிச்சந்திரன் அஷ்வினக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. மேலும், சிறந்த சர்வதேச அறிமுகம் (ஆண்கள்) பிரிவில் சர்பராஸ் கானுக்கும் பெண்கள் பிரிவில் ஆஷா ஷோபனாவுக்கும் விருது வழங்கப்பட்டது.
கடந்த 2023-24 ஆண்டு அதிக விக்கெட் எடுத்த தீப்தி சர்மாவுக்கும் விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ்-இல் நடைபெற்ற டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.






